சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு புதிய உத்தரவு: இனி குழந்தைகளுக்கு ‘சர்க்கரைப் பலகை’யில் கணக்கு!

0
34
CBSE has instructed schools to create 'sugar boards' to help monitor and reduce children's sugar intake, promoting healthier eating habits. Learn more about this new initiative.

முன்னொரு காலத்தில் பணக்காரர்களுக்கு மட்டுமே வரும் என கூறப்பட்ட நீரிழிவு நோய், சூழல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தால் நடுத்தர வயது முதல் அனைவரும் பாதிக்கப்பட்டனர். கடந்த பத்தாண்டுகளில் உணவு முறை மாற்றம், போதிய விளையாட்டு இல்லாதது, உடற்பயிற்சி குறைவு, கல்வி அழுத்தம் போன்ற காரணங்களால் குழந்தைகளிடையே டைப் 2 நீரிழிவு நோய் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், பள்ளி மாணவர்களின் சர்க்கரை உட்கொள்ளலைக் கண்காணிக்கும் வகையில், அனைத்து சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகளிலும் Sugar Board(சர்க்கரை பலகை) அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும், குழந்தைகள் நீரிழிவு நோய்க்கு ஆளாவதை தடுக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

Also Read : நீரிழிவு நோயில் மேலும் ஒரு புதிய வகை: டைப்-5 வகை நீரிழிவு நோய், யார் யாரை பாதிக்கும்?

குழந்தைகளிடையே டைப் 2 நீரிழிவு, உடல் பருமன் மற்றும் பல் பிரச்சினைகள் அதிகரித்து வருவது குறித்து கவலைகளை எழுப்பியுள்ள தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NCPCR) பரிந்துரையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் பள்ளிச் சூழல்களில் சர்க்கரை நிறைந்த சிற்றுண்டிகள், பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் எளிதில் கிடைப்பதே சிறுவர்கள் டைப் 2 நீரிழிவால் பாதிக்கப்படுவதற்குக் காரணம். அதிகப்படியான சர்க்கரை நுகர்வு நீரிழிவு அபாயத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடல் பருமன், பல் பிரச்சினைகள் மற்றும் பிற வளர்சிதை மாற்றக் கோளாறுகளுக்கும் பங்களிக்கிறது. இறுதியில் குழந்தைகளின் நீண்டகால ஆரோக்கியம் மற்றும் கல்வி செயல்திறனை இது பாதிக்கிறது,” என்று பள்ளி முதல்வர்களுக்கு எழுதிய கடிதத்தில் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

Discover how CBSE’s new ‘sugar boards’ will empower schools to educate students and parents about healthy sugar consumption, combating childhood obesity and improving overall well-being.

சர்க்கரைப் பலகைகள் என்றால் என்ன?

இந்த ‘சர்க்கரைப் பலகைகள்’ என்பது, பள்ளியின் அறிவிப்புப் பலகை அல்லது முக்கிய இடங்களில் வைக்கப்படக்கூடிய ஒரு காட்சிப் பலகையாகும். இதில், குழந்தைகள் ஒரு நாளைக்கு எவ்வளவு சர்க்கரை உட்கொள்ளலாம், எந்தெந்த உணவுகளில் எவ்வளவு சர்க்கரை உள்ளது, சர்க்கரையின் அதிகப்படியான நுகர்வால் ஏற்படும் உடல்நலக் கேடுகள் (உதாரணமாக – உடல் பருமன், நீரிழிவு, பற்சிதைவு) மற்றும் சர்க்கரைக்கு மாற்றாக ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகள் பற்றிய தகவல்கள் படங்களுடனும், எளிமையாகப் புரியும் வகையிலும் இடம்பெறும்.

உத்தரவின் நோக்கம்:

  • அதிகரிக்கும் உடல் பருமன்: இந்தியாவில் குழந்தைகள் மத்தியில் உடல் பருமன் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாகும். இதற்கு அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளல் ஒரு முக்கிய காரணம்.
  • ஆரோக்கியமான உணவுப் பழக்கம்: இளம் வயதிலேயே ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை வளர்ப்பது அவசியம். சர்க்கரைப் பலகைகள் மூலம் குழந்தைகள் தங்கள் உணவுத் தேர்வுகளில் விழிப்புணர்வுடன் இருக்க உதவும்.
  • விழிப்புணர்வு: மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் சர்க்கரை உட்கொள்ளலின் தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது.
  • பள்ளிச் சூழல்: பள்ளியை ஒரு ஆரோக்கியமான உணவுச் சூழலாக மாற்றுவது.

Also Read : வெள்ளைச் சர்க்கரை, நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி… எது பெஸ்ட்? நீரிழிவு நோயாளிகள் கருப்பட்டி எடுக்கலாமா?

பள்ளிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:

சிபிஎஸ்இ பள்ளிகள் இந்த சர்க்கரைப் பலகைகளை அமைப்பதோடு, பின்வரும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளன:

  • சர்க்கரை இல்லாத அல்லது குறைந்த சர்க்கரை கொண்ட சிற்றுண்டிகளை ஊக்குவித்தல்.
  • பள்ளி கேண்டீன்களில் ஆரோக்கியமான உணவுப் பொருட்களை மட்டுமே விற்பனை செய்தல்.
  • சர்க்கரை உட்கொள்ளல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பட்டறைகளை நடத்துதல்.
  • மாணவர்களின் உடல்நலம் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்து பெற்றோருடன் தொடர்ந்து கலந்துரையாடுதல்.

நீரிழிவுக்கான முக்கிய காரணிகள்:

  • தவறான உணவுமுறை: அதிக அளவில் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை உணவுகள்.
    உடற்பயிற்தி குறைபாடு: குழந்தைகள் அதிக நேரம் மொபைல், டிவி மற்றும் வீடியோ கேம்களில் செலவழிப்பது.
  • பரம்பரை காரணிகள்: குடும்பத்தில் நீரிழிவு நோய் வரலாறு உள்ளவர்களுக்கு அதிக வாய்ப்பு.
  • அதிக உடல் பருமன் (Obesity): சிறுவயதிலேயே அதிக உடல் எடை கொண்டவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் சாத்தியம் அதிகம்.

நான்கு முதல் 10 வயது வரையிலான குழந்தைகளுக்கு தினசரி கலோரி உட்கொள்ளலில் சர்க்கரை 13% ஆகவும், 11 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு 15% ஆகவும் இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன, இது பரிந்துரைக்கப்பட்ட வரம்பான 5% ஐ கணிசமாக மீறுகிறது. பள்ளிச் சூழல்களில் பெரும்பாலும் எளிதாகக் கிடைக்கும் சர்க்கரை சிற்றுண்டிகள், பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், இந்த அதிகப்படியான உட்கொள்ளலுக்கு கணிசமாக பங்களிக்கிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry