
ஜலதோஷம் வந்துவிட்டால் பலருக்கு மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கு அடைப்பு ஏற்படும். நாசித் துவாரங்களை சிந்துவது சளியை வெளியேற்றுவதற்கு சரியான வழியாக தோன்றலாம். ஆனால் அது ஒட்டுமொத்த நல்வாழ்வில் பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
மூக்குத் துவாரங்களின் மென்மையான புறணியை எரிச்சலடையச் செய்து, வீக்கம் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும். மூக்கை வேகமாக சிந்துவதால் ஏற்படும் பல்வேறு ஆபத்துகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். அதுமட்டுமின்றி இதைச் செய்வதற்கான சரியான வழி மற்றும் இந்த காய்ச்சல் பருவத்தில் உங்களுக்கு நிவாரணம் அளிக்க உதவும் சில மாற்று வழிகளைப் பற்றியும் பார்ப்போம்.
Also Read : உப்பு சேர்த்து மோர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு கெட்டதா? என்னென்ன பாதிப்புகள் வரலாம்?
உங்கள் மூக்கை வலுக்கட்டாயமாக சிந்துவது சளியை சைனஸுக்குத் தள்ளி, தொற்றை மோசமடையச் செய்யும். உங்கள் மூக்கை சிந்தும்போது அதிகப்படியான சக்தியைப் பயன்படுத்துவது சைனஸிலிருந்து யூஸ்டாசியன் குழாய் வழியாக திரவம் பயணிக்க வழிவகுக்கும். இது மூக்கின் பின்புறத்தை நடுத்தரக் காதுடன் இணைக்கும் ஒரு குறுகிய பாதையாகும். இந்த கூடுதல் அழுத்தம் மற்றும் திரவம் காரணமாக, காதில் தொற்று ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.
மூக்கை பாதுகாப்பாக சிந்துவது எப்படி?
எதிர்மறை விளைவுகளைத் தவிர்க்க, பெரும்பாலான நிபுணர்கள் உங்கள் மூக்கை சிந்தும்போது மென்மையான அணுகுமுறையை பரிந்துரைக்கின்றனர். இதை நீங்கள் எவ்வாறு சரியாகச் செய்யலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.
- உங்கள் நாசித் துவாரத்தை ஒற்றை விரலால் மெதுவாக அழுத்தி மூடவும்.
- அடுத்த கட்டமாக, அதிகப்படியான சக்தி இல்லாமல் காற்று மற்றும் சளியை வெளியேற்ற மற்ற நாசியை சிந்த வேண்டும்.
- உங்கள் மூக்கு மிகவும் அடைப்பாக இருந்தால், சளியை தளர்த்த நீராவியில் ஆவி பிடிக்கலாம்.
- உங்கள் நாசித் துவாரங்களைத் துடைக்க மென்மையான, ஈரப்பதமான டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- கற்றாழை போன்ற பொருட்கள் கொண்ட டிஷ்யூ பேப்பர்கள் மூக்கைச் சுற்றியுள்ள எரிச்சலைத் தடுக்க உதவும்.
சளி பிடித்த பிறகு மூக்கைச் சிந்துவதற்கு சில மாற்று வழிகள்
- சளி, பாக்டீரியா மற்றும் பிற எரிச்சலூட்டும் பொருட்களை வெளியேற்ற, உப்பு நீர் கரைசல் உதவும். இது மூக்கடைப்பிலிருந்து விடுபடவும் உதவும்.
- நாசி நெரிசல் நீக்கிகள் மூக்குப் பாதைகளில் வீக்கத்தைக் குறைக்க உதவும். இது சுவாசத்தை எளிதாக்கும் அதே வேளையில், இந்த தயாரிப்புகளை அடிக்கடி பயன்படுத்தக்கூடாது.
- நீராவியுடன் சேர்த்து சூடான அழுத்தங்கள் சளியை தளர்த்தும், இதனால் மூக்கை சீந்தாமல் இயற்கையாகவே அதை அகற்ற முடியும்.
நீங்கள் தொடர்ந்து பல நாட்களாக சளியால் அவதிப்பட்டால், இந்த முறைகளை முயற்சிக்கும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது.
Disclaimer : This information is for educational purposes only and is not medical advice. Consult a healthcare professional for diagnosis and treatment.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry