தமிழகக் கல்விக் கொள்கைக் குழுவின் முக்கிய பரிந்துரைகள் கசிந்தன! NEET – JEE கோச்சிங் சென்டர்களுக்குத் தடை, RTE நிதி நிறுத்தம்!

0
80
Explore the leaked recommendations of Tamil Nadu's SEP committee, including a blanket ban on parallel coaching centres, a focus on caste-free curriculum, and strict control over deemed/foreign universities.

சென்னை, ஜூன் 10, 2025: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு (NEP) மாற்றாக, தமிழ்நாட்டுக்கென ஒரு தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கையை (SEP) வகுக்க அமைக்கப்பட்ட நீதிபதி டி.முருகேசன் தலைமையிலான உயர்மட்டக் குழு, சில அதிரடியான பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி அரசிடம் வழங்கப்பட்ட இந்த 550 பக்க அறிக்கை, இன்னும் பொதுவெளியில் வெளியிடப்படாத நிலையில், முக்கிய அம்சங்கள் கசிந்துள்ளன.

A high-level committee constituted to formulate the State Education Policy submits its recommendations to Tamil Nadu CM MK Stalin, in Chennai, Monday, July 1, 2024.

கோச்சிங் சென்டர்களுக்குச் சாட்டையடி: ஏன் இந்த பரிந்துரை?

இந்தக் குழுவின் முக்கியப் பரிந்துரைகளில் ஒன்று, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இணையாகச் செயல்படும் அனைத்துக் கோச்சிங் சென்டர்கள் மற்றும் டியூஷன் சென்டர்களைத் தடை செய்ய வேண்டும் என்பதுதான். “இத்தகைய தவறான நடைமுறைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அர்த்தமற்றதாகிவிடும்.

கோச்சிங் சென்டர்கள் அரசின் எந்த ஒழுங்குமுறை அமைப்பின் கீழ் வருவதில்லை. இது குறித்து அரசு உடனடியாக ஒரு ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்கி உரிய அதிகாரங்களுடன் செயல்பட வேண்டும்,” என்று நீதிபதி முருகேசன் குழு தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் சுமார் இரண்டு லட்சம் பேர் நீட் (NEET), ஜேஇஇ (JEE), கேட் (CAT) போன்ற போட்டித் தேர்வுகளுக்காகக் கோச்சிங் சென்டர்களில் பயிற்சி பெறுகின்றனர். பல பள்ளிகள் 6ஆம் வகுப்பு முதலே இத்தகைய ஒருங்கிணைந்த பயிற்சிகளை அளிக்கின்றன. தனியார் கோச்சிங் சென்டர்களுக்கு முழுமையான தடை விதிப்பது நடைமுறையில் சாத்தியமற்றதாகத் தோன்றினாலும், இந்தக் குழுவின் பரிந்துரை கல்விக் களத்தில் ஒரு பெரிய விவாதத்தை எழுப்பும் என்பதில் சந்தேகமில்லை.

Also Read : ஈகோ யுத்தத்தால் பாழாகும் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம்! மோடி அரசு மீது பழிபோட்டுவிட்டு தப்பிக்கப்பார்க்கும் ஸ்டாலின் அரசு!

பிற அதிரடிப் பரிந்துரைகள்: கல்விச் சமத்துவத்திற்கான நோக்கம்?

இத்திட்டத்தின் பிற முக்கியப் பரிந்துரைகளில் சில:

  • RTE சேர்க்கைகளுக்கான நிதி நிறுத்தம்: கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான செலவினங்களை அரசு ஈடுசெய்வதை நிறுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது அரசின் நிதிச் சுமையைக் குறைக்கும் ஒரு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
  • மழலையர் பள்ளி வயது: மழலையர் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கான வயது வரம்பை ஜூலை 31ஆம் தேதி நிலவரப்படி மூன்று வயதாக நிர்ணயிக்க வேண்டும்.
  • சாதி ஒழிப்புப் பாடங்கள்: பாடத்திட்டத்தில் சாதி அமைப்பின் தீமைகளை எடுத்துரைக்கும் உள்ளடக்கத்தைச் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. “சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மை கட்டமைப்புகளை பாடத்திட்டம் எடுத்துரைக்க வேண்டும், மேலும் சமத்துவத்தை நோக்கிச் செயல்பட வேண்டும். சாதி ஒழிப்பு என்ற சமூக இலக்கிற்காக, நமது சமூகத்தில் நிலவும் தீமையை பாடத்திட்டம் அவசியம் கவனிக்க வேண்டும்,” என்று அறிக்கை கூறுகிறது.
  • நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் கட்டுப்பாடு: மாநிலத்தில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை ஒழுங்குபடுத்த ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு அவற்றின் சேர்க்கை நடைமுறைகள், மாநில மாணவர்களுக்கான இடஒதுக்கீடு, கல்விக் கட்டணம், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்களுக்கான ஊதியக் கட்டமைப்பு மற்றும் மாநில இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றுதல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும்.
  • வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குத் தடை: வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் நுழைவது “மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் தற்போதைய கட்டமைப்பு மற்றும் கருத்துக்கு ஒரு பெரிய சவாலாக” இருப்பதால், அவற்றின் நுழைவைத் முடிந்தவரை கட்டுப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

Also Read : விவசாயிகள் வறட்சியை எதிர்கொள்வதற்கான புதிய அறிவியல் புரட்சி! வேளாண்துறையை கட்டி ஆளப்போகும் நவீன தொழில்நுட்பம்!

வேறு சில முக்கிய அம்சங்கள்:

  • பள்ளிக்குச் சேரும் பொதுவான வயது ஐந்து.
  • 10ஆம் வகுப்பு வரை பொதுத் தேர்வுகள் கிடையாது.
  • மூன்று வருட இளங்கலை மற்றும் இரண்டு வருட முதுகலைப் படிப்புகள் தொடரும்.
  • நான்கு வருடப் பட்டப் படிப்புகள் கௌரவ மற்றும் ஆராய்ச்சிப் பட்டங்களாக மட்டுமே அறிமுகப்படுத்தப்படும்.
  • இருமொழிக் கொள்கை தொடரும்.
  • பள்ளி ஆசிரியர்கள் தேர்வு முறையை மாற்றுதல்.
  • திறந்த புத்தகத் தேர்வுகளை (Open Book Exams) அறிமுகப்படுத்துதல்.
  • மாநில உயர் கல்விக்கான ஒரு திட்டம் உருவாக்குதல்.
  • பல நுழைவு மற்றும் வெளியேறும் முறைகளுக்கு எதிர்ப்பு.
  • அகாடமிக் பேங்க் ஆஃப் கிரெடிட்ஸ் (Academic Bank of Credits) திட்டத்தைத் தாமதப்படுத்துதல்.
  • உடற்கல்விக்கு அதிக முக்கியத்துவம்.

“தேசியக் கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகக் கூறிக் கொள்ளும் தமிழக அரசு, இப்போதும் தேசியக் கல்விக் கொள்கையின் பல அம்சங்களை செயல்படுத்திக் கொண்டு தான் இருக்கிறது. தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராக முழங்கும் தமிழக அரசு, அது தயாரித்திருக்கும் மாநிலக் கல்விக் கொள்கையை இதுவரை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடாததும், அதன் பதவிக்காலம் இன்னும் ஓராண்டுக்குள் முடிவடையவுள்ள நிலையில், அதை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?” என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. ஆனால் தமிழக அரசின் மவுனம் பல சந்தேகங்களை கிளப்புகிறது.

Source : TOI

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry