
ஐபெட்டோ(AIFETO) என்கிற அகில இந்திய தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெர்மானிய தத்துவஞானியும், புரட்சிகர சோசலிசவாதியுமான கார்ல் மார்க்ஸ் சிலையை சென்னை பெருநகரில் நிறுவப்போவதாக, ஏப்ரல் 3-ம் தேதி சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, ஐபெட்டோ சார்பில் மனமார்ந்த பாராட்டுக்களையும், வரவேற்பினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கார்ல் மார்க்ஸ் 19-ம் நூற்றாண்டின் மாபெரும் மனிதர் மட்டுமல்ல. உழைப்புச் சுரண்டலை ஒழிப்பதற்கும், ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்கும், தொழிலாளர் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்காகவும் இயங்கும் சர்வதேச இயக்கங்களுக்கு அவரது கருத்துக்கள் சித்தாந்த அடிப்படையை வழங்கியது.
உலகம் உயர்வுபெற – பாட்டாளி வர்க்கம் மேன்மையுற – சமத்துவம் நிலைபெற பொதுவுடைமைக் கொள்கையைத் தந்திட்ட உலக மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு, இந்தியப் பொதுவுடைமை இயக்கம் நூற்றாண்டைக் கொண்டாடும் இவ்வேளையில் சென்னையில் சிலை நிறுவுவதில், கொள்கைத் தோழர்களாக – ‘எல்லார்க்கும் எல்லாம்’… https://t.co/J2kZQ8uMEW pic.twitter.com/DT0VEeNTj6
— M.K.Stalin (@mkstalin) April 3, 2025
‘விதைப்பவன் தூங்குகிறான், ஆனால் விதைகள் தூங்குவதில்லை’ என்கிற அவரது கருத்தாழமிக்க சொற்கள் காலம் கடந்து எதிரொலிக்கின்றன. அவர் விதைத்த சோசலிசம் மற்றும் கம்யூனிசம் ஆகிய விதைகள் நீதி, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய வலுவான கருத்துக்களாக தமிழ்நாடு உள்பட உலகம் முழுவதும் முளைத்துள்ளன.
இந்திய தொழிலாளர் இயக்கத்தின் வரலாற்றில் சென்னை வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. நாட்டின் முதல் மே தினக் கொண்டாட்டத்தை தோழர் சிங்காரவேலர் நடத்தியது சென்னையில்தான். தோழர் ப. ஜீவானந்தம் போன்ற மாபெரும் தலைவர்கள், மார்க்சியக் கொள்கைகளை தமிழ் அடையாளத்துடனும், சமூக சீர்திருத்தத்துடனும் கலந்து பரப்பி, மார்க்சிய சித்தாந்தம், கலாச்சார பெருமையுடனும் சமூக அநீதிக்கு எதிரான போராட்டத்துடனும் கைகோர்த்துச் செல்ல முடியும் என்பதை நிரூபித்துக்காட்டியது தமிழ்நாட்டில்தான்.
அந்த வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அறிவிப்பு, தமிழகத்தின் சமூக வளர்ச்சிக்கும், சமத்துவக் கொள்கைகளுக்கும் மார்க்சியக் கருத்துக்களின் பொருள் சார்ந்த பங்களிப்பை மேம்படுத்த உதவுகிறது. முதலமைச்சரின் தந்தையான மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி, மார்க்சிய சிந்தனைக்கு மதிப்பளித்தவர், தன்னை ‘மனதால் கம்யூனிஸ்ட்’ என்று பெருமையுடன் கூறிக் கொண்டவர். கார்ல் மார்க்ஸ் சிலை நிறுவுவது தொடர்பான முதலமைச்சரின் அறிவிப்பு, அந்த சித்தாந்த பாரம்பரியத்தின் விரிவாக்கமாகும்.
கார்ல் மார்க்ஸ் நிறுவிய சித்தாந்தத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் 22 மாநிலங்களில் செயல்பட்டு வரும் AIFETO அமைப்பின் பெயரில், சிலை நிறுவும் முடிவை வரவேற்று பாராட்டுகிறோம். தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கான சிறந்த சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான எங்களது நம்பிக்கையை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
Also Read : ஞாபக மறதியை அடியோடு மறக்கடிக்கனுமா? மறதிக்கு டஃப் கொடுக்கும் மூலிகைகள்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா, தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஆர். முத்தரசன், ஐபெட்டோ தேசியத் தலைவரும், நாட்டின் மூத்த தொழிற்சங்கவாதியுமான பிரபாகர் அரடே. ஜி உள்ளிட்டோரும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சிந்தனைமிக்க முடிவை வரவேற்றுப் பாராட்டியுள்ளார்கள்.
சென்னையில் அமையவுள்ள கார்ல் மார்க்ஸின் புதிய சிலை, பொதுப் போராட்டம், ஒற்றுமை மற்றும் சமத்துவமான சமூகத்திற்கான விருப்பத்தின் அடையாளமாக இருக்கும். பொருளாதார ஏற்றத்தாழ்வும், சமூக அநீதியும் நமது நாட்டின் பெரும்பகுதியைத் தொடர்ந்து பாதிக்கும் நேரத்தில், கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை நிறுவும் முடிவு நீதி, சமத்துவம் மற்றும் தொழிலாளர் மரியாதையை உணர்த்தும் என்பதில் ஐயமில்லை.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அறிவிப்புக்கும், அவரது முயற்சிக்கும் முழுமையான ஆதரவை, பாராட்டுதலை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். சென்னையில் அமையவுள்ள கார்ல் மார்க்ஸின் சிலை சோசலிச சித்தாந்தம், வரலாற்று விழிப்புணர்வு மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் அசைக்க முடியாத விருப்பத்தின் அடையாளமாக நிற்கட்டும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Contact AIFETO Annamalai @ 94442 12060 / 9962222314. annamalaiaifeto@gmail.com
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry