
இன்றைய தலைமுறையினர் அருகம்புல்லை விநாயகருக்கு வைக்கப்படும் ஒரு பொருளாகவே தெரிகிறது. ஆனால், ஆயுர்வேத மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் அருகம்புல், ஒரு சக்தி வாய்ந்த மருத்துவ மூலிகை. இதில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, பொட்டாசியம், ஆல்கலாய்டு என பல சத்துக்கள் அடங்கியுள்ளது.
Also Read : மா இலைகளில் கொட்டிக் கிடக்கும் மருத்துவ இரகசியங்கள்! படித்துப் பாருங்க, அசந்துபோவீங்க..!
பெர்முடா கிராஸ் என்றும் அழைக்கப்படும் அருகம்புல் சாற்றை தினமும் வெறும் வயிற்றில் குடிப்பதால், செரிமானத்தை மேம்படுத்துவது முதல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாற்றை குடிப்பதால் கிடைக்கும் ஐந்து முக்கிய நன்மைகள் பற்றி இப்போது பார்ப்போம்:
1. செரிமானத்தை மேம்படுத்தும் அருமருந்து
அருகம்புல் சாறு அல்லது அருகம்புல் டீ, செரிமான நொதிகளைத் தூண்டி, வீக்கம், அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை போக்க உதவுகிறது. இதில் உள்ள அதிக நார்ச்சத்து குடல் இயக்கங்களை சீராக்கி, குடலை ஆரோக்கியமாக பாதுகாக்கிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிப்பதால், உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் சிறப்பாக உறிஞ்ச உதவுகிறது.
2. கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தம் செய்யும்
அருகம்புல் சாறு ஒரு சிறந்த நச்சு நீக்கியாக செயல்படுகிறது. இது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் இருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது. இதன் மூலம் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, கல்லீரல் செயல்பாடு மேம்படுத்தப்படுகிறது. சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும் இது பெரிதும் உதவுகிறது.
3. இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்
அருகம்புல் சாற்றில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் பண்புகள் உள்ளன. இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதால், நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு அருந்துவது, திடீர் குளுக்கோஸ் உயர்வை தடுத்து, நீண்ட கால வளர்ச்சிதை மாற்ற ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
4. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ சத்துக்கள் நிறைந்த அருகம்புல் சாறு, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், தொற்றுநோய்களை எதிர்த்து போராடவும், வீக்கத்தைக் குறைக்கவும், நோய்களிலிருந்து விரைவாக மீண்டு வரவும் உதவுகின்றன. தினமும் ஒரு கிளாஸ் அருகம்புல் ஜூஸ் பருகுவது, சாதாரண சளி மற்றும் பருவகால தொற்றுகளைத் தடுக்கலாம்.
5. இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும்
அருகம்புல் சாற்றில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் குளோரோஃபில் ஆகியவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவுகின்றன. இது இதய நோய், பக்கவாதம் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தின் அபாயத்தை குறைக்கிறது. இரத்தக்குழாய்கள் தடிமனாகாமலும், சுருங்கி போகாமலும் இருக்க செய்கிறது, இதனால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இதன் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் இதயத்தை ஆக்சிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கின்றன.
கொரோனா, HMPV போன்ற நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தி அவசியம். அருகம்புல் ஜுஸ் அல்லது அருகம் டீ எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அருகம்புல்லில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது. அருகம்புல் ஜுஸ் குடித்து வந்தால், தோலில் ஏற்படும் அரிப்பு, வெடிப்பு உள்பட பல தோல் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். தினமும் அருகம்புல் ஜுஸ் எடுத்துக்கொள்வதால் சிறுநீரகக் கற்கள் உருகி வெளியேறும் வாய்ப்பு அதிகம்.
Also Read : இளநீர் vs கரும்பு ஜூஸ்..! கோடை வெயிலை சமாளிக்க இரண்டில் எது பெஸ்ட்?
அருகம்புல்லுக்கு உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் அதிகம். வாய்ப்புண் போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். தினமும் அருகம்புல் ஜுஸ் குடிப்பதால், இரத்தம் சுத்திகரிக்கப்படுவதோடு, இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கும். இதனால் படிப்படியாக ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். இரத்த சோகை நீங்கும். ஞாபக சத்தியைத் தூண்ட அருகம்புல் சிறந்த மருந்தாகும். ஞாபக மறதியைப் போக்கி அன்றாட வாழ்வில் மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும்.
மேலும், சிறுநீரக பாதை அழற்சியை தடுக்கும். கண்பார்வைக்கு நல்லது, மனநோய் மற்றும் தோல் நோய்களுக்கு நிவாரணம் அளிக்கும். தினமும் அருகம்புல் சாறு அல்லது அருகம்புல் டீ குடிப்பதால் உடல் எடை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். இதில் குறைந்த அளவே கலோரி, கொழுப்பு உள்ளது. ஒருவர் ஒருநாளைக்கு 200 மில்லி அளவுக்கு அருகம்புல் சாறு அல்லது அருகம்புல் டீ குடிக்கலாம். இது துவரப்பு மற்றும் இனிப்பு சுவை கொண்டது.
அருகம்புல் டீ செய்வது எப்படி?
1. தேவையான அளவு அருகம்புல்லை எடுத்து நன்கு கழுவவும்.
2. ஒரு டம்ளர் தண்ணீரில் கழுவிய அருகம்புல்லைப் போட்டு கொதிக்க விடவும்.
3. சுவைக்காக தேன் அல்லது எலுமிச்சை சாறு சேர்க்கலாம். பிறகு வடிகட்டி அருந்தலாம்.
4. சிறந்த பலன்களைப் பெற தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதை குடித்து வரலாம்.
முக்கிய குறிப்பு:
அருகம்புல் சாறு செரிமானத்தை மேம்படுத்துவது முதல் இதய ஆரோக்கியத்தை ஆதரிப்பது வரை பல நன்மைகளை கொண்டிருந்தாலும், உங்களுக்கு ஏதேனும் ஆரோக்கிய குறைபாடுகள் இருந்தால், இதை பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry