தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சி! நமது உரிமைகளுக்காக, இந்த நாட்டின் முதுகெலும்பாகிய தொழிலாளர் தோழர்கள் இன்று தேசம் தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். மத்திய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகள், தனியார்மயமாக்கல் வெறி, மற்றும் மாநில உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக, தொழிற்சங்கங்கள் ஓங்கி ஒலித்த குரல், ஆட்சியாளர்களுக்கு ஒரு தெளிவான எச்சரிக்கை.
கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? உண்மையை சொல்லும் உணவியல் நிபுணர்கள்!
பிரட் ஆம்லெட், சீஸ் ஆம்லெட், முட்டைப் பராத்தா, பொரித்த முட்டை, முட்டைக் கறி – இவற்றை சாப்பிட விரும்பாத அசைவப் பிரியர்கள் உண்டா? முட்டை என்பது மலிவான, உயர் புரதம் நிறைந்த ஒரு அற்புதமான உணவாகும். இது வெறும் புரதத்திற்காக மட்டுமல்ல, வைட்டமின் டி, வைட்டமின் பி, துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது.
உங்கள் ஆயுளைக் கணிக்கும் இரத்தப் பரிசோதனை! முதுமை எப்படி இருக்கும் என்பதையும் முன்கூட்டியே தெரிந்துகொள்ளலாம்!
மனித வாழ்வில் முதுமை என்பது தவிர்க்க முடியாத கட்டம். ஆனால் அந்த முதுமை ஆரோக்கியமாக இருக்குமா அல்லது நோய்கள் நிறைந்தவையாக இருக்குமா என்பதை முன்கூட்டியே அறிவது சாத்தியமாகியுள்ளது. உடலும், மனதும் வயதாகும் பொழுது என்ன நிலைக்கு செல்லும் என்பதை கணிக்க முடியும் என்றால் அது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்? ஆம், தற்போதைய அறிவியல் வளர்ச்சி இது சாத்தியம் என நிரூபித்துள்ளது.
5 பிரட் இருந்தா போதும்… மொறுமொறுப்பான, சுவையான, வெஜிடபிள் பிரட் வடை செய்யும் ரகசியம்!
ஈவினிங் நேரத்தில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியோடு வரும் குழந்தைகளின் பசியைப் போக்கும் வகையில் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க யோசிக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பிரட் துண்டுகள் உள்ளதா? அத்துடன் கேரட், முட்டைக்கோஸ், குடைமிளகாய் போன்ற காய்கறிகளும் உள்ளதா? அப்படியானால், அவற்றைக் கொண்டு, மொறுமொறுப்பான, சுவையான, மற்றும் சத்தான ஒரு வடையை செய்து கொடுங்கள்.
பாகற்காய்: கசப்பில் கரையும் நோய்கள் – ரத்த சர்க்கரை கட்டுப்பாடு முதல் செரிமானம் வரை அற்புதப் பலன்கள்!
பாகற்காயின் கசப்பிற்குள் மறைந்திருக்கும் மகத்தான ஆரோக்கிய ரகசியங்கள் ஏராளம். இது, பூசணி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கொடியாகும். இந்தக் காய், இந்தியாவிலும் பிற ஆசிய நாடுகளிலும் இயற்கையாகவே வளர்கிறது. இதன் தனித்துவமான சுவைக்காகவும், குறிப்பிடத்தக்க மருத்துவப் பலன்களுக்காகவும் உலகளவில் இது பயிரிடப்படுகிறது.
மக்களின் கண்ணீரைத் துடைக்கப்போகும் எழுச்சிப் பயணம் – மக்களைக் காத்து, தமிழகத்தை மீட்க நெடும்பயணம் புறப்படுகிறார் EPS!
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பொற்காலத்தை மீண்டும் படைத்திட, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் தூய வழியில் ஆட்சி செய்த அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜுலை 7ந் தேதி திங்கள் கிழமை, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதியில் “மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்ற நெடும் பயணத்தைத் தொடங்குகிறார்.
