இளநீருக்குள் தண்ணீர் எப்படி செல்கிறது தெரியுமா? 90 சதவிகிதம் பேருக்கு தெரியாத ரகசியம் இதுதான்!

0
94
Ever wondered how tender coconuts produce their refreshing water? Discover the natural biological process behind coconut water formation.

வெயில் காலம் வந்ததும் பலரின் பிரதான பானமாக இருப்பது இளநீர் தான். இளநீர் உடலின் சூட்டை தணிக்கும் என்பதால் கோடைகாலத்தில் இதனை பருகுவார்கள். மற்ற பழங்களில் இருந்து அதனை பிழியும் போது சாறு வருகிறது, அதனை பருகுவோம். ஆனால் இளநீரில் மட்டும் எப்படி அதனுள் தண்ணி இருக்கிறது என்று எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறோமா?

ஒரு மரத்தின் உச்சியில் இருக்கும் தேங்காய் ஓட்டுக்குள், இனிப்பான, குளிர்ந்த நீர் எப்படி இருக்கிறது? அமெரிக்காவின் தேசிய உயிரியல் தொழில்நுட்ப தகவல் மையம் சமீபத்தில் ஓர் ஆய்வு மேற்கொண்டது. அதில் தேங்காயின் உள்ளே எப்படி தண்ணீர் இருக்கிறது என்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தேங்காய் ஓட்டுக்குள் நீர் எவ்வாறு உருவாகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு முன், அதன் அமைப்பை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

Also Read : ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கணும்? உடலுக்கு தண்ணீர் தேவையை எப்படி கண்டுபிடிப்பது தெரியுமா?

எக்ஸோகார்ப், மீசோகார்ப் மற்றும் எண்டோகார்ப் எனப்படும் மூன்று அடுக்குகளைக் கொண்டது இளநீர். எக்ஸோகார்ப் என்பது இளநீரின் வெளிப்புற அடுக்கு. இது பச்சை நிறத்திலும் மென்மையாகவும் இருக்கும். பச்சை அடுக்கின் கீழ் உள்ள நார் நிறைந்த பகுதி மீசோகார்ப் என்று அழைக்கப்படுகிறது. எண்டோகார்ப் என்பது உள் மையப்பகுதி. எண்டோகார்ப் உள்ளே உள்ள வெள்ளை வழுக்கையை பாதுகாக்கிறது.

எண்டோகார்ப் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒன்று வழுக்கை, இது எண்டோஸ்பெர்ம் என்று அழைக்கப்படுகிறது. இளம் தேங்காய்களில் மென்மையாகவும் ஜெல்லி போலவும் இருக்கும் இந்த வழுக்கை, தேங்காய் முதிர்ச்சியடையும் போது கடினமடைகிறது. இரண்டாவது உள்ளே இருக்கும் நீர்.

How does a coconut get filled with water? This article explains the natural mechanisms and biological processes involved in tender coconut water production.

நீர் எப்படி வருகிறது?

அமெரிக்காவின் தேசிய உயிரி தொழில்நுட்ப தகவல் மையத்தின் ஆய்வின்படி, தேங்காயில் உள்ள நீர் ஒரு வடிகட்டப்பட்ட திரவமாகும். மரத்தில் உள்ள வாஸ்குலர் அமைப்பு மூலம் (தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்லும் அமைப்பு), வேர்களில் இருந்து நீர் தேங்காய்க்குச் செல்கிறது என்று அந்த ஆய்வு கூறுகிறது. குறிப்பாக மரத்தில் உள்ள xylem நாளங்கள், நீர் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தென்னை மரத்தின் வேர்கள் தரையில் இருந்து பூமிக்குள் சுமார் 1 முதல் 5 மீட்டர் ஆழம் வரை நீண்டுள்ளன. இந்த வேர்கள் சுற்றியுள்ள மண்ணிலிருந்து ஊட்டச்சத்துக்கள் கொண்ட நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன. இந்த நீர் பின்னர் அதன் தண்டு வழியாக மேல்நோக்கி கொண்டு செல்லப்பட்டு இறுதியாக தேங்காயை அடைகிறது. தேங்காயின் எண்டோகார்ப் அமைப்பு இந்த தண்ணீரை சேமிக்கிறது. இந்த ஊட்டச்சத்து நிறைந்த நீர், இளநீர் ஆக மாறி அது முதிர்ச்சியடையும் போது ஒரு வெள்ளை வழுக்கையை அதாவது தேங்காயை உருவாக்குகிறது.

Also Read : சாமிக்கு தேங்காய், வாழைப்பழம் படைப்பதன் பின்னணி! முன்னோர்கள் சும்மா சொல்லிட்டு போகலைங்க..!

இளநீரில் என்னென்ன இருக்கிறது?

இளநீரில் சுமார் 95 சதவீதம் தண்ணீர் உள்ளது, அதனால்தான் இது உடலை நீரேற்றம் செய்யும் ஒரு அதிசய திரவமாகக் கருதப்படுகிறது. மீதமுள்ள 5 சதவீதத்தில் நமக்கு மிகவும் நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இளநீரில் உள்ள சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்கள் நரம்புகள் மற்றும் தசைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கின்றன. அமினோ அமிலங்கள் மற்றும் நொதிகள் போன்ற புரதங்கள், வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன. பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் போன்ற சர்க்கரைகள் தண்ணீருக்கு இனிப்பு சுவையைத் தருகின்றன. அதோடு இதில் வைட்டமின் சி மற்றும் பி வைட்டமின்களும் உள்ளன.

Image Credit : verywellfit.

ஒரு தேங்காய் ஓட்டுக்குள் எவ்வளவு தண்ணீர் இருக்கும்?

தேங்காயில் உள்ள நீரின் அளவையும், தரத்தையும் பல காரணிகள் தீர்மானிக்கின்றன. அவற்றில் ஒன்று தேங்காயின் வயது. ஆறு முதல் எட்டு மாதங்கள் வயதுடைய தேங்காய்கள் இளநீராகக் கருதப்படுகின்றன. அவற்றில் 300 மில்லி முதல் ஒரு லிட்டர் தண்ணீர் வரை உள்ளது.

முதிர்ந்த தேங்காய்கள், அதாவது 12 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்டவை, குறைவான தண்ணீரைக் கொண்டுள்ளன. எண்டோஸ்பெர்ம் அதாவது உள்ளே இருக்கும் வழுக்கை தண்ணீரை உறிஞ்சுவதால் அவை குறைவான நீரைக் கொண்டிருக்கின்றன.

Explore the inner workings of a tender coconut and understand the step-by-step process of how it creates its unique and nutritious water. Getty Image.

மழைப்பொழிவும் இதில் பங்கு வகிக்கிறது. அதிக மழை என்றால் அதிக நீர், தேங்காயை அடைகிறது. வறண்ட பகுதியில் தென்னை மரங்கள் வளரும்போது, குறைவான நீர் தேங்காயை அடைவதால் அதற்குள் குறைந்த நீரே சேருகிறது. கனிம வளம் நிறைந்த மண்ணில் வளர்க்கப்படும் மரங்கள் மிக உயர்ந்த தரமான, ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீரைப் பெறுகின்றன.

மண் கனிம வளம் நிறைந்ததாக இல்லாவிட்டாலோ, வேர்களில் இருந்து காய்களுக்கு ஊட்டச்சத்துக்களை எடுத்துச் செல்ல முடியாவிட்டாலோ நீரின் தரம் சுமாராக இருக்கும். ஆரோக்கியமற்ற, நோயுற்ற மரங்கள் சிறிய காய்களை உற்பத்தி செய்கின்றன. அவற்றிலும் மிகக் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே இருக்கும். மண் பரிசோதனை மற்றும் இயற்கை உரங்களைப் பயன்படுத்துதல் போன்ற நிலையான விவசாய முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், தென்னை மரங்களில் ஊட்டச்சத்துக்களைப் பாதுகாக்க முடியும். இதன் மூலம் தரமான இளநீரை உற்பத்தி செய்யலாம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry