
ஆபரேஷன் சிந்தூரில் நாம் கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளோம். குறிப்பாக பாகிஸ்தானின் முக்கிய வான்வெளி சொத்துக்களை குறிவைத்து செயலிழக்கச் செய்துள்ளோம். ராவல்பிண்டியில் உள்ள முக்கியமான நூர் கான் விமான தளம் உட்பட அவர்களின் நான்கு விமான தளங்கள் மீது நாம் நடத்திய தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்தியாவுக்குள் ஆழமான ஊடுருவல் தாக்குதல்களை நடத்துவதற்கு முக்கியமான சொத்தாக இருந்த Il-78 நடுவானில் எரிபொருள் நிரப்பும் விமானம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. இலக்கு வைக்கப்பட்ட இரண்டு விமானங்களும் முழுமையாக அழிக்கப்பட்டதற்கான புகைப்பட ஆதாரங்கள் உள்ளன. இதேபோன்ற நடவடிக்கைகள் இப்பகுதியில் உள்ள ஷோர்கோட், முரிட்கே மற்றும் சர்கோதா போன்ற பிற விமான தளங்களிலும் மேற்கொள்ளப்பட்டன. இந்த தளங்களில் RT93 மற்றும் சீன இயந்திரங்கள் பொருத்தப்பட்ட J10 மற்றும் J7 விமானங்கள் நிறுத்த திட்டமிடப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read : ஸ்ரீநகரில் வான்வழி போர்! பாகிஸ்தான் தொடர் தாக்குதல் – இந்தியாவின் கடுமையான பதிலடி!
தெற்கு காஷ்மீர் பகுதியில், நமது தரைப்படைகளும் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளன. எல்லை தாண்டி 50க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் இராணுவ நிலைகளை நாம் வெற்றிகரமாக தாக்கி அழித்துள்ளோம். பாகிஸ்தான் இந்த தகவல்களை வெளியிடத் தயங்குவதால், உயிரிழப்பு புள்ளிவிவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றாலும், அவர்களின் செயல்பாட்டு திறன்களில் இதன் தாக்கம் கணிசமானது.
மேலும், இந்திய விமானப்படை ஸ்கைமெட் லோயிட்டரிங் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி பாகிஸ்தான் இராணுவத்தின் 14வது காலாட்பிரிவுக்குச் சொந்தமான FM 90 “சத்தா” Battery Command Post உட்பட உயர் மதிப்புள்ள இலக்குகளை தாக்கி அழித்துள்ளது. இந்த Command Postஐ அழித்தது அந்தப் பகுதியில் அவர்களின் ராக்கெட் மற்றும் ஏவுகணை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் திறனை கடுமையாக சீர்குலைக்கும். மூசா மற்றும் சர்கோதாவில் உள்ள விமான தளங்களிலும் நாம் துல்லியமான தாக்குதல்களை நடத்தியுள்ளோம்.
இந்தியா பாகிஸ்தான் இடையே தொடர்ந்த மோதல் போக்கை கைவிடுமாறு அமெரிக்கா இரண்டு நாட்டிடமும் கோரிக்கை வைத்துவந்தது. இது தொடர்பாக இரு நாட்டின் தலைவர்களிடமும் சமாதானப்பேச்சு வார்த்தை நடத்தியது. இந்த நிலையில், இரு நாடுகளும் இந்த மோதல் போக்கை நிறுத்துவதாக ஒப்புக்கொண்டன என அமெரிக்க அதிபர் அறிவித்தார். அதைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் அதிகாரிகள் இரு நாடுகளும் வான், கடல், தரை வழித் தாக்குதல்களை நிறுத்துவதாக அறிவித்தனர்.
Watch | Foreign Secretary Shri Vikram Misri on the implementation of ceasefire | Press Briefing on Operation Sindoor | 🇮🇳 pic.twitter.com/2EFykGONHP
— VELS MEDIA (@VelsMedia) May 10, 2025
இந்தியா போர் நிறுத்த முடிவை அறிவித்த சிறிது நேரத்திலேயே அரசு மாநாட்டில் பேசிய கமாண்டர் ரகு ஆர் நாயர், “இன்று எட்டப்பட்ட புரிதலை நாங்கள் கடைப்பிடிப்போம். அதே நேரத்தில் தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க நாங்கள் முழுமையாகத் தயாராகவும், எப்போதும் விழிப்புடனும், உறுதியுடனும் இருக்கிறோம். பாகிஸ்தானின் ஒவ்வொரு தவறான முயற்சியும் பலத்துடன் எதிர்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் ஏற்படும் ஒவ்வொரு தீவிரத் தாக்குதலுக்கும் ஒரு தீர்க்கமான பதிலை கொடுப்போம். தேசத்தைப் பாதுகாப்பதற்காகத் தேவைப்படும் எந்த நடவடிக்கைகளையும் தொடங்க நாங்கள் முழுமையாக செயல்பாட்டு ரீதியாக தயாராக இருக்கிறோம்” என்றார்.
இந்த நிலையில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் ஆர்.எஸ். புரா, அக்னூர், சம்ப் மற்றும் பிம்பர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வருகின்றன. காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்துகிறது.
🚨 BREAKING NEWS
Pakistan violates ceasefire along LoC in RS Pura, Akhnoor, Chamb & Bhimber. Heavy mortar shelling underway. pic.twitter.com/yyQhn571FX
— VELS MEDIA (@VelsMedia) May 10, 2025
பஞ்சாபில் உள்ள பட்டியாலா மாவட்ட நிர்வாகமும், ரூப்நகர் மாவட்ட நிர்வாகமும், பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதை அடுத்து உடனடியாக மின்சார துண்டிப்பை அமல்படுத்தியுள்ளன. எல்லை மாவட்டங்களில் பாகிஸ்தான் மீண்டும் ஷெல் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. மேலும், பல இடங்களில் ட்ரோன்கள் காணப்பட்டதால் விமானத் தாக்குதல் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு வருகிறது. ஸ்ரீநகரில் சுமார் 40-50 ட்ரோன்களை பாகிஸ்தான் ஏவியுள்ளது. இந்தியா அனைத்து ட்ரோன்களையும் செயலிழக்கச் செய்துள்ளது. ஸ்ரீநகரில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் உமர் அப்துல்லா, இந்த வெளிப்படையான அத்துமீறலுக்கு அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
What the hell just happened to the ceasefire? Explosions heard across Srinagar!!!
— Omar Abdullah (@OmarAbdullah) May 10, 2025
#BreakingNews | पाकिस्तान ने पठानकोट में की ड्रोन हमले की कोशिश..भारतीय सेना ने सारे ड्रोन मार गिराए। #IndiaTVwithIndianArmy #Pakistan #India #Ceasefire #DroneAttacks #Pathankot pic.twitter.com/xZqnfYONvg
— India TV (@indiatvnews) May 10, 2025
இந்தியாவின் பல பகுதிகளில் பாகிஸ்தான் மீண்டும் ஷெல் தாக்குதல்களையும், ட்ரோன் தாக்குதல்களையும் தொடங்கியதை அடுத்து, ஜம்மு காஷ்மீரின் கத்ரா மற்றும் பவன் பகுதிகளில் முழுமையான மின் தடை செய்யப்பட்டுள்ளது. சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட சில மணி நேரங்களிலேயே ஸ்ரீநகர், உதம்பூர், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் எல்லைக் கட்டுப்பாடு கோடு (LoC) வழியாக துப்பாக்கிச் சூடும், ட்ரோன் தாக்குதல்களும் நடைபெற்று வருகின்றன.
#BREAKING: Reports of Ceasefire Violation by Pakistan in various sectors of Jammu & Kashmir including Akhnoor. Artilery and small arms firing. Official word is awaited.
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) May 10, 2025
BREAKING: Confirmed—Big Pak drone attack over Srinagar, being engaged by our air defences. Just filmed this from my phone here. pic.twitter.com/6xPY0pdOM7
— Shiv Aroor (@ShivAroor) May 10, 2025
Several drones have been spotted in the Kutch district. A complete blackout will be implemented now. Please stay safe,Don’t panic.
— Harsh Sanghavi (@sanghaviharsh) May 10, 2025
கட்ச் மாவட்டத்தில் பல டிரோன்கள் தென்பட்டன. தற்போது முழு மின்வெட்டு அமல்படுத்தப்படும். தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள், பதற்றமடைய வேண்டாம் என்று குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி பதிவிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் பாகிஸ்தான் ட்ரோன்கள் (ஆளில்லா விமானங்கள்) காணப்பட்டதை அடுத்து, போர் நிறுத்த ஒப்பந்த மீறல் பதிவாகியுள்ளது. பதான்கோட் மற்றும் குர்தாஸ்பூர் பகுதிகளில் முழுமையான மின் தடை அமல்படுத்தப்பட்டதுடன், வான்வழி தாக்குதல் எச்சரிக்கை ஒலிப்பான்களும் ஒலிக்கப்பட்டன.
ஏப்ரல் 22ந் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் விதமாக கடந்த 7ந் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படை, பாகிஸ்தானிலும், ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்களை அழித்தது. இதற்கு எதிர்வினையாற்றும் விதமாகவும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவும் பாகிஸ்தான் ராணுவத் தாக்குதலை தொடங்கியது.
Courtesy : Major Madhan Kumar (Rtd)
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry