
அசைவ உணவுகளை ஏன் சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்துகொண்டு, சனிக்கிழமைகளில் ஏன் தவிர்க்க வேண்டும் என்பதற்கான பதிலைப் பார்க்கலாம். நமது உடலுக்குத் தேவையான புரதச் சத்துகள் அசைவ உணவுகளில் தான் எளிதாகக் கிடைக்கும். ஒரு கிலோவுக்கு 0.83 கிராம் புரதம் நமக்குத் தேவைப்படும். அதாவது ஒருவர் 65 கிலோ எடை கொண்டவராக இருந்தால் அவருக்கு 54 கிராம் புரதம் தேவைப்படும். இது அசைவ உணவு மூலமும் கிடைக்கும்.
நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் 9 அடிப்படை அமினோ ஆசிட்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பொதுவாக அசைவ உணவு சாப்பிடுவோருக்கு இந்த 9 அமினோ ஆசிட்கள் அதில் இருந்தே கிடைத்துவிடும். தானியங்களில் 3 வகையான (lysine, threonine, tryptophan) அமினோ ஆசிட்கள் இருக்காது. பயிர்களில் 1 அமினோ ஆசிட் (methionine) இருக்காது. எனவே, இரண்டையும் சேர்ந்து சாப்பிட வேண்டும். குறிப்பாகத் தானியங்களை 3 பங்கு எடுத்தால் பயிர் வகைகளை 1 பங்கு என சாப்பிட வேண்டும். அப்போது தான் உடலுக்குத் தேவையான புரதச் சத்துகள் கிடைக்கும்.
தினசரி எவ்வளவு இறைச்சி சாப்பிடலாம் என்பது நபரின் உடல்நிலை, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் இறைச்சி வகையைப் பொறுத்து மாறும். பொதுவாக, சுகாதார நிபுணர்கள் ஒரு நாளைக்கு 85-113 கிராம் இறைச்சி சாப்பிடலாம் என்கிறார்கள். வாரத்தில் 3-4 முறை 125-150 கிராம் (மூல எடை) சிவப்பு இறைச்சியை சாப்பிடலாம். பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
சனிக்கிழமைகளில் அசைவ உணவுகளை நம்மில் பெரும்பாலானோர் தவிர்ப்பதை பார்க்க முடிகிறது. இதன் பின்னணியில் அறிவியல் காரணம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அசைவ உணவுகளைப் பற்றி பல விமர்சனங்கள் இருந்தாலும், சைவ உணவுகளில் இல்லாத சத்துக்கள் அசைவத்தில் இருப்பதாக அறிவியல் கூறுகிறது. இறைச்சியில் புரதமும் மற்ற சில சத்துக்களும் இருக்கின்றன. இவற்றை அளவோடு உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியமாக வழ முடியும்.
கோழி மற்றும் மீனில் பல வகையான உணவு வகைகள் உள்ளன. இவை அனைத்தும் நாவுக்கு சுவையாக இருப்பது மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. எனவே இறைச்சி என்பது பலரின் விருப்பமான உணவாகும்.
சிக்கன் பிரியாணி, சிக்கன் கபாப், சில்லி சிக்கன், சிக்கன் பெப்பர் ட்ரை, சிக்கன் லாலிபாப், சிக்கன் மஞ்சூரி, சிக்கன் ப்ரைடு ரைஸ், மட்டன் சாம்பார், மட்டன் ஃப்ரை, மட்டன் சாப்ஸ், கீமா, ஃபிஷ் ஃப்ரை, மீன் சாம்பார், ஃபிஷ் கபாப் என அசைவத்தில் பல வெரைட்டி உணவுகள் உள்ளன.
Also Read : இரவு படுத்தவுடன் தூங்க உதவும் டிப்ஸ்! பகலில் இந்த பழக்கத்தை பின்பற்றுங்கள்..! டீப் ஸ்லீப் உறுதி!
ஞாயிற்றுக் கிழமைகளில் ஓய்வில் இருக்கும் பெரும்பாலான அசைவ பிரியர்கள் இறைச்சியை வாங்குவதற்கு மறப்பது கிடையாது. ஞாயிற்றுக் கிழமைகளில் இறைச்சிக் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருப்பதை பார்க்க முடியும்.
பெரும்பாலானவர்கள் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை அசைவம் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் சனிக்கிழமை மட்டும் அசைவத்தைத் தொட மாட்டார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இதற்குப் பின்னால் ஒரு அறிவியல் காரணம் உள்ளது. ஏனெனில் இந்த நேரத்தில் பூமியில் நிலவின் தாக்கத்தால் நமது செரிமான அமைப்பு சற்று பலவீனமடைகிறது. இதனால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். மேலும் பல உடல் நலப் பிரச்சனைகள் வரலாம்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry