• Home
  • தமிழகம்
  • Exclusive
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சமையல்
  • அழகு குறிப்பு
  • நேர்காணல்
  • மருத்துவம்
Search
Logo
Logo
Monday, June 9, 2025
  • ABOUT VELSMEDIA
  • CONTACT US
  • DISCLAIMER
  • PRIVACY POLICY
  • TERMS AND CONDITIONS
Facebook
Youtube
Twitter
Instagram
Logo
  • Home
  • தமிழகம்
  • Exclusive
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சமையல்
  • அழகு குறிப்பு
  • நேர்காணல்
  • மருத்துவம்
  • Home
  • தமிழகம்
  • Exclusive
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சமையல்
  • அழகு குறிப்பு
  • நேர்காணல்
  • மருத்துவம்
Home தமிழக செய்திகள் ‘ஒரே நாடு, ஒரே மாணவர்’ அடையாள அட்டை! மத்திய அரசின் ஆக்டோபஸ் கரங்களை ஒடுக்க தமிழக...
  • தமிழக செய்திகள்

‘ஒரே நாடு, ஒரே மாணவர்’ அடையாள அட்டை! மத்திய அரசின் ஆக்டோபஸ் கரங்களை ஒடுக்க தமிழக அரசுக்கு ஐபெட்டோ வேண்டுகோள்!

By
Velsmedia Team
-
March 18, 2025
0
80
Facebook
Twitter
Pinterest
WhatsApp
    AIFETO Secretary V. Annamalai rejects the Centre's One Nation One Student ID scheme in Tamil Nadu, citing concerns over student rights. Read more about their opposition.

    ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, தேசிய கல்விக் கொள்கையை உறுதியுடன் ஏற்க மறுப்பதை வரவேற்கிறோம். அதே நிலைப்பாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாட்டில் இடமே இல்லை என முதலமைச்சர் பிரகடனம் செய்திருப்பது உள்ளபடியே முழுமையான மனநிறைவைத் தருகிறது.

    AIFETO Annamalai Opposes One Nation One Student ID in TN.

    மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் நிதியை விடுவிக்க மாட்டோம் என மத்திய அரசு கூறியும், முதலமைச்சர் தனது நிலைப்பாட்டில் இருந்து சற்றும் பின்வாங்காதது பாராட்டத்தக்கது. அந்த வகையில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தையும் தமிழ்நாடு அரசு வீரியத்துடன் எதிர்த்து வருகிறது.

    இவ்வாறு மத்திய அரசின் பல முனைத் தாக்குதல்களுக்கு இடையே, தேசிய கல்விக் கொள்கையின் அங்கமான ‘ஒரே நாடு, ஒரே மாணவர்’ அடையாள அட்டை திட்டம் தமிழ்நாட்டில் உள்ள சில தனியார் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டு வருவதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் (DT Next) வெளியாகியிருக்கும் செய்தி அதிர்ச்சியைத் தருகிறது.

    Also Read : NEP 2020 அங்கமான ‘ஒரே நாடு, ஒரே மாணவர்’ அடையாள அட்டை! சத்தமில்லாமல் அமல்படுத்துகிறதா பள்ளிக் கல்வித்துறை?

    “‘ஒரே நாடு, ஒரே மாணவர்’ அடையாள அட்டை திட்டமானது ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்படும் தனித்துவமான 12 இலக்க அடையாள எண்ணாகும். இதில் ஆரம்பக் கல்வியிலிருந்து, கல்லூரி நிலை வரை சம்பந்தப்பட்ட மாணவரது கல்வித் தகவல்கள் சேமிக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் கூறுகிறது.”

    ஒரே நாடு, ஒரே மாணவர்’ அடையாள அட்டை திட்டம் எனப்படும் நிரந்தர கல்விக் கணக்கு பதிவுக்காக (APAAR – Automated Permanent Academic Account Registry) ஆதார் உள்ளிட்ட விவரங்களைத் தருமாறு தனியார் பள்ளி நிர்வாகங்கள் வற்புறுத்துவதாகவும், ஒப்புதல் கடிதம் தருமாறு அழுத்தம் கொடுப்பதாகவும் பெற்றோர் கூறுவதாக அந்தச் செய்தி விவரிக்கிறது. இது பெற்றோரின் தனியுரிமையை மீறுவதாக இருக்காதா? மத்திய அரசின் உத்தரவின்படி இந்தத் திட்டம் நடைமுறையில் கொண்டுவரப்படுதாக பள்ளி நிர்வாகங்கள் கூறியுள்ளன.

    மாநில அரசின் உத்தரவோ, வழிகாட்டுதலோ இல்லாமல், புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்தும் வகையில், சில தனியார் பள்ளிகள் ‘ஒரே நாடு, ஒரே மாணவர்’ அடையாள அட்டை திட்டத்தை அமல்படுத்துகிறதா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அப்படி, மாநில அரசு உத்தரவோ, பள்ளிக் கல்வித்துறையின் வழிகாட்டுதலோ இல்லாமல் பள்ளிகள் இத்தகைய செயல்பாட்டை தொடங்கியிருந்தால், அது ஆபத்தான அறிகுறிதான். இந்த தைரியத்தை பள்ளி நிர்வாகங்களுக்கு கொடுத்தது யார்?

    ஏனென்றால், மாநில அரசை புறந்தள்ளிவிட்டு, தமிழ்நாடு கல்வித்துறையை மத்திய அரசு கபளீகரம் செய்வதன் தொடக்கமாகவே இந்த நடவடிக்கை கருதப்படும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலேயே, மத்திய அரசின் திட்டத்தை அமல்படுவத்துவதை வேறு எப்படி கருத முடியும்? மாணவர்களின் தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரப்போவது மத்திய அரசா? மாநில அரசா? என பெற்றோர் கேட்கிறார்கள். அவர்களது அச்சம் நியாயமானதே.

    Also Read : உரிமைக்கு குரல் கொடுக்க கட்டுப்பாடு! ஊழலுக்கு விதித்தளர்வு… எச்சரிக்கையா? அச்சுறுத்தலா..? ஐபெட்டோ பளீர் கேள்வி!

    தேசிய கல்விக் கொள்கையை (NEP 2020) எதிர்க்கும் தமிழக அரசு, தனியார் பள்ளிகள் மாணவர்களின் தரவுகளை மத்திய அரசிடம் தருவவதற்கு அனுமதி வழங்கியிருக்காது என்று நம்புகிறோம். இருந்தாலும் இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    மாணவர்கள் மற்றும் பெற்றோரின் தனியுரிமையை பாதுகாக்க, APAAR அடையாளத் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது. தனியார் பள்ளிகளின் தவறான செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் இந்த விஷயத்தில் தனிக் கவனம் செலுத்துவதுடன், அவசர அவசியமாக செயல்பட்டு அதிகாரிகளுக்கு உரிய உத்தரவை பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

    Post Views: 1,738
    • TAGS
    • AIFETO
    • AIFETO ANNAMALAI
    • AIFETO Annamalai against central government
    • AIFETO opposes Centre's One Nation One Student Identity Card scheme
    • AIFETO protest Tamil Nadu
    • AIFETO- ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS
    • APAAR – Automated Permanent Academic Account Registry
    • APAAR ID Registration
    • APAAR அடையாள அட்டை
    • Central Government Schemes
    • Centre's student ID policy
    • DigiLocker for students
    • Education policy Tamil Nadu
    • Impact of central government schemes on education
    • National Education Policy (NEP)
    • NEP 2020
    • NEP student tracking system
    • One Nation One Student ID
    • One Nation One Student Identity Card
    • One student ID card controversy
    • Opposition to student ID scheme
    • School ID system Tamil Nadu
    • Student data privacy
    • Student ID scheme
    • Student Identity Card
    • Student rights Tamil Nadu
    • Tamil Nadu
    • Tamil Nadu education reforms
    • Tamil Nadu Introduces Unique Student ID Under NEP Policy
    • Tamil Nadu student ID scheme
    • The 'One Nation One Student Identity Card' scheme which is part of the National Education Policy was implemented in Tamil Nadu
    • TN Schools Adopt National Student ID System Amid NEP Push
    • Unique student identification number
    • ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் வா.அண்ணாமலை
    • ஒரே அடையாள அட்டை’
    • ஒரே நாடு ஒரே மாணவர் அடையாள அட்டை
    • மாணவர்களுக்கு APAAR ID CARD! ‘ஒரே நாடு
    • வா.அண்ணாமலை
    Facebook
    Twitter
    Pinterest
    WhatsApp
      Previous article“One Nation, One Student” ID Card Scheme Ruffles Feathers in Tamil Nadu: AIFETO Calls For State Intervention!
      Next articleபாத்திரம் துலக்கும் ஸ்பாஞ்சில் மறைந்திருக்கும் ஆபத்து..! எத்தனை நாட்களுக்கு ஸ்பாஞ்சை பயன்படுத்தலாம்?
      Velsmedia Team
      Velsmedia Team
      antalya bayan escort
      Logo

      வேல்ஸ் மீடியா செய்தித்தளத்தில் உள்ள கட்டுரைகள் வாசித்ததற்கு முதற்கண் நன்றி. உண்மையே நீண்ட கால அடிப்படையில் நிலைக்கும் என்ற தத்துவார்த்த உண்மையை மனதில் கொண்டு, மெய்யான செய்திகளை மக்களுக்கு அளிப்பதே நோக்கம். மீண்டும் மீண்டும் வேல்ஸ் மீடியா செய்தி தளத்திற்குள் வந்து ஆதரவு தாரீர்.

      Contact us: editor@velsmedia.com

      Facebook
      Youtube
      Twitter
      Instagram

      © Copyright - Vels Media

      • Home
      • தமிழகம்
      • Exclusive
      • இந்தியா
      • உலகம்
      • சினிமா
      • சமையல்
      • அழகு குறிப்பு
      • நேர்காணல்
      • மருத்துவம்