தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு என்பது ஆளுங்கட்சியின் சட்டைப் பையில் சுருட்டி வைக்கப்பட்டு உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கரூரில் சட்டவிரோதக் கல் குவாரி முறைகேட்டைத் திரையிடச் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் உள்ளிட்ட 5 பேர் மீது திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நிகழ்த்தியுள்ள வன்முறை, தமிழகத்தையே அதிரவைத்துள்ளது.
எரியும் விவசாயி… அலறும் தமிழகம்! – “இதற்கு மேல சீரழிய முடியாது!” – விடியா திமுக அரசை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்தெடுத்த எடப்பாடியார்!
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு என்பது வெறும் காகித அளவில்தான் இருக்கிறதா? அல்லது காவல்துறையின் கைகள் ஆளுங்கட்சியின் அரசியல் அழுத்தத்தால் கட்டிப்போடப்பட்டுள்ளதா? என்ற கேள்விகள் இன்று ஒவ்வொரு தமிழரின் மனதிலும் ஓங்கி ஒலிக்கிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ஒரு விவசாயி உயிருடன் எரிக்கப்பட்ட கொடூரம், திமுக அரசின் நிர்வாகத் தோல்விக்கு மற்றுமொரு சாட்சியாக மாறியுள்ளது.
அரசுக்கு ஆதரவு மாநாடா? அதிருப்தியை சேர்க்கும் மாநாடா? – ஏற்பாட்டாளர்களை எச்சரிக்கும் ஐபெட்டோ! 🔥
ஐபெட்டோ (AIFETO) தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கை: ஜாக்டோ ஜியோ சார்பாக கடந்த 27.01.2026 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்ட குழு கூட்டத்தில், “பிப்ரவரி 8-ம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் உரிமை மீட்பு மாநாடு நடைபெறும், அதில் முதலமைச்சர் கலந்து கொள்வார்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
“60% அதிகரித்த குற்றங்கள்! – கஞ்சா போதையில் சீரழியும் தமிழகம்! – ஸ்டாலினின் ‘மாய உலகம்’ அம்பலம்! – அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு!”
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் அடிக்கடி சுட்டிக்காட்டப்படும் மணிப்பூர் மாநிலத்தில் கூட பெண்களுக்கு எதிராக இவ்வளவு அதிகக் கொடுமைகள் இழைக்கப்படவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு இதுவரை ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
ஒன்றிணைந்த ‘பங்காளிகள்’: திமுகவை வீழ்த்த எடப்பாடியார் – டிடிவி மெகா கூட்டணி!
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், டிடிவி தினகரனின் அமமுக கட்சி மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரனை வரவேற்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வைகோவின் கூட்டணி ட்விஸ்ட்கள்! வாரிசு அரசியலை எதிர்த்துவிட்டு வாரிசுக்காகத் தஞ்சமடைந்த சோகம்: முரண்பாடுகளின் உச்சமான மதிமுக!
‘கலைஞர் அவர்களே! உங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை எம்.ஜி.ஆர் சொன்னார். மக்கள் நம்பினார்கள். தூக்கியெறிந்தார்கள். இப்போது மீண்டும் உங்கள் மீது நான் குற்றச்சாட்டு சொல்கிறேன். லட்சோப லட்சம் தொண்டர்களின் கண்ணீரில், ரத்தத்தில் கிடைத்த ஆஸ்திகளை குடும்ப சொத்தாக்கி தொண்டனுக்கே துரோகம் செய்து கட்சிக்குள்ளேயே நீங்கள் ஊழல் செய்துவிட்டீர்கள் என்பதற்குப் பிறகு உங்களுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. அருகதையும் கிடையாது. நீங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டீர்கள்.’
