
நாம் சமையல் செய்த பாத்திரங்களை கழுவ ஸ்க்ரப்பர்கள் அல்லது ஸ்பாஞ்சுகளை பயன்படுத்துகிறோம். ஆனால் இவை எப்போதும் ஈரமாக, உணவுத் துகள்களுடன் இருக்கும். இது பாக்டீரியா செழித்து வளர உகந்த சூழலாக இருக்கிறது. எந்த வகையான மோசமான சூழலிலும் பல வகை பாக்டீரியாக்களுக்கு வசிக்கத் தெரியும். இதுபோன்ற பாக்டீரியாக்கள் வசிக்கத்தக்க பிரதான இடமாக சமையல் அறையில் பயன்படுத்தப்படும் ஸ்பாஞ்சுகள் இருக்கின்றன.
சாப்பிட்ட தட்டுகள், பாத்திரங்கள் போன்றவற்றை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் இந்த ஸ்பாஞ்சுகள் மொத்தமும் நுண்ணுயிர்களால் நிறைந்திருக்கின்றன. அவை பாக்டீரியாக்களுக்கு சொர்க்கமாக இருக்கின்றன. அவை ஈரப்பதத்துடன், நுண்ணுயிர்களுக்குத் தேவையான உணவுத் துகள்களுடன் நிறைந்து இருக்கின்றன.
Also Read : சனிக்கிழமைகளில் அசைவ உணவு சாப்பிடக்கூடாது..! ஏன் தெரியுமா..? Saturday Non-Veg Fast!
ஜெர்மனியின் ஃபர்ட்வான்கன் பல்கலைக்கழகத்தில் (Furtwangen University) நுண்ணுயிரியல் வல்லுநராக இருக்கும் மார்கஸ் எகர்ட், சமையலறையில் பயன்படுத்திய ஸ்பாஞ்ச்களில் நுண்ணுயிர்கள் வாழும் சூழல் குறித்த ஆய்வு முடிவை 2017ல் வெளியிட்டார். அந்த ஸ்பாஞ்சுகளில் 362 வகையான நுண்ணுயிர்கள் இருப்பதை அவர் கண்டறிந்தார். ஒரு சதுர சென்டிமீட்டரில் 54 பில்லியன் பாக்டீரியாக்கள் சில இடங்களில் காணப்பட்டதாக அதன் மூலம் தெரியவந்தது.
ஸ்பாஞ்ச்களில் ஏராளமான துளைகளும், பள்ளங்களும் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒரு நுண்ணுயிர்கள் தங்குவதற்கு உகந்தவையாக இருக்கின்றன. நுண்ணுயிர்களை பொருத்தவரை சில பாக்டீரியாக்கள் தனியாக வளர விரும்பும், சிலவற்றிற்கு மற்ற பாக்டீரியாவின் துணை தேவைப்படும். ஒரு ஸ்பாஞ்சிற்குள் பல விதமான அமைப்புகள் இருப்பதால் அனைத்து வகையான பாக்டீரியாக்களுக்கும் அவை சிறந்த வாழ்விடமாக இருக்கின்றன.

அதனால் அவற்றை பயன்படுத்தி பாத்திரங்களை சுத்தம் செய்வது நமது ஆரோக்கியத்திற்கு அபாயகரமானது என்று பொருளல்ல. பாக்டீரியாக்கள் நமது தோலில், மண்ணில் நம்மை சுற்றியுள்ள காற்றில் என அனைத்து இடங்களிலும் உள்ளன. அவை அனைத்தும் அபாயகரமானவையல்ல, சொல்லப்போனால் சில பாக்டீரியாக்கள் முக்கிய பணிகளை செய்கின்றன. ஆகவே முக்கிய கேள்வி, ஸ்பாஞ்ச்களில் இருக்கும் பாக்டீரியா பற்றிய கவலை அவசியமானதுதானா என்பதுதான்.
2017-ல் நடத்தப்பட்ட ஆய்வில் ஸ்பாஞ்சுகளில் அதிகமாக காணப்படும் பாக்டீரியாக்களின் டிஎன்ஏக்களை விஞ்ஞானிகள் வகைப்படுத்தினார்கள். ஒவ்வொரு பாக்டீரியாவின் இனத்தையும் கண்டறிவது சாத்தியமற்றதாக இருந்தாலும், பத்தில் ஐந்து பாக்டீரியாக்கள், குறைவான நோய் எதிர்ப்புச் சக்தி உள்ள மனிதர்களிடம் தொற்றை ஏற்படுத்த கூடிய பாக்டீரியாவுக்கு நெருங்கிய தொடர்புடையவையாக இருந்தன.
ஸ்பாஞ்சுகளை தூய்மைப்படுத்த மைக்ரோவேவ் அவனில் சூடாக்குவது, சூடான சோப் கலந்த நீரால் கழுவுவது போன்ற நடவடிக்கைகளும் உதவவில்லை. ஏனென்றால் அவை சில பாக்டீரியாக்களை கொன்றாலும், அதிக எதிர்ப்பாற்றல் உள்ள பாக்டீரியாக்களை பாதிக்கவில்லை. ஸ்பாஞ்ச்களை தூய்மைப்படுத்துவது ஒரு சில குறிப்பிட்ட வகை பாக்டீரியாக்களை மட்டும் அதிக அளவில் வளர வைக்கக் கூடிய ஒரு சூழலை உருவாக்கக்கூடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அந்த பாக்டீரியாக்கள் உணவு நஞ்சாதலுடனோ, மோசமான நோயுடனோ தொடர்புபடுத்தப்படவில்லை என்பதை புரிந்துகொள்வது முக்கியம். உண்மையில் உணவால் மருத்துவமனையில் சேர்க்குமளவு ஏற்படும் நோய்களில் 90% வெறும் 5 நோய்க்கிருமிகளால் ஏற்படுகின்றன. அவற்றில் மூன்று பாக்டீரியா – எஸ்ஷெரிகியா கோலை, சல்மெனெல்லா மற்றும் கேம்பலோபேக்டர். இவற்றை ஸ்பாஞ்ச்களில் காண்பது அரிது.
இவை குறைவான நோய் எதிர்ப்பாற்றல் உள்ளவர்கள், முதியோர் அல்லது குழந்தைகளுக்கு அபாயகரமானவையாக இருக்கலாம். பொதுவாக நல்ல ஆரோக்கியம் உள்ள ஒருவருக்கு, ஸ்பாஞ்சில் உள்ள பாக்டீரியாக்களால் அபாயம் இல்லை. 2022-ல் நார்வேயின் உணவு ஆராய்ச்சி நிறுவனமான நோஃபிமாவைச் சேர்ந்த விஞ்ஞானி சோல்வெய் லாங்ஸ்ரட் நடத்திய ஆய்வில், ஸ்பாஞ்ச்களில் உள்ள பாக்டீரியாக்களும், பிரஷ்களில் உள்ள பாக்டீரியாக்களும் ஒப்பீடு செய்யப்பட்டன.
இரண்டிலுமே தீங்கு விளைவிக்காத அசிணடோபாக்டர், கிரிஸோபாக்டீரியம், என்ஹைட்ரோபாக்டர், எண்டென்ரோபாக்டேரியாசியே, சூடோமோனாஸ் போன்ற பாக்டீரியாக்கள் கண்டறியப்பட்டன. ஆனால் மொத்தத்தில் பிரஷ்களில் ஒப்பீட்டளவில் குறைவான பாக்டீரியாக்களே இருந்தன. ஸ்பாஞ்சில் உள்ள பெரும்பாலான பாக்டீரியாக்கள் நோயை ஏற்படுத்துவதில்லை. அவை துர்நாற்றம் மட்டுமே ஏற்படுத்தப் போகின்றன.
ஸ்பாஞ்சில் வளரும் பாக்டீரியா பொதுவாக தீங்கு விளைவிப்பவை அல்ல என்றாலும், சால்மொனெல்லா போன்ற அபாயகரமான பாக்டீரியாக்கள் அங்கு வந்தால், ஸ்பாஞ்சின் அமைப்பு அந்த நோய்க்கிருமி வளர்வதற்கு உகந்த சூழலை கொண்டுள்ளது. ஆய்வாளர்கள் சால்மொனெல்லாவை சமையலறை ஸ்பாஞ்சில் செலுத்திய போது அவை நன்கு வளர்ந்தன. ஆனால் பிரஷ்களில் செலுத்திய போது அந்த கிருமிகள் இறந்துவிட்டன.
பிரஷ்கள் ஒவ்வொரு பயன்பாட்டுக்குமிடையில் நன்கு காய்ந்து பாக்டீரியாக்களை கொன்றுவிடுவது இதற்கு காரணமாக இருக்கலாம். அதே நேரம் ஸ்பாஞ்ச்கள் தினமும் பயன்படுத்தப்பட்டால் அவை உட்புறம் தொடர்ந்து ஈரப்பதமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால், நோய் உருவாக்கும் பாக்டீரியா பின்னர் ஸ்பாஞ்சிலிருந்து உங்கள் பாத்திரங்களுக்கு மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.
Also Read : இரவு படுத்தவுடன் தூங்க உதவும் டிப்ஸ்! பகலில் இந்த பழக்கத்தை பின்பற்றுங்கள்..! டீப் ஸ்லீப் உறுதி!
ஆரோக்கியம் என்ற கோணத்தில் பார்க்கும் போது ஸ்பாஞ்சுகளை வாரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். கூடுதலாக சில நாள்களுக்கு பயன்படுத்த விரும்பினால் டிஷ் வாஷர் மூலம் நான்றாக சுத்தம் செய்து காய வைத்து பயன்படுத்தலாம். அதேபோல, சோப்பு மற்றும் கொதிக்கும் நீரில் ஸ்பாஞ்சை போடுவது பெரும்பாலான பாக்டீரியாவை கொன்றுவிடும். ஸ்பாஞ்சை சிங்க்கிலேயே விட்டுவைக்காமல் ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் அவற்றை காய விட வேண்டும். பயன்படுத்தியபிறகு தண்ணீரை பிழிவது மற்றும் உணவு துகள்களை அகற்றுவது ஆகியவற்றையும் செய்வது அவசியம்.
Image Source : Getty Image.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry