
பிளாஸ்டிக் மாசுபாடு கடல்களில் மிதக்கும் பாட்டில்கள், கடற்கரை ஓரங்களில் பரவிய பைகளாக மட்டுமல்ல, நமக்கு தெரியாத ஒரு ஆபத்தான வடிவத்தில், விவசாய மண்ணில் புதைந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தமுர்டொக் பல்கலைக்கழகத்தின் (Murdoch University) சமீபத்திய ஆய்வின்படி, இப்போது விவசாய மண், கடலை விடவும் 23 மடங்கு அதிகமான மைக்ரோபிளாஸ்டிக் துகள்களை கொண்டுள்ளது.
இது கடலில் தெரியும் பிளாஸ்டிக்கல்ல. மிகச் சிறிய, கண்களுக்கு புலப்படாத, ஆனால் இரசாயன ரீதியாக மிகவும் சிக்கலான இத்துகள்கள், உணவுப் பொருட்கள், விவசாயம் மற்றும் மனித உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. ஆய்வை வழிநடத்திய முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர் ஜோசப் போக்டர் என்பவர், “இந்த மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள், உணவு தயாரிக்கும் நிலத்தை ஒரு பிளாஸ்டிக் கொள்கலனாக மாற்றி வருகின்றன” என்கிறார்.

இந்த மாசுபாடு மண்ணிலேயே தங்கி விடுவதில்லை. இது வேர்களின் வழியாக பயிர்களில் புகுந்து, நம் உணவுப் பிளட்டுகளில் நிறைவதுடன், மனித உடலுக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது. இதற்காக உடனடி விழிப்பும், கொள்கை மாற்றமும் தேவைப்படுகிறது.
விவசாய மண்ணில் பிளாஸ்டிக்
போக்டரின் ஆய்வில், ஒரு கவலைக்கிடமான தகவல் உள்ளது. மண்ணில் உள்ள இந்த மைக்ரோபிளாஸ்டிக் துகள்களில் 10,000க்கும் மேற்பட்ட இரசாயன சேர்மங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. இவை பெரும்பாலும் விவசாயத்திற்காக சோதிக்கப்படவில்லை. BPA(Bisphenol A) இல்லாத பிளாஸ்டிக் என்பது பாதுகாப்பானது என்பதற்கான பிம்பம் தவறானது என ஆய்வு தெரிவிக்கிறது. BPA-க்கு மாற்றாக பயன்படுத்தப்படும் BPF(Berkeley Packet Filter) மற்றும் BPS(Bisphenol S) போன்ற சேர்மங்கள் கூட ஹார்மோன்கள் மீது கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும்.
மண்ணிலிருந்து உணவுக்குப் பயணிக்கும் பிளாஸ்டிக்
இந்த மைக்ரோ மற்றும் நானோ பிளாஸ்டிக் துகள்கள் பசுமைக் காய்கறிகள், தானியங்கள் மற்றும் வேர்க்கிழங்கு வகை பயிர்களுக்குள் நுழைகின்றன. எடுத்துக்காட்டாக, வேர்க்கடலை பயிர்களில் நைட்ரஜன் உறிஞ்சும் திறன் 35 சதவீதம் குறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது வளர்ச்சியைக் குறைத்ததோடு, பயிரின் ஊட்டச்சத்துகளையும் பாதித்திருக்கிறது.
பையோபிளாஸ்டிக் பாதுகாப்பா?
பசுமைக்கு மாற்றாக விளம்பரப்படுத்தப்படும் பையோபிளாஸ்டிக் வகைகளில் சில, அதாவது PLA(Polylactic Acid) மற்றும் PBAT(Polybutylene Adipate Terephthalate) கூட, மண் நுண்ணுயிரினங்களை பாதித்து பயிர்களின் வளர்ச்சியைத் தடைபடுத்துகின்றன. எனினும், ‘Smart Spray Project’ எனும் புதிய முயற்சியில், மண்ணுக்கோ friendly ஆன, நீரை உறைய வைத்துக் கொள்ளும் வகையில் இயற்கையாக degrade ஆகும் பிளாஸ்டிக் தொழில்நுட்பம் சோதிக்கப்படுகிறது.
உலகளாவிய விவசாய மண்ணில் மாசுபாடு
இந்த மாசுபாடு உலகளாவியதாகும். ஆய்வில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. நமக்கு தெரியாமலேயே, இந்த மாசுபாடு நிலத்தடியிலிருந்து பூச்சிகளையும், பூமிக்குகீழ் வாழும் உயிரினங்களையும் அழிக்கிறது. இது மண் நுண்ணுயிர் சமநிலையை வீழ்ச்சியடையச் செய்கிறது.
மண்ணின் இரசாயன சமநிலை பாதிப்பு
மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் கார்பன் மற்றும் நைட்ரஜன் சுழற்சியை பாதிக்கின்றன. இது பயிர்களின் வளர்ச்சியைத் தடுக்கும். இதனால் விவசாயிகள் மீண்டும் ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்த நேரிடுகிறது. இது மேலும் மாசுபாட்டை உருவாக்குகிறது.
சாதாரண கரிமப் பொருட்கள் போல மைக்ரோபிளாஸ்டிக்குகள் மண்ணில் மட்குவதில்லை. மாறாக, அவை மண்ணில் குவிகின்றன. காலப்போக்கில், இவை மண்ணில் உள்ள கார்பன் மற்றும் நைட்ரஜன் சுழற்சியில் தலையிடுகின்றன. சில வகையான மைக்ரோபிளாஸ்டிக்குகள் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு போன்ற பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தை அதிகரிப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.
மற்றவை வேதியியல் ரீதியாக மந்தமாகத் தோன்றலாம். இந்த வேறுபாடு பிரச்சினையைப் படிப்பதையும், தீர்ப்பதையும் கடினமாக்குகிறது. இதன் ஒரு தெளிவான விளைவு என்னவென்றால், மைக்ரோபிளாஸ்டிக்குகள் நைட்ரஜன் நிலைநிறுத்தத்தைக் குறைக்கின்றன மற்றும் மண்ணை வளமாக வைத்திருப்பதற்கு காரணமான நுண்ணுயிர் செயல்பாட்டைத் தடுக்கின்றன.
பிளாஸ்டிக் கலந்த மண்ணில் உள்ள தாவரங்கள் மெதுவாக வளரலாம், குறைவான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சலாம் மற்றும் குறைந்த விளைச்சலைக் கொடுக்கலாம். நைட்ரஜன் சுழற்சிகள் சீர்குலங்குவதால், விவசாயிகள் செயற்கை உரங்களை அதிகம் நம்பியிருக்க நேரிடும், இது மற்றொரு மாசு சுழற்சியை உருவாக்கும். இதன் பொருள், தரம் குறைந்த மண் ஆதாரம், மோசமான பயிர்கள் மற்றும் மேலும் மாசுபாடு. இது ஒரு முடிவற்ற சரிவு சுழற்சியாக மாறுகிறது.
உணவிலும், உடலிலும் பிளாஸ்டிக்
பிளாஸ்டிக் மாசுபாடு பண்ணை வாயிலோடு நின்றுவிடுவதில்லை. மைக்ரோபிளாஸ்டிக்குகள் (நுண் நெகிழிகள்) பழங்கள், காய்கறிகள், இறைச்சி, பால் மற்றும் கடல் உணவுகள் உள்பட கிட்டத்தட்ட அனைத்து வகையான உணவுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன. சமீபத்திய தரவுகளின்படி, ஆப்பிள்கள் ஒரு கிராமுக்கு 233,000 பிளாஸ்டிக் துகள்கள் வரை கொண்டிருக்கலாம்.
பெரியவர்கள் ஒவ்வொரு வாரமும் ஐந்து கிராமுக்கு மேல் பிளாஸ்டிக்கை அறியாமலேயே உட்கொள்ளலாம். இது ஒரு கிரெடிட் கார்டின் எடைக்கு சமம். மேலும் இந்த பிளாஸ்டிக் உடலிலிருந்து வெளியேறுவதில்லை. அது அங்கேயே தங்கிவிடுகிறது. மனித இரத்த ஓட்டம், நுரையீரல், இதயம், விந்து, நஞ்சுக்கொடி மற்றும் தமனி பிளேக்குகள் (arterial plaque) ஆகியவற்றிலும் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதைக் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
Also Read : தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக்! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்! Microplastics Found in Human Breast Milk!
இது மனித ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்துவதாகவும் ஆக்குகிறது” என்று டாக்டர் போக்டர் கூறினார். மாசுபாட்டின் அளவு பரவலாக இருப்பதோடு மட்டுமல்லாமல், தனிப்பட்ட ரீதியாகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நாம் உண்ணும், பருகும் மற்றும் சுவாசிக்கும் அனைத்திலும் இப்போது பிளாஸ்டிக் துண்டுகள் கலந்துள்ளன. இவை வெறும் மாசுபடுத்திகள் மட்டுமல்ல, நமது மிகவும் உணர்திறன் வாய்ந்த உயிரியல் அமைப்புகளுக்குள் ஊடுருவியுள்ள அந்நியர்களாகும்.
கட்டுப்பாடுகளின் பின்தங்கிய நிலை
மைக்ரோபிளாஸ்டிக்குகள் தொடர்பான ஒழுங்குமுறை இல்லாத நிலையில், ஆய்வுகள் பல தவறான தரவுகளுடன் மேற்கொள்ளப்படுகின்றன. BPA மட்டுமே கவனத்துக்குள் வந்தாலும், அதன் மாற்றுப்பொருட்கள் அனைத்தும் கட்டுப்பாடின்றி பயன்படுகின்றன.
தீர்வும் – தேவைவும்
போக்டரின் குழு, உணவுப் பாதுகாப்புக்காக உரிய பையோபிளாஸ்டிக் மாற்றங்களை உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. உலகளாவிய உணவுச் சங்கிலியில் பிளாஸ்டிக் மாசுபாடு மேலும் பரவுவதற்கு முன், ஒழுங்குமுறை அதிகாரிகள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில்துறையினர் அனைவரும் இணைந்து செயல்பட்டு, இந்த ஓட்டைகளை அடைக்க வேண்டும்.
இந்த ஆய்வு வெறும் எச்சரிக்கை மட்டுமல்ல. இது உடனடி, ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கான அழைப்பு. மண் தான் வாழ்வின் ஆதாரம். அதை ஒரு நச்சு நீர்த்தேக்கமாக மாற நாம் அனுமதிக்க முடியாது. நாம் இப்போது எடுக்கும் முடிவுகள்தான், எதிர்கால சந்ததியினர் ஊட்டமளிக்கும் வயல்களைப் பெறுவார்களா அல்லது பிளாஸ்டிக் குப்பைகளைப் பெறுவார்களா என்பதைத் தீர்மானிக்கும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry