வைகாசி மாத ராசிபலன்கள் 2025! ஐந்து ராசிக்காரர்களுக்கு டாப்..! இந்த ராசிக்காரங்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துங்க!

0
98
May 2025 Tamil horoscope reveals lucky signs and health alerts! Find out if your zodiac ranks in the top 5 or needs extra care this Vaikasi. Image - Chat GPT

சூரிய பகவான் ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாத காலம் சஞ்சரிக்க கூடியவர். ஒவ்வொரு ராசிக்கு மாறும்போது ஒவ்வொரு தமிழ் மாதம் பிறக்கும். அதே போல மே 14ஆம் தேதி மாலை 5:41 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகி உள்ளார். இதனால் வைகாசி மாதம் பிறக்கிறது. ஜூன் 14ல் வைகாசி மாதம் நிறைவடைகிறது. இந்த மாதத்தில் வித்வாத யோகம், புதாதித்ய ராஜயோகம் என இரு யோகங்கள் உருவாகின்றன.

இதன் காரணமாக ரிஷபம் மற்றும் கன்னி உள்ளிட்ட ஐந்து ராசிகளுக்கு வாழ்க்கையில் பல்வேறு விதத்தில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள். திருமணம் போன்ற சுப காரியங்களும் நடக்க உள்ளன. சிம்மம், கும்பம், மகரம், கடகம் ராசிக்காரர்கள் உடல் நிலையில் கவனம் செலுத்துவது அவசியம்.

Also Read : Guru Peyarchi 2025: மகரம் முதல் மீனம் வரை..! குருப்பெயர்ச்சி பலன்கள்! Part – 4 (All Rasi’s)

விசுவாவசு தமிழ் வருடத்தின் இரண்டாவது மாதமான வைகாசி மாத ராசி பலன்களை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த மாதம் எந்ததெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் ? எந்த வழிபாட்டை மேற்கொள்வது நல்லது உள்ளிட்ட தகவல்களை தெரிந்துகொள்வோம்.

மேஷம்

வைகாசி மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாதமாகும். உங்கள் ராசியில் குரு பகவான் மூன்றாம் இடத்திற்கு வந்திருப்பதால் லாபஸ்தானம் காரணமாக பொருளாதாரம் நன்றாக இருக்கும். வருமானம் உயரும், தொழில் வளர்ச்சி பெருகும். ஆரோக்கியத்தில் சிறு சிறு தொல்லை வரும். துர்க்கை வழிபாடு செய்தால் உங்களுடைய துயரங்கள் நீங்கும்.

ரிஷபம்

இந்த மாதம் ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் சிறப்பாக இருக்கப் போகிறது. வெற்றிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்க போகிறீர்கள். அயல்நாட்டு வாய்ப்புகள் கிடைக்கும். வைகாசி மாதத்தில் ரிஷப ராசியை சேர்ந்தவர்களுக்கு போட்டிகள் குறையும். சரியான இலக்குடன் செயல்பட்டால் வெற்றி மேல் வெற்றி எதிர்பார்க்கலாம். சொந்த தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் உருவாகும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு உண்டு. வேலையில் முன்னேற்றம் உண்டாகும்.மாணவர்கள் படிப்பில் சிறப்பான வெற்றியை பெறுவார்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். இந்த மாதம் புதன் மிதுன ராசிக்கு செல்வதால் மாதத்தின் பிற்பாதி மகிழ்ச்சியாக இருக்கும். நந்தி வழிபாடு செய்யுங்கள்.

மிதுனம்

இந்த வருடம் உங்கள் ராசியிலேயே குருபகவான் இருக்கிறார். எனவே இல்லத்தில் சுப காரியங்கள் நடக்கும், விட்டு விலகிய கூட்டாளிகள் இணைவார்கள், பண விரயம் குறைந்துவிடும், வருமானம் உயரும். குரு பகவானை தொடர்ந்து வழிபடுங்கள்.

கடகம்

வைகாசி மாதம் உங்களுடைய தொழில் மந்தமாக இருக்கலாம். குடும்பத்தில் அனுசரித்து செல்வது நல்லது. வைகாசி 25ற்கு பிறகு மகிழ்ச்சியாக இருந்தாலும், இந்த மாதம் முழுக்க எச்சரிக்கையுடனும் கவனமாகவும் இருங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை, வேலைப் பளு அதிகரிக்கும. நாக தெய்வ வழிபாடு செய்யுங்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு வைகாசி மாதம் லாபம் சிறப்பாக இருக்கும். மன குழப்பம் ஏற்படலாம். எனவே தெளிவாக சிந்தனை தேவை. விநாயகப் பெருமானை அருகம்புல்லுடன் வழிபாடு செய்யவும்.

கன்னி

இம்மாத கன்னி ராசிக்காரகளுக்கு சுப விரயம் அதிகரிக்கும். வாகன யோகம் உண்டு. 10ல் குரு இருப்பதால் பதவி மாற்றங்களும் உண்டு. இடமாற்றம், வீடு மாற்றம், மனை மாற்றம், உத்தியோக மாற்றம் என்று பல்வேறு விதமான மாற்றங்களைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உங்கள் சிறப்பான செயல்பாட்டிற்கான பாராட்டைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை மேம்படும். உடன் பிறப்புகளுடனான மனக்கசப்பு விலகும். பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம். சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய தொழிலில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நிதிநிலை முன்னேற்றம் தரக்கூடியதாக அமையும். புதிய திட்டங்கள், ஒப்பந்தங்கள் மூலம் லாபம் அடைவீர்கள். கன்னி ராசிக்காரர்களுக்கு நரசிம்மர் வழிபாடு மிக மிக முக்கியம்.

துலாம்

உங்கள் ராசியை குரு பார்ப்பதால் தொழில் முன்னேற்றம் சிறக்கும். புதனின் பெயர்ச்சிக்கு பிறகு மிகுந்த நன்மைகளை பெற போகிறீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும், கல்யாண கனவு நிறைவேறும். பெரிய முயற்சிகள் அனைத்தும் லாபத்தையும், சந்தோஷத்தையும், அனுகூலத்தையும் ஏற்படுத்தும், புதன்கிழமையில் மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் உணவு தானம் கொடுத்து வந்தால், குடும்பத்தில் சுபகாரியங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடப்பது கண்கூடாகப் பார்க்கலாம். இழுபறியாக இருந்து வந்த நிலைமை படிப்படியாக மாறும். அரசு உத்தியோகத்தில் இருப்பவர்கள், அரசியல்வாதிகள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். யாரோ ஒருவர் செய்த தவறுக்கு நீங்கள் பதில் சொல்லக்கூடிய சூழ்நிலையும், மன அழுத்தமும் ஏற்பட்டுவிடும். அனுமனை வழிபடுங்கள். பெருமாள், தாயார் வழிபாடு அனுகூலத்தை ஏற்படுத்தி தரும்.

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு இம்மாதம் வாக்கு மேன்மை உண்டு. செல்வாக்கு அதிகரிக்கும், செல்வ வளம் பெருகும், நட்பு வட்டாரம் விரிவடையும். வண்டி, வாகன சேர்க்கை உண்டாகும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டு. தொழில் தொடர்பாக முன்னேற்றமும், உங்கள் வாழ்க்கையில் புகழும் அதிகரிக்கும். வேலை, வியாபாரம் தொடர்பாக புதிய வாய்ப்புகள் அதிர்ஷ்டசாலியாக உணர வைக்கும். குடும்பத் தொழில் சாதகமான பலனைத் தரும். குடும்பத்திலும், பணியிடத்திலும் பிறரின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். சமூகத்தில் நற்பெயர் அதிகரிக்கும். தங்கம், வெள்ளி வாங்க முனைப்பு காட்டுவீர்கள். முருகப்பெருமானை தவறாமல் வழிபடுங்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு குருவின் பார்வை இருப்பதால், திட்டமிட்ட காரியம் நடக்கும். அயல்நாடு கனவு கனிந்து எட்டக்கூடும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வீடு வாங்கும் யோகம் உண்டு. நரசிம்மர் வழிபாட்டை மேற்கொள்ளவும்.

மகரம்

உங்கள் ராசியில் 6ல் குரு இருக்கிறார். எனினும் திட்டமிட்ட சில காரியங்கள் திசை மாறி செல்லலாம். கொள்கை பிடிப்போடு செயல்படுவதில் சிரமம் இருக்கும். மனக்கவலை அதிகரிக்கும், யாரையும் நம்பி பொறுப்பை ஒப்படைக்காதீர்கள், எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. அனுமனை வழிபட்டு ஆனந்தம் பெற முயற்சிக்கவும்.

கும்பம்

கும்ப ராசி சேர்ந்தவர்களுக்கு வைகாசி மாதம் மிகவும் முன்னேற்றம் தரக்கூடிய மாதமாக அமையும். நீங்கள் செய்யக்கூடிய சொந்த தொழிலில் ஸ்திரத்தன்மை உண்டாகும். பணியிடத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு பெறலாம். உங்களுக்கு நற்பெயர் அதிகரிக்கும். உத்தியோகத்தில் நிர்ணயத்தை இலக்கை அடைய முடியும். உங்கள் கனவுகள் நிறைவேற கூடிய காலமாக அமையும். குடும்ப உறவுகள் மேம்படும். தொழில் சார்ந்த முயற்சிகளில் வெற்றி உண்டாகும். நண்பர்களின் ஆதரவு பெருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும், பொருளாதார பற்றாக்குறை அகலும், திட்டமிட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். சில சில பிரச்னை வரும். துணையுடனான சிக்கலை தவிர்க்கவும்.

மீனம்

வைகாசி மாதம் மீன ராசிக்கு பலவிதத்தில் நன்மை கிடைக்கக்கூடியதாக அமையும். வேலையில் பதவி உயர்வு பெறலாம். பொருளாதார நிலை முன்னேற்றம் அடையும். வியாபாரம் தொடர்பாக நிறைய லாபத்தை பெறலாம். புதிய வேலை முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் நலம் மேம்படும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். புதிய தொழிலை தொடங்க நினைப்பவர்களுக்கு நிதி ரீதியான முன்னேற்றம் உண்டாகும். உங்களுடைய சிந்தனைக்கு வெற்றி கிடைக்கும். எனினும் விரயங்கள் அதிகரிக்கும். அனுபவசாலிகளின் ஆலோசனை பெறவும். சனிக்கிழமை தோறும் விநாயகர் வழிபடுங்கள்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry