சூரபத்மனை எதிர்த்து முருகப்பெருமான் வெற்றி பெற்றதன் அடையாளமாக கந்த சஷ்டிவிழா நடத்தப்படுகிறது. இதையொட்டி முருக பக்தர்கள் 6 நாட்கள் விரதமிருப்பார்கள், சஷ்டி விரதம் இந்த ஆண்டு நவம்பர் 13 முதல் நவம்பர் 19 அனுஷ்டிக்கப்படுகிறது.
கூட்டுறவுத்துறைக்கு மட்டும் 10 சதவிகிதம் போனஸ்! ஒரு கண்ணில் சுண்ணாம்பு, மறு கண்ணில் வெண்ணெயா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்!
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது தலைமையிலான அம்மாவின் ஆட்சியில் கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு, 2016ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டுவரை தமிழ்நாடு அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும்(கூட்டுறவுத்துறை மற்றும் வனத்துறை உள்பட) தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையாக 20 சதவிகிதம் வழங்கப்பட்டது.
TANGEDCOன் கோதையார் நீரேற்று புனல் மின் திட்டம்! களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பகத்தை பாதிக்கும் என மத்திய அரசு அறிக்கை!
தமிழ்நாடு அரசின் கோதையார் நீரேற்று புனல் மின் திட்டம் (Kodayar Pumped Storage Hydro Electric Project of capacity 1500 MW) செயல்படுத்தப்பட்டால், அது களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பகத்தையும், கன்னியாகுமரி காட்டுயிர் சரணாலயத்தையும் பாதிக்கக்கூடும் என மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவால் அமைக்கப்பட்ட துணைக் குழு தெரிவித்துள்ளது.
பெரியாறு – வைகைப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்! தமிழக அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்!
30-10-2023 அன்று தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஒரு மனுவை சமர்ப்பித்திருக்கிறது ஓ.என்.ஜி.சி. எனப்படும், இந்தியாவில் பெருத்த லாபத்தை ஈட்டித் தரக்கூடிய பொதுத்துறை நிறுவனமான Oil and Natural Gas Corporation.
மத்திய அரசின் கொள்கையினை அடிபிறழாமல் அமல்படுத்துவதா? நிறைவேற்றியதாகச் சொன்ன வாக்குறுதிகள் என்னென்ன? ஐபெட்டோ சரமாரிக் கேள்வி?
அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஐபெட்டோ) தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு புலனப் பதிவு மூலம் கடிதம் எழுதியுள்ளார்.
