இஞ்சி துண்டுகளை 48 நாள் தேனில் ஊற வைத்து… தேரையர் சித்தர் கூறிய ரகசியம்! ஆரோக்கியத்தின் அமிர்தம்!

0
29
Tired of everyday discomforts? Learn how simple ginger soaked in honey can be your natural go-to for soothing colds, aiding digestion, combating inflammation, and enhancing daily energy. Getty Image.

“தேனும், இஞ்சியும் அருமருந்து” – நம் முன்னோர்கள் காலம் காலமாகச் சொல்லி வந்த ஒரு கூற்று. இதன் அறிவியல் பூர்வமான உண்மையை நவீன ஆராய்ச்சிகள் இன்று உறுதிப்படுத்துகின்றன.

இந்த இரண்டு மகத்தான இயற்கைப் பொருட்களும் தனித்தனியே மருத்துவ குணங்கள் நிறைந்தவை என்றால், அவை ஒன்றாக இணையும்போது கிடைக்கும் நன்மைகளை வார்த்தைகளில் அடக்க முடியாது! குறிப்பாக, இஞ்சியை தேனில் ஊறவைத்துச் சாப்பிட்டால் கிடைக்கும் அசாத்தியமான ஆரோக்கியப் பலன்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

Also Read : தினமும் இஞ்சி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? மூட்டு வலி தொடங்கி புற்றுநோய் வரை…!

இஞ்சி – ஒரு தனிப்பெரும் மூலிகை:

இஞ்சியில் காணப்படும் இஞ்சிரோல் (Gingerol) கலவை மற்றும் வைட்டமின் C, B1, B2 போன்ற அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் உடலின் பல நோய்களுக்குச் சிகிச்சையளிப்பதில் நன்மை பயக்கும். இதன் மருத்துவ குணங்கள் எண்ணற்றவை.

இதய ஆரோக்கியம்: இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் பிரத்யேகமான குணத்தை இஞ்சி பெற்றிருக்கிறது. இதனால்தான் அசைவ உணவுகளில் கட்டாயம் இஞ்சி சேர்த்து சமைக்கப்படுகிறது. இது உணவு செரிமானமாவதோடு மட்டுமல்லாமல், ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுத்து, மாரடைப்பு ஏற்படாமலும் தடுக்கிறது. இஞ்சியில் உள்ள கனிமச்சத்துக்கள் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் (anti-inflammatory properties) இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்க உதவும். பழங்காலத்தில் இதயப் பிரச்சனைகளுக்கு இஞ்சி தான் பயன்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

கொழுப்பைக் குறைக்கும் சக்தி: ரத்தக்கட்டு குறையைச் சரிசெய்வதுடன், உடலிலுள்ள கெட்ட கொழுப்பைக் கரைப்பதில் இஞ்சிக்கு நிகர் வேறில்லை. இது உடல் எடை குறைப்பு முதல் வயிற்று கோளாறுகள் வரையிலான பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது.

ஆற்றல் மற்றும் சுறுசுறுப்பு: தேன் மற்றும் இஞ்சி கலவையில் கார்போஹைட்ரேட்டுகள் ஏராளமான அளவில் உள்ளன. தேனில் உள்ள இனிப்புச் சுவையளிக்கும் சுக்ரோஸ், உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது. நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் செயல்பட விரும்பினால், அவ்வப்போது தேனில் ஊறவைத்த இஞ்சியைச் சாப்பிடலாம்.

Also Read : சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடலாமா? தேன் சாப்பிவதால் ஏற்படும் நன்மைகள், தீமைகள்!

தேன் – இயற்கையின் இனிமையான வரம்:

தேனை அடிக்கடி உட்கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் கிடைக்கும்.

  • உடல் எடை குறைப்பு: தேன் உடல் எடையைக் குறைக்க உதவும் என்பது பலருக்கும் ஆச்சரியமான தகவல்.
  • ரத்த ஓட்டம்: ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, ரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் கட்டுப்படுத்தி, ரத்த ஓட்டத்தையும் வேகப்படுத்துகிறது. அதனால்தான், தேன் சாப்பிடுபவர்கள் எப்போதுமே சுறுசுறுப்பாகக் காணப்படுவார்கள்.
  • சளி, இருமல், காய்ச்சல் நிவாரணம்: காய்ச்சல், சளி, இருமல் அதிகமாக இருந்தால், வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்து குடிப்பது உடனடி நிவாரணம் அளிக்கும்.

Also Read : குக்கர் சாதம் சர்க்கரை நோயை வரவழைக்கும் என்பது உண்மையா? மருத்துவர் சொல்லும் அதிர்ச்சித் தகவல்..!

தேனில் ஊறவைத்த இஞ்சி: ஒரு ஒருங்கிணைந்த சக்தி!

தேன், இஞ்சி இரண்டுமே தனித்தனியே மருத்துவ நன்மைகளைத் தரக்கூடியவை என்பதால், இவைகளை ஒன்றாகச் சேர்த்துச் சாப்பிடும்போது கிடைக்கும் பலன்கள் பலமடங்கு அதிகம்.

வயிற்றுப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி: தேனில் ஊறவைத்த இஞ்சி சாப்பிட்டால், வயிறு உப்புசம், வயிறு வலி, அஜீரணம் உள்ளிட்ட வயிறு உபாதைகள் அத்தனையும் நீங்கும். இது வயிற்றில் உள்ள அதிகப்படியான வாயுவை வெளியேற்றவும் பெரிதும் உதவியாக இருக்கும். முக்கியமாக, அஜீரணப் பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள், உணவு உட்கொண்ட பின் தேனில் ஊறவைத்த இஞ்சியை ஒரு துண்டு சாப்பிட்டால் செரிமானம் சிறப்பாக நடைபெறும்.

புற்றுநோய் தடுப்பு: தேனில் ஊறவைத்த இஞ்சியை தினமும் சாப்பிட்டு வரும்போது, புற்றுநோய் அபாயத்திலிருந்தும் விடுபடலாம் என்கிறார்கள் நவீன மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். இஞ்சி புற்றுநோய் செல்களை அழித்து, புற்றுநோய் உடல் முழுவதும் பரவுவதைத் தடுப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்துமா மற்றும் சுவாசப் பிரச்சனைகள்: ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள், சளி, இருமலால் அவதிப்படுபவர்கள் தினமும் தேனில் ஊறவைத்த இஞ்சியைச் சாப்பிடலாம். இது சுவாசப் பாதையில் ஏற்படும் அழற்சியைக் குறைத்து, மூச்சுத் திணறலைச் சீராக்க உதவும்.

மூட்டுவலிக்கு நிவாரணம்: ஆர்த்ரிடிஸ் (Arthritis) மற்றும் மூட்டுவலி தொந்தரவு உள்ளவர்கள் தேனில் ஊறவைத்த இஞ்சியைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வது நன்மை பயக்கும். இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகளான ‘ஜின்ஜெரால்’ (Gingerol) என்னும் பொருள் தான், மூட்டுவலியைக் குறைக்க உதவுகிறது.

சர்க்கரை நோய் கட்டுப்பாடு: இஞ்சி உடலில் ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது. சர்க்கரை நோய் வருவதற்கான அபாயத்தையும் இது குறைக்கும். வளரும் பிள்ளைகளுக்குத் தினமும் தேனில் ஊறவைத்த இஞ்சியை ஒரு துண்டு கொடுத்து வந்தால், சர்க்கரை நோயும், ரத்த அழுத்தப் பிரச்சனையும் அவர்களை அண்டவிடாமல் தடுக்கலாம். இது உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றம் செய்யும் நொதிகளின் உற்பத்தியிலும் பங்கு கொள்ளும்.

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்: இஞ்சி மற்றும் தேன் கலவை நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்துகிறது. இவற்றில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உடலை நோய்களிலிருந்து விலக்கி வைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகின்றன.

இளமைப் பொலிவு: உடலைத் தாக்கும் தீங்கு விளைவிக்கும் ‘ப்ரீ-ராடிக்கல்களினால்’ (free radicals) ஏற்படும் அபாயத்தை இஞ்சி தடுப்பதுடன், டிஎன்ஏ பாதிப்பைத் தடுத்து, விரைவில் முதுமை தோற்றத்தைப் பெறாமலும் தடுக்கும். எனவே, நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்க வேண்டுமானால், தினமும் தேனில் ஊறவைத்த ஒரு துண்டு இஞ்சியே போதும் என்கிறார்கள்.

Also Read : காலையில் காபி குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? – ‘சயின்ஸ்’ சொல்லும் அதிர்ச்சித் தகவல்!

தேனில் ஊறவைத்த இஞ்சி – தயாரிப்பு முறை:

கடைகளில் தேனில் ஊறவைத்த இஞ்சி விற்கப்பட்டாலும், இதை நாமும் வீட்டிலேயே எளிதாகத் தயார் செய்யலாம்.

முறை 1 (எளிய முறை): இஞ்சியைத் தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, சுத்தமான தேனில் 48 நாட்கள் ஊறவைத்தால் போதும்.

முறை 2 (சித்த மருத்துவ முறை): முற்றிய இஞ்சியை எடுத்து தோல் சீவி, துருவிக்கொள்ள வேண்டும். இந்தத் துருவல் இஞ்சியை இட்லி தட்டில் வைத்து ஆவியில் 10 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்குப் பிறகு, ஒரு கண்ணாடி பாட்டிலில் வேகவைத்த இஞ்சி துருவலுடன் சுத்தமான தேன் கலந்து 21 நாட்கள் ஊறவைக்க வேண்டும். 48 நாட்கள் ஊறவைத்தால் இன்னும் சிறப்பு.

சித்த மருத்துவக் குறிப்பு: தேனில் ஊறவைத்த இஞ்சியைத் தொடர்ந்து 48 நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு எடுத்துக்கொள்வதால் ‘பிரதமை போன்று, நிலவு போல உடல் பொலிவுடன் இருக்கும்’ என்று தேரையர் சித்தர் சொல்லியிருக்கிறார். இது ஒரு ‘காயகற்ப மூலிகை’ என்பதால், இதை எடுத்துக்கொள்ளும்போது, காரம், புளி ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். உப்பு கொஞ்சமாக சேர்த்துக்கொள்ளலாம். அதேபோல், காயகற்ப மூலிகைகளை எடுத்துக்கொள்ளும்போது, ‘இச்சா பத்தியம்’ என்று சொல்லக்கூடிய உடலுறவு தவிர்க்கப்பட வேண்டும் என்பதும் சித்தர்களின் அறிவுரை.

இந்த தேன்-இஞ்சி கலவை, நம் ஆரோக்கியத்திற்கான ஒரு எளிய, சக்திவாய்ந்த தீர்வு என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் அன்றாட வாழ்வில் இதைச் சேர்த்துக்கொண்டு, ஆரோக்கியமான மாற்றத்தை உணருங்கள்!

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &