மனைவியைப் பிரிவதாக ஜெயம் ரவி அறிவிப்பு! தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கோரிக்கை!

0
72
Tamil actor Jayam Ravi and his wife Aarti announced their separation on September 9. They were married for 15 years and are parents to two sons.

பிரபல நடிகர் ஜெயம்ரவி, தனது மனைவி ஆர்த்தியுடனான திருமண வாழ்விலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

ஜெயம் ரவி – ஆர்த்தி திருமணம் 2009 ஆம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நல்ல ஜோடி, கியூட் ஜோடி என்று பெரும்பாலானவர்களால் அழைக்கப்படும் ஜெயம் ரவி – ஆர்த்தி இடையே சில நாட்களாகவே கருத்து வேறுபாடு இருப்பதாகவும், இதனால், இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் செய்திகள் பல வெளியாகின.

இதை மெய்ப்பிக்கும் வகையிலே, இன்ஸ்ட்ராகிமில் ஜெயம் ரவியுடன் எடுத்த புகைப்படங்களை நீக்குவது, அவரை unfollow செய்வது, தன் மகன்களுடன் இருக்கும் படங்களை நீக்குவது என பல சமிக்சைகளை வெளிக்காட்டி வந்தார் ஆர்த்தி. ஆனால், பிரிந்து வாழ்வது குறித்து இருவரும் வெளிப்படையாக பதிலளிக்காமல் இருந்தனர்.

இந்நிலையில்தான், ”இது வெறும் வதந்திதான்” என்று சந்தோஷமடைந்த ஜெயம் ரவியின் ரசிகர்களுக்கு பெரும் இடியை ஏற்படுத்தும் விதமாக இன்று ஒரு அறிக்கையை நடிகர் ஜெயம்ரவி வெளியிட்டுள்ளார். அதில், இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், தங்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படியும் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில், “மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry