
மருந்துகள் பலவிதமான உடல்நலக் கோளாறுகளை கட்டுப்படுத்தவும், நலம் மேம்படவும் உதவுகின்றன. ஆனால் சில மருந்துகள், தவறான முறையில் அல்லது அதிகமாக எடுத்துக்கொண்டால், உங்கள் சிறுநீரகங்களை பாதிக்கும் அபாயம் உள்ளது என்பதை அறியாமல் இருக்கிறோம்.
சிறுநீரகங்களின் பணி என்ன?
சிறுநீரகங்கள் என்பது விலா எலும்புகளின் கீழ், முதுகெலும்பின் இருபுறத்திலும் உள்ள முக்கியமான உறுப்பு. இவை ரத்தத்தில் உள்ள கழிவுகள் மற்றும் உப்புச் சத்துகளை வடிகட்டி, சிறுநீராக வெளியேற்றும் வேலை செய்கின்றன. நம்மால் எடுத்துக்கொள்ளப்படும் மருந்துகள் எல்லாம் சிறுநீரகங்களின் வழியாகவே வெளியேறும். தவறான மருந்து பழக்கங்கள் சிறுநீரகங்களின் செயல்பாட்டை குறைத்து, நீண்டகாலத்தில் புற்று நோய், சிறுநீரக செயலிழப்பு போன்ற தீவிர பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
Also Read : கிட்னியை சுத்தப்படுத்தி, ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் பழங்கள்! Fruits that detox kidneys!
இந்த 6 வகை மருந்துகளை பரிந்துரையின்றி தொடர்ந்து எடுத்தால் அபாயம்!
1. வலிக்காயம் குறைக்கும் மருந்துகள் (NSAIDs)
இபுபுரோபேன் (Ibuprofen), நாப்ரோக்சன் (Naproxen), அஸ்பிரின் போன்ற மருந்துகள் வலி, அழற்சி, காய்ச்சல் குறைக்கும் மருந்துகளாக பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவற்றை நீண்ட நாட்கள் எடுத்தால், சிறுநீரகங்களுக்குள் செல்லும் இரத்த ஓட்டத்தை குறைத்து, அவற்றின் செயல்பாட்டை பாதிக்கும்.
2. ஆண்டிபயாடிக்குகள் (Antibiotics)
தீவிர பாக்டீரியா தொற்றுகளை குணப்படுத்த சில ஆண்டிபயாடிக்குகள் அவசியம். ஆனால் ‘அமினோக்ளைக்கோசைடுகள்’ போன்ற வகைகள், அதிக அளவில் அல்லது நீண்ட காலம் எடுத்தால் சிறுநீரகங்களை பாதிக்கும். இதற்காக மருந்தளவினை கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.
3. உயர் இரத்த அழுத்த மருந்துகள் (ACE Inhibitors)
இந்த மருந்துகள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் Heart Failure போன்ற பிரச்சனைகளுக்கு வழங்கப்படுகின்றன. ஆனால், சிறுநீரக செயல்பாடு குறைவாக உள்ளவர்களுக்குப் இது பெரும் அபாயமாக இருக்கலாம். மேலும், வலிக்காயம் குறைக்கும் மருந்துகளுடன் சேர்த்து எடுத்தால், தாக்கம் அதிகரிக்கும்.
4. அமிலத்தை குறைக்கும் மருந்துகள் (Proton Pump Inhibitors – PPIs)
GERD(Gastroesophageal reflux disease – எதுக்களித்தல், நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம்), அல்சர் போன்ற புண்களுக்கு PPIs பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், நீண்ட காலம் எடுத்தால், இந்த மருந்துகள் சிறுநீரக செயலிழப்பு அல்லது நீரிழிவு நோய் போன்ற பிரச்சனைகளை உருவாக்கக்கூடும்.
5. சிறுநீர்வழியூட்டிகள் (Diuretics)
வாடர்பில்ஸ் என அழைக்கப்படும் இவை, உடலில் இருந்து அதிக நீரை வெளியேற்றும் பணியைச் செய்கின்றன. ஆனால் இதை நீண்டகாலம் எடுத்துக்கொண்டால், இது அதிகமாக நீரிழப்பு ஏற்படுத்தி, உடலில் உள்ள உப்புச்சத்துகள் மற்றும் மின்னியல் சமநிலையை குலைத்து, சிறுநீரகங்களை பாதிக்கக்கூடும்.
6. இயற்கை மூலிகை மருந்துகள் (Herbal Supplements)
மூலிகைச் சப்ளிமெண்ட்ஸ் இயற்கையானவை என்பதால் 100% பாதுகாப்பானவை என்று நினைக்கிறார்கள். இருப்பினும், மூலிகைச் சப்ளிமெண்ட்ஸ் மற்ற மருந்துகளுடன் வினைபுரிந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். உதாரணமாக, செயின்ட் ஜான்ஸ் வோர்ட் கருத்தடை மாத்திரைகள், இதய மருந்துகள் மற்றும் சில மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள் உள்பட பல மருந்துகளின் செயல்திறனை மூலிகைச் சப்ளிமெண்ட்ஸ் குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, மூலிகை சப்ளிமெண்ட்ஸை கருத்தில் கொண்டால், அந்த நிறுவனத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்வதும், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதும் முக்கியம்.
Also Read : சிறுநீரக கல் ஏற்படுவது எப்படி? கிட்னி ஸ்டோன் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய, தவிர்க்க உணவுகள்!
மருந்துகளா? இயற்கை வழிகளா?
வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவு கட்டுப்பாடு, நீர் அருந்தும் பழக்கம், உடற்பயிற்சி, தியானம், மூச்சுப்பயிற்சி போன்ற இயற்கையான வழிகள் சில நேரங்களில் சிறந்த தீர்வாக இருக்கலாம். ஆனால், மருந்துகளை நிறுத்துவது, மாற்றுவது போன்ற நடவடிக்கைகள் மருத்துவரின் ஆலோசனை இன்றி செய்யக்கூடாது.
Bottom Line :
உடல் நலம் குன்றியவர்களுக்கு மருந்துகள் ஒரு பரிசு போல இருப்பினும், அவற்றின் தவறான பயன்பாடு சிறுநீரகங்களை பாதிக்கக்கூடியவை என்பதை உணர வேண்டும். வலிக்காய மருந்துகள், ஆண்டிபயாடிக்குகள், PPIs, diuretics, ACE inhibitors, மூலிகை மருந்துகள் – இவை அனைத்தும் பரிந்துரைக்கப்பட்ட அளவில், மருத்துவ கண்காணிப்புடன் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சிறுநீரகங்கள் உங்கள் உடலின் பாதுகாவலர்கள். அவற்றை பாதுகாப்பதற்கான கவனம், உங்கள் நலத்திற்கான முதல்படி!
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry