Wednesday, March 18, 2026
Home Blog Page 127

மின் கட்டண உயர்வால் கடும் நெருக்கடி! தொழிலாளர்களுடன் பீகாருக்கு இடம்பெயரும் திருப்பூர் பின்னலாடைத் தொழில்?

பின்னலாடைத் தொழிலுக்கு பிஹார் மாநில அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளதால் திருப்பூரில் பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும், தொழிலாளர்களும் பிஹார் மாநிலத்துக்கு படையெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வி.சி.க., எம்.எல்.ஏ.வை அவமதித்தாரா அமைச்சர்? மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தன்னைச் சந்திக்க வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளையும், காட்டுமன்னார்கோயில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. சிந்தனைச் செல்வனையும் நிற்க வைத்துப் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மருத்துவக் கல்வி இயக்குநர் பணியிடத்தை நிரப்பாதது ஏன் என EPS கேள்வி? GHகளுக்கு மருந்து விநியோகிப்பதில் குளறுபடி எனவும் விமர்சனம்!

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மூலம் மருந்துகள் மொத்தமாக வாங்குவது குறைக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவ அதிகாரிகளுக்கு உள்ளூர் கொள்முதல் மூலம் பாதியளவு மருந்துகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாகத் தகவல்கள் தெரிய வருகிறது.

Tamil Nadu Rains: 13 மாவட்டங்களில் கன மற்றும் மிகக் கனமழைக்கு வாய்ப்பு! தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி! 

வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “செவ்வாய்க் கிழமை காலை 8.30 மணிக்குத் தொடங்கி அடுத்த 24 மணி நேரத்துக்கு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யும்.

வினாத்தாள்களை காப்பியடித்துப் பிடிபட்ட திருவள்ளுவர் பல்கலைக்கழகம்..! என்ன செய்யப்போகிறது உயர் கல்வித்துறை?

தேர்வுகளின் போது மாணவர்கள் காப்பியடிப்பது முறைகேடு. அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். ஆனால் பல்கலைக்கழகமே தேர்வுக்காக வினாத்தாளை காப்பியடித்தால்…? இப்படியொரு சர்ச்சையில்தான் வேலூரில் இயங்கும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சிக்கியுள்ளது.

உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி! தமிழகத்தில் ஐந்து நாட்களுக்குக் கொட்டப்போகும் கனமழை!

வடகிழக்கு பருவமழை வேகமெடுத்துள்ள நிலையில் இன்று முதல் ஐந்து நாள்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.

antalya bayan escort