
தமிழகத்தில் பரவலாக வரும் பனிப்பொழிவால் நிமோனியா தொற்று அதிகரித்து, தினசரி 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். இளம் வயதினருக்கு பெரிய பாதிப்பு இல்லாவிட்டாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு இது ஆபத்தானது. முதியோர் மற்றும் இணை நோயாளிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை எச்சரிக்கிறது.
நிமோனியா என்பது நுரையீரல் தொற்று ஆகும், இது ஒன்று அல்லது இரண்டு நுரையீரல்களிலும் உள்ள காற்றுப் பைகளை வீக்கமடையச்செய்கிறது. சளி அல்லது சீழ் கொண்ட இருமல், காய்ச்சல், குளிர் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை, காற்றுப் பைகளில் திரவம் அல்லது சீழ் (புரூலண்ட் பொருள்) நிரம்பும்போது ஏற்படும். பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பூஞ்சை உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களால் நிமோனியா ஏற்படலாம்.
வைரஸ் மற்றும் பாக்டீரியா ஆகிய இரண்டு தொற்றினால் நிமோனியா ஏற்படும். தும்மல் அல்லது இருமலில் இருந்து காற்றில் பரவும் நீர்த்துளிகளை உள்ளிழுப்பதன் மூலம் அவை ஒருவரிடமிருந்து மற்றொரு நபருக்கு பரவுகின்றன. நிமோனியாவை உண்டாக்கும் பாக்டீரியா அல்லது வைரஸ்களால் மாசுபட்ட மேற்பரப்புகள் அல்லது பொருட்களுடன் தொடர்பு கொள்வதன் மூலமும் இந்த வகையான நிமோனியா பரவலாம். பூஞ்சை நிமோனியா சுற்றுச்சூழலில் இருந்து பரவும். இது ஒருவரிடமிருந்து அடுத்தவருக்குப் பரவுவதில்லை.

நிமோனியாவின் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு: காய்ச்சல், குளிர் மற்றும் வியர்வை, இருமல், சளியுடன் அல்லது இல்லாமல், நெஞ்சு வலி, மூச்சு விடுவதில் சிரமம், குமட்டல் மற்றும் வாந்தி, மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சை, தசை வலிகள், தலைவலி, சோர்வு, குழப்பம். நிமோனியா சில நபர்களில் முன்னேறி உயிருக்கு ஆபத்தாக முடியும். எனவே, மருத்துவ உதவியுடன் கூடிய விரைவில் தொடங்க வேண்டும்.
நிமோனியா ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு ஒரு லேசான நோயாகக் கருதப்படலாம், ஏனெனில் 2 முதல் 3 வாரங்களுக்குள் குணமாகிவிடும். பிற உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு 2 மாதங்கள் அல்லது அதற்கு மேல் ஆகலாம்.
இந்நிலையில், தமிழகத்தில் பரவலாக பனிப்பொழிவு தொடர்ந்து வரும் நிலையில், நிமோனியா எனப்படும் நுரையீரல் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினசரி 50க்கும் மேற்பட்டோர் நிமோனியா பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
தொண்டையில் ஏற்படும் நிமோனியா தொற்று, உரிய சிகிச்சை பெறாதபோது, தொண்டையின் அடிப்பகுதி வரை சென்று, நுரையீரலில் தங்கி விடுவதாகவும், இது வீக்கத்தை ஏற்படுத்தி, இரண்டு நுரையீரல்களையும் பாதிப்பதாகவும் பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிமோனியா காய்ச்சலை பொறுத்தவரையில், இளம் வயதினரிடையே பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்றாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு, டெங்கு, ப்ளூ காய்ச்சல் போன்றவற்றுடன், நிமோனியா பாதிப்பும் ஏற்படுவதாக கூறுகின்றனர். எனவே முதியோர், இணை நோயாளிகள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்றும், லேசான பாதிப்பு என அலட்சியம் காட்டாமல் மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
Subscribe to our channels on YouTube & Telegram &
Tamilnadu &
Pondicherry
