
1975-ம் ஆண்டு இந்திய வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாள். ஜூன் 28-ம் தேதி, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வந்த ஒரு சிறிய இரங்கல் செய்தி, இந்திய ஜனநாயகத்தின் மரணத்தை மறைமுகமாகச் சொன்னது.
“ஓ’காசே… ஜூன் 26 அன்று காலமானார்”(“O’Casey, D.E.M., beloved husband of T. Ruth, loving father of L.I. Bertie, brother of Faith, Hope and Justicia, expired on June 26,”) என்ற அந்த செய்தி, இந்திய ஜனநாயகம் எமெர்ஜென்சி காலத்தில் எப்படி குலைக்கப்பட்டது என்பதற்கான ஒரு குறியீடு.
அதாவது, இந்தியாவில் நெருக்கடி நிலை (எமர்ஜென்சி) அமல்படுத்தப்படுவதாக குடியரசுத் தலைவர் ஃபக்ருதின் அலி அகமது ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அன்றைய தினத்திலிருந்து 1977 ஆம் ஆண்டு மார்ச் 21 வரை 21 மாதங்கள் இந்தியாவில் நெருக்கடி நிலை அமலில் இருந்தது. நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. பத்திரிகை தணிக்கை, தலைமறைவு வாழ்க்கை என அந்த காலகட்டத்தின் சுவடுகள் தமிழ்நாட்டின் வரலாற்றிலும் ஆழமாக பதிந்துள்ளன.
இந்த எமெர்ஜென்சி, இந்திய அரசியலமைப்பில் 352-வது பிரிவின் தெளிவற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி, நாட்டில் ஒரு சர்வாதிகார நிலையை உருவாக்கியது. ஒரே சட்டத்தின் பெயரில், நாட்டின் அடிப்படை உரிமைகள் நிறுத்தப்பட்டன, நீதித்துறை சீரழிந்தது, நிர்வாகம் ஒரே நபரின் கட்டுப்பாட்டில் சென்றது. ஐம்பது ஆண்டுகள் கழித்தும், இந்த எமெர்ஜென்சி இந்திய ஜனநாயகத்தின் பலவீனங்களை, உரிமைகளின் குறைபாடுகளை, மற்றும் சரிபார்ப்பு மற்றும் சமநிலை(checks & balances) அமைப்புகளின் குறைபாடுகளை வெளிப்படுத்துகிறது.
Also Read : திட்டமிடல் இல்லாத திமுக அரசு – தடம் புரளும் சென்னையின் வளர்ச்சி! புயலாக கிளம்பும் EPS விமர்சனம்!
அரசியலமைப்பின் அமைப்பும் சிக்கலும்
இந்திய அரசியலமைப்பு மிகக் கடுமையான காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. நாட்டை ஒற்றையாட்சி மாநிலமாக மாற்றும் அதிகாரங்கள் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டன. அதே சமயம், மாநிலங்களுக்கும் குடிமக்களுக்கும் அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டன.
ஆனால், அவசரநிலை, ஆளுநர் அலுவலகம், பண மசோதாக்கள் மற்றும் சில சட்டங்கள் மூலம், இந்த உரிமைகள் எப்போது வேண்டுமானாலும் நிறுத்தப்பட்டு விடலாம் என்ற வகையில் அமைக்கப்பட்டது. 1951-ல் அரசியலமைப்புத் திருத்தம் மூலம், பேச்சு சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்திரா காந்தி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பாதுகாப்பதற்காக, இந்த திருத்தத்தை பயன்படுத்தினார்.
அவசரநிலை சட்டங்களும், அதிகாரக் குவிப்பும்
இந்தியாவின் ஆரம்ப ஆண்டுகளில், பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் நடந்த போர்கள், ‘வெளிப்புற அவசரநிலை’ அறிவிப்பை வழிவகுத்தன. இதனால், அடிப்படை உரிமைகள் நிறுத்தப்பட்டன. இந்திய பாதுகாப்புச் சட்டம், தடுப்புக் காவல் சட்டம், MISA போன்றவை, அரசாங்கத்திற்கு மிகப்பெரிய அதிகாரங்களை வழங்கின.
இந்த சட்டங்கள், பிடிவாரண்ட் இல்லாமல் கைது செய்யவும், தொலைபேசி ஒட்டுக்கேட்கவும், மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் அனுமதித்தன. 1977-ல் அவசரநிலை நீக்கப்பட்டதும், ஜனதா கட்சி தலைமையிலான அரசு, அவசரநிலை அறிவிப்பை கட்டுப்படுத்தும் திருத்தங்களை கொண்டு வந்தது. ஆனாலும், சில அம்சங்கள் இன்னும் நடைமுறையில் உள்ளன.
மாநில உரிமைகள் மீது மத்திய அரசின் அதிகாரம்
இந்திய அரசியலமைப்பில், மத்திய அரசுக்கு மாநிலங்களை கட்டுப்படுத்தும் பல அதிகாரங்கள் உள்ளன. ஷரத்து 356-ன் கீழ், மத்திய அரசு மாநில அரசை கலைத்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த முடியும். இது 1947 முதல் 130-க்கும் மேற்பட்ட முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்திரா காந்தி காலத்தில் மட்டும் 50 முறை நடந்துள்ளது.
நிதி ஒருங்கிணைப்பு, ஜிஎஸ்டி இழப்பீடு, பகிரப்படாத செஸ் வரிகள், தன்னிச்சையான பரிமாற்றங்கள் ஆகியவற்றின் மூலம், மாநிலங்கள் மத்திய அரசை மேலும் சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆளுநர்கள், மாநில சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்துவது, அல்லது மாநில நியமனங்களை தடுப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
TADA, UAPA, PMLA போன்ற சட்டங்கள், அரசாங்கத்திற்கு பொதுமக்களின் உரிமைகளை எளிதாக பறிக்கும் அதிகாரத்தை வழங்குகின்றன. ஒவ்வொரு அரசும் அவற்றைத் தங்கள் வசதிக்கேற்ப பயன்படுத்தும் அபாயம் உள்ளது.
திமுக அரசின் அதிகாரக் குவியலும், எதிர்கால சவாலும்!
எமெர்ஜென்சிக்கு பிந்தைய காலகட்டத்தில் நிர்வாக அதிகாரம் ஏற்ற இறக்கங்களைக் கண்டது. 1989-2014 வரையிலான காலத்தில், பலவீனமான மத்திய அரசு, கூட்டுறவு கூட்டாட்சிக்கு (cooperative federalism) வழிவகுத்தது. மாநிலங்கள் வலுவான குரல் கொடுத்தன, மேலும் 73வது மற்றும் 74வது அரசியலமைப்புத் திருத்தங்கள் முதல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வரை, மத்திய அரசிடமிருந்து அதிகாரத்தைப் பரவலாக்குவதற்கான முக்கிய முன்முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
எமெர்ஜென்சி நிர்வாக அதிகாரத்தின் ஆதாரம் இந்தியாவின் அரசியலமைப்பு அமைப்பிலேயே பொதிந்துள்ளது என்பது தெளிவாகிறது; இதுவே 50 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியா போராட வேண்டிய ஒரு மரபை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசு இந்த அதிகாரக் குவிப்பை எதிர்த்துப் போராடாமல், மத்திய அரசுடன் இணக்கமாகப் போவது, மாநில சுயாட்சிக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என்ற விமர்சனம் வலுக்கிறது.
50 ஆண்டுகளுக்குப் பிறகு, எமெர்ஜென்சி எங்களுக்கு சொல்லும் பாடம் என்ன?
தமிழ்நாட்டில் என்கவுன்ட்டர் உள்ளிட்ட காவல்துறை அடக்குமுறைகள் எமர்ஜென்சிக்குப் பிறகு தான் சகஜமாக்கப்பட்டது. நெருக்கடி நிலை ரத்து செய்யப்பட்ட பிறகும் தமிழ்நாட்டில் காவல்துறையின் அடக்குமுறை மற்றும் அத்துமீறல்கள் தொடர்ந்து, தற்போது வரையும் கூட, அதற்கான வித்து அந்தக் காலகட்டத்தில் தான் இடப்பட்டது என்ற பார்வை முன்வைக்கப்படுகிறது.
மத்திய அரசின் அதிகாரக் குவிப்பு, மாநில உரிமைகளின் குறைபாடு, மற்றும் அடிப்படை உரிமைகளின் பாதுகாப்பு – ஆகியவை இன்னும் இந்திய ஜனநாயகத்திற்கு சவாலாகவே இருக்கின்றன. எமெர்ஜென்சி காலத்தின் பிழைகளை மறக்காமல், மாநில சுயாட்சி, உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பது நம் கடமை.
மூலம் : தி பிரின்ட் இணைய இதழில், வரலாறு மற்றும் மனிதவியல் எழுத்தாளர் விபவ் மாரிவாலா எழுதியது. தமிழில் சுருக்கமாகவும், சற்றே கூடுதல் தகவல்களுடன் – அம்மா கோபி. (பார்வைகள் தனிப்பட்டவை)
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry