கோவில் நிதியை சுரண்டுவது நியாயமா? கோவை மாநகரில் எடப்பாடியார் ஆவேசம்! திமுக மீது மக்களுக்கு வெடிக்கும் கோபம்!

0
23
politics/hrce-rules-dmk-controversy-edappadi-speech-vels-media
ADMK asserts that its education development during their rule was solely funded by government exchequer. Why is DMK attempting to divert Hindu temple Hundi money? Legal experts and public raise concerns. Image : Perplexity AI.

“மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணத்தின் ஒரு பகுதியாக, கோவை மாநகரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டம் மாபெரும் மக்கள் திரளை ஈர்த்து, திமுக அரசின் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பை அப்பட்டமாகப் பறைசாற்றியது. இந்த எழுச்சியைக் கண்ட எதிரணிக் கட்சிகள் பீதியில் உறைந்து போயுள்ளதை, எடப்பாடி பழனிசாமி அவர்களின் பேச்சு உறுதிப்படுத்தியது.

Also Read : மக்களின் கண்ணீரைத் துடைக்கப்போகும் எழுச்சிப் பயணம் – மக்களைக் காத்து, தமிழகத்தை மீட்க நெடும்பயணம் புறப்படுகிறார் EPS!

அதிமுக ஆட்சியில் கல்விப் புரட்சி – திமுகவின் கண்கள் உறுத்தும் கோவில் நிதி!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது உரையில், அதிமுக ஆட்சியின் பொற்கால சாதனைகளை அடுக்கடுக்காகப் பட்டியலிட்டார். குறிப்பாக, கல்வித் துறையில் அதிமுக நிகழ்த்திய புரட்சி, தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்க்கையில் ஒளி ஏற்றியது. மேலும்,

* “எங்களது கூட்டணியைக் கண்டு எதிரணியில் இருக்கும் கட்சிகளுக்கு பயம் வந்துவிட்டது. எப்போது எங்களைப் பற்றி பேசுகின்றனரோ? அப்போதே அவர்களுக்கு பயம் வந்துவிட்டது என்று அர்த்தம்.”
* “அதிமுக ஆட்சியில் கோவையில் மட்டும் 5 புதிய அரசு கலைக் கல்லூரிகள் கட்டப்பட்டன.”
* “ஒரே ஆண்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள், சட்டக் கல்லூரி, கால்நடைப் பூங்கா, பொறியியல், பி.எட். கல்லூரி என எண்ணற்ற கல்லூரிகளைத் திறந்து, தமிழகத்தில் உயர் கல்வி பயிலுவோரின் எண்ணிக்கையை வியத்தகு அளவில் உயர்த்தினோம்.”

இத்தகைய மக்கள் நலன் சார்ந்த, தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய கல்வி வளர்ச்சிக்கு, அதிமுக அரசு அரசுப் பணத்தை மட்டுமே பயன்படுத்தியது. ஆனால், இன்று அறநிலையத் துறை பணத்தைக்கொண்டு கல்லூரி கட்டும் திமுகவின் செயல், அவர்களின் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகத் தெரிவித்தார்.

* “தற்போது அறநிலையத் துறையின் கைகளில் பணம் இருப்பதை திமுகவால் பொறுக்க முடியவில்லை. அது அவர்களின் கண்களை உறுத்துகிறது. கோயில்களைக் கண்டாலே அவர்களுக்குப் பிடிப்பதில்லை.”
* “அதனால்தான், கோவில் பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகின்றனர்.”
* “மக்கள் உண்டியலில் பணத்தைப் போடுவது கோயிலை அபிவிருத்தி செய்வதற்காகத்தான். நாங்கள் அனைத்துக் கல்லூரிகளையும் அரசு பணத்தில்தான் கட்டினோம். அறநிலையத் துறையின் பணத்தை எடுத்து கல்லூரிகளைக் கட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இதை ஒரு சதிச் செயலாகத்தான் பார்க்கிறோம்.”
* “கல்விக்குச் செலவிட வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் அரசுப் பணத்தில் இருந்துதான் கல்விக்கு செலவிட வேண்டும்.” – இதுவே அதிமுகவின் உறுதியான நிலைப்பாடு.

Also Read : த.வெ.க. தனித்துப் போட்டி: பலம்பெறும் அதிமுக கூட்டணி! சிதறும் திமுக வாக்கு வங்கி; சவால்கள் பற்றிய விரிவான அலசல்!

சட்ட நிபுணர்கள் கேள்வி – திமுகவின் இரட்டை வேடம் அம்பலம்!

எடப்பாடி பழனிசாமி அவர்களின் இந்தக் கருத்தை, திமுகவினர் சர்ச்சையாக்கி வருகின்றனர். கோவில் நிதியை எடுத்து அரசு கல்லூரி கட்டுவது சரிதான், அரசு கல்விக்குதானே செலவிடுகிறது என அவர்கள் பசப்பு வார்த்தைகளைப் பேசி வருகின்றனர்.

ஆனால், திமுகவின் இந்தக் கூற்றுக்குச் சட்ட நிபுணர்கள் பலத்த எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளனர்:

* “இந்து சமய அறநிலையத்துறை விதிகள் இதற்கு அனுமதிக்கவில்லை” எனச் சட்ட நிபுணர்கள் திட்டவட்டமாகக் கூறுகின்றனர்.
* “கோவிலை நிர்வகிப்பதற்கும், அதன் பூஜை புனஸ்காரங்களுக்கும், பக்தர்களின் வசதிகளுக்கும்தான் கோவில் பணத்தைச் செலவிட முடியும்,” என அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்கள் எழுப்பும் நியாயமான கேள்விகள் – திமுகவின் மதச்சார்பின்மைக்கு சவால்!

திமுகவின் இந்த மத விரோத நடவடிக்கைக்கு எதிராக, தமிழக மக்கள் மிக நியாயமான, ஆனால் திமுகவை நிலைகுலைய வைக்கும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்:

* “தேவாலய பணத்தையோ அல்லது தேவாலய சொத்தை விற்றோ அரசால் கல்லூரி கட்ட முடியுமா?”
* “அதேபோல், வக்ஃபு வாரிய பணத்தை எடுத்து அரசால் கல்லூரி கட்ட முடியுமா?”

இக்கேள்விகள், திமுகவின் போலி மதச்சார்பின்மையை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. ஒரு குறிப்பிட்ட மதத்தின் வழிபாட்டு நிதியை மட்டும் குறிவைப்பது எந்த விதத்தில் நியாயம்? புதிய கல்லூரிகள் தொடங்கவும், அதற்கான நிதியை ஒதுக்கவும் தனி துறை இருக்கும் நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்க ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு துடிப்பது ஏன்?

Also Read : பொது வேலைநிறுத்தம்: அமைதியாக இருந்த மத்திய அரசு! ஆதரித்த கேரள அரசு… ஆனால் தமிழ்நாடு அரசு மட்டும் கோபமானது ஏன்? ஐபெட்டோ கேள்வி!

தன்னை கடவுள் மறுப்பாளராக காட்டிக்கொள்ளும் கனிமொழி, மாற்று மதத்தவரான கீதா ஜீவன் ஆகியோர் இந்து சமய அறநிலையத்துறையின் வழிகாட்டும் குழுவில் எவ்வாறு இடம் பெற்றுள்ளனர்? என்ற கேள்வி எழுகிறது. அதிமுக அரசு எப்போதும் மத நல்லிணக்கத்திற்கும், அனைத்து மதத்தினரின் உரிமைகளுக்கும் மதிப்பளிக்கும் அரசாகவே செயல்பட்டுள்ளது. ஆனால், திமுக அரசு கோவில் நிதியைக் குறிவைத்து, இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி வருகிறது. எடப்பாடி பழனிசாமியின் கூற்று, மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது. மக்கள் அதிமுகவின் பக்கம் நிற்கிறார்கள்; தமிழகத்தை மீட்டெடுப்போம்!

கட்டுரையாளர் : அம்மா கோபி, மூத்த ஊடகவியலாளர், அஇஅதிமுக ஐ.டி.விங் நிர்வாகி.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry