
இன்றைய பிஸியான வாழ்க்கையில் பல வகையான உணவு பொருள்களின் ஆயுளை நீட்டிக்க ஃபிரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கிறோம். பழங்கள், காய்கறிகள், வெண்ணெய், பால், மட்டுமல்லாது, சமைத்தப் பொருட்களையும் பிரிட்ஜில் வைத்து பாதுகாக்கும் பழக்கம் நம்மிடையே உள்ளது.
வீட்டு சாப்பாடு தான் உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் வீட்டில் ஒரு வேளையில் சமைக்கும் உணவுகள், ஒரே வேளையில் முற்றிலும் காலியாவதில்லை. மிஞ்சிய உணவுகளை பலரும் வீட்டு ஃப்ரிட்ஜ்ஜில் எடுத்து வைத்து, மறுநாளோ அல்லது 2-3 நாட்கள் வைத்தோ சூடேற்றி சாப்பிடுகிறோம்.
Also Read : கொண்டைக்கடலை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
குறிப்பிட்ட சில உணவுகளை சமைத்த பின், சூடாக உடனே சாப்பிட்டுவிடுவது தான் நல்லது. அதைவிட்டு, அந்த உணவுகளை எடுத்து வைத்து மறுநாள் அல்லது 2-3 நாட்கள் கழித்து சூடேற்றி உட்கொண்டால், பின் அது ஃபுட் பாய்சனாகி, உடலுக்கு கேடு விளைவித்து, சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். பிரிட்ஜில் வைப்பதால், சில பொருட்களின் சுவை, ஊட்டச்சத்து ஆகிய இரண்டும் காலியாகி விடும். பிரிட்ஜில் வைக்கவே கூடாத உணவு பொருட்கள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம்.
அதிக புரோட்டீன் நிறைந்த உணவுகள்
அதிக புரோட்டீன் நிறைந்த உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்து உட்கொள்ளும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் நுண்கிருமிகளுக்கு புரோட்டீன் உணவுகள் மிகவும் பிடிக்கும். எனவே இறைச்சிகள், மீன், பால், சீஸ், முட்டை போன்றவற்றை பிரிட்ஜ்ஜில் வைத்து சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும். அதுவும் குளிர்ச்சியான நிலையில் உள்ள இறைச்சிகளில் லிஸ்டீரியா போன்ற பாக்டீரியாக்கள் செழித்து வளரும்.
எனவே ஃப்ரிட்ஜில் இறைச்சிகளை வைக்கும் போது, அவற்றை முறையாக சேமித்து வைக்க வேண்டும். இதனால் மற்ற உணவுகளில் மாசு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். முடிந்தவரை புரோட்டீன் உணவுகளை பிரிட்ஜில் நீண்ட காலம் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
Also Read : பல் கூச்சத்தால் எதுவுமே சாப்பிட முடியவில்லையா? விடுபட உதவும் டாப் சிம்பிள் டிப்ஸ்! Tooth Sensitivity Relief!
மீந்து போன உணவுகள்
சமைத்து மீந்து போன உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவது நல்லதல்ல. சமைத்த உணவுகளை ஃப்ரிட்ஜில் சில நாட்கள் வைத்திருக்கும் போது, அதன் மேல் பூஞ்சை, பாக்டீரியா போன்றவை வளரத் தொடங்கிவிடும். எனவே சமைத்த உணவுகளை 3-4 நாட்கள் வரை வைத்து சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.
கீரைகள்
கீரையை ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு, அதை எடுத்து சூடுபடுத்தி சாப்பிடவே கூடாது. கீரைகளை ஃப்ரிட்ஜில் வைத்தால், அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் அழிந்துவிடும். மேலும், அதில் உள்ள நைட்ரேட் சிதைந்து அதன் மூலம் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம்.
சாதம்
பெரும்பாலான வீடுகளில் மீந்து போன சாதத்தை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து, அடுத்த வேளை எடுத்து சூடுபடுத்தி சாப்பிட்டு வருகின்றனர். இதை பாதுகாப்பானதாகவும் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மையல்ல. சாதத்தை ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கும் போது, அது பேசிலஸ் செரியஸைக் கொண்டிருக்கலாம். இந்த பாக்டீரியாவானது வெப்பத்தை எதிர்க்கும் நச்சுக்களை உருவாக்கும். இந்நிலையில் ஃப்ரிட்ஜில் வைத்த சாதத்தை சூடேற்றி உட்கொள்ளும் போது, அதன் விளைவாக ஃபுட் பாய்சன் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

இட்லி, தோசை மாவு
பொதுவாக வீடுகளில் ஒரு வாரத்துக்குத் தேவையான இட்லி, தோசை மாவை அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுகிறார்கள். புதிய மாவில் இட்லி செய்வதுதான் நல்லது. ஒரு வாரமாக ஃப்ரிட்ஜில் உள்ள மாவை எடுத்து இட்லி, தோசை செய்வது ஆபத்தை விளைவிக்கும். நாள்பட்ட உணவு எதுவுமே உயிர்தன்மையுடன் இருப்பது கிடையாது. இந்த மாவிலும் உயிர்தன்மை இருக்காது. ஈஸ்ட் மட்டுமே இருக்கும், புளித்துக்கொண்டே போகும். வயிற்றிலும் புளிக்கும்.
மீன்
மீன்களை ஃப்ரிட்ஜில் வைப்பது நல்லதல்ல. ஏனெனில் மீன்கள் வேகமாக அழுகக்கூடியவை மற்றும் உணவு மூலம் பரவும் நோய் அபாயத்தை ஏற்படுத்தும். அதுவும் சரியான முறையில் மற்றும் சரியான வெப்பநிலையில் சேமிக்கப்படாவிட்டால், அது ஹிஸ்டமைன் பாய்சன் ஏற்பட வழிவகுக்கும். எனவே முடிந்தவரை மீன்களை வாங்கியதும் உடனே சமைத்து சாப்பிட முயற்சி செய்யுங்கள்.
Also Read : ஆட்டோவுக்கு மூன்று சக்கரம் இருக்க இதுதான் காரணமாம்! பொறியாளர்கள் சொல்வது என்ன?
தக்காளி
தக்காளியை ஃபிரிட்ஜில் வைக்க கூடாது. ஜெர்மனியில் உள்ள Göttingen பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழுவின் கூற்றுப்படி, தக்காளியில் லைகோபீன் உள்ளது. மேலும் இதில் உள்ள கரோட்டினாய்டு சிவப்பு நிறத்தை அளிக்கிறது. தக்காளியை குளிரூட்டும்போது லைகோபீனின் கட்டமைப்பை மாற்றி, அது டோமடைன் கிளைகோல்கலாய்டு எனப்படும் கிளைகோல்கலாய்டாக மாறுகிறது. இந்த டொமடைன் கிளைகோல்காய்டு உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே தக்காளியை வெளியே வைக்க வேண்டும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை ஒருபோதும் ஃபிரிட்ஜில் வைக்க கூடாது. பாதியாக வெட்டிய உருளைக்கிழங்கை ஃப்ரிட்ஜில் வைத்தாலும் அது தவறு. குளிர்ந்த வெப்பநிலை காரணமாக, உருளைக்கிழங்கு மாவுச்சத்து சர்க்கரையாக மாறும், இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. மேலும் உருளைக்கிழங்கு முளைக்க தொடங்கிவிடும் என்பதால் வெளியே காற்றோட்டமாக, ஈரப்பதம் குறைவாக உள்ள இடத்தில் வைக்க வேண்டும்.

வெங்காயம்
பலரும் வெங்காயத்தை ஃபிரிட்ஜில் வைத்திருப்பார்கள். வெங்காயத்தை பிரிட்ஜில் வைப்பதன் மூலம், ஈரப்பதத்தை அது உறிஞ்சுகிறது. இந்த வெங்காயத்தை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. மேலும் ஃபிரிட்ஜில் உள்ள குளிர்ச்சியின் காரணமாக, வெங்காயத்தில் உள்ள நொதிகள் செயல்படுத்தப்படுகின்றன, இதன் காரணமாக வெங்காயம் விரைவாக கெட்டுவிடும்.
பூண்டு
பூண்டை தோலுரித்து ஃபிரிட்ஜில் சேமித்து வைக்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது. குளிர்ந்த வெப்பநிலையில் உள்ள பூண்டில் இருந்து வேர்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன. தரம் குறைவதால், அதன் சுவையும் குறைகிறது. பூண்டை சேமிக்க விரும்பினால், உரித்த பூண்டை காற்று புகாத டப்பாவில் வைக்கவும். டப்பாவை உலர்ந்த மற்றும் காற்றோட்டமான இடத்தில் வைக்கவும். 2-3 நாட்களுக்கு ப்ரெஷ்ஷாகவே இருக்கும்.
வாழைப்பழங்கள்
வாழைப்பழங்களை ஃபிரிட்ஜில் வைத்தால் அவற்றின் புத்துணர்ச்சியையும், சுவையையும் குறைக்கலாம். வாழைப்பழங்களை உலர்ந்த மற்றும் காற்றோட்டமாக இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும். வாழைப்பழங்களை காற்றோட்டமாக வைத்திருந்தாலே அழுகாமல் இருக்கும். ஃபிரிட்ஜில் வைத்தால் 2 நாட்களுக்கு பிறகு அழுக தொடங்கிவிடும்.
மசாலாப் பொருட்கள்
பொடிக்கப்படாத முழு மசாலாப் பொருட்களை பிரிட்ஜில் வைத்தால், அவை ஈரப்பதத்தை இழுக்கும். இதன் காரணமாக அவற்றின் சுவை மணம் இரண்டும் பாதிக்கப்படலாம்.
பிரெட்
பிரெட் போன்ற பேக்கரி வகை உணவுகள் ஃபிரிட்ஜில் வைக்க உகந்தவை அல்ல. சாதாரண தட்பவெப்பத்தில் வைத்திருந்தால் தான் இதன் சுவையும் மிருதுவான தன்மையும் நீடிக்கும். பிரிட்ஜில் வைத்தால் சுவையும் கெட்டு, கெட்டியாகி விடும்.
உலர் பழங்கள்
உலர் பழங்களை பிரிட்ஜில் வைக்கும் பழக்கம் பெரும்பாலானோருக்கு இருக்கும். எனினும் இதனை குளிர்சாதன பெட்டியில் வைக்க கூடாது என்கின்றனர். குளிர்ச்சி மற்றும் ஈரப்பதம் உலர் பழங்களின் சுவையை பாதிக்கும்.
முட்டை
முட்டையை பிரிட்ஜில் வைப்பது முற்றிலும் தவறு. அதன் சுவை கெட்டு விடும். மேலும், பிரிட்ஜில் வைத்து வெளியில் எடுக்கப்பட்ட பின் முட்டை சீக்கிரம் கெடத் தொடங்கும். இவை சாப்பிடுவதற்கு ஆரோக்கியமற்றவை.
தேன்
இயற்கையிலேயே கெட்டுப் போகாத தன்மை கொண்ட தேனை, சாதாரண தட்பவெப்பநிலையில் இறுக மூடி வைத்தாலே போதும். ஆனால், ஃபிரிட்ஜில் குளிர்ந்த சூழலில் வைத்திருக்கும்போது, அதன் மணம், குணம் சுவை உபயோகிக்க முடியாத அளவுக்கு மாறிவிடும்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை நம் உணவில் சேர்த்துக் கொள்ளும்போது அவை உடல் ஆரோக்கியத்தை மிகவும் மோசமாக்குகிறது. தினசரி பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளை உண்பவர்கள் இதய நோய் ஏற்படும் அதிக வாய்ப்பைக் கொண்டிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேலும் நீரிழிவு நோய் போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம். எனவே ஃப்ரிட்ஜில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளை சேமித்து வைத்து தினசரி உட்கொள்வதை தவிர்க்கவும்.
Disclaimer : General info, not professional advice. Storage may vary. Consult experts for safety concerns.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry