Friday, February 13, 2026
Home Blog Page 23

இதயம் நலமுடன் இருக்க இதை குடிக்க மறக்காதீர்கள் – உங்கள் இதய ஆரோக்கியத்தை காக்கும் சிறந்த பானங்கள்!

இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. நாம் தினசரி குடிக்கும் பானங்கள் இதயத்தின் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தண்ணீர் முதல் பச்சை தேயிலை வரை, மாதுளை ஜூஸ் முதல் ஓட்ஸ் பால் வரை — இந்த பானங்கள் உங்கள் இருதய நலனுக்குச் சிறந்த துணையாக இருக்கக்கூடியவை.

இஸ்ரேல்-ஈரான் மோதல்: உலகளாவிய அணு பேரழிவுக்கு வழிவகுக்கும் புதிய போர் முறை!

2025 ஜூன் 13ம் தேதி இஸ்ரேல் நடத்திய ஈரான் அணு வசதிகளுக்கான தாக்குதல், உலக அரங்கில் ஒரு “அணு உச்சநிலைப் போர்” (Nuclear Threshold War) என்ற புதிய மோதல் வரையறையை உருவாக்கியுள்ளது. இந்த மோதல் வெறும் பிராந்திய முரண்பாடு அல்ல; அணு ஆயுதப் பரவல், தடுப்பு தாக்குதல்கள், மற்றும் பன்னாட்டு ஒப்பந்தங்களின் சிதைவு ஆகியவற்றுக்கான ஆபத்தான முன்மாதிரியாக மாறியுள்ளது.

“அரைவேக்காட்டுத் தனம் என்பது எது தெரியுமா?” – ஸ்டாலினுக்கு இபிஎஸ் சரமாரி பதிலடி!

“கொடுத்த வாக்குறுதி எதையுமே நிறைவேற்றாமல், மக்கள் கடும் கோபத்தில் இருப்பது தெரிந்ததும், நான் அதை செய்யப் போகிறேன், இதை செய்யப் போகிறேன் என்று வாய்க்கு வந்தபடி கூறுவதுதான் அரைவேக்காட்டுத்தனம்.” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

குக்கர் சாதம் சர்க்கரை நோயை வரவழைக்கும் என்பது உண்மையா? மருத்துவர் சொல்லும் அதிர்ச்சித் தகவல்..!

குக்கரில் குறைந்த நேரத்தில் உணவுகளை சமைத்துவிடலாம் என்பதால், பெரும்பாலானோர் சமையலை குக்கரிலேயே செய்துவிடுகின்றனர். முக்கியமாக குக்கரில்தான் சாதத்தை சமைத்து சாப்பிடுகின்றனர்.

டிஜிட்டல் புரட்சிக்கு வித்திடும் ஜியோ: ₹3,999-க்கு 5ஜி ஸ்மார்ட்போன் – ஒரு புதிய அத்தியாயம்!

இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலம் ஒரு புதிய திருப்புமுனையை எட்டியுள்ளது. அதிவேக 5ஜி தொழில்நுட்பத்திற்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் கொண்டு வர ரிலையன்ஸ் ஜியோ ஒரு புரட்சிகரமான அறிவிப்பை வெளியிடத் தயாராகிறது.

சிப்ஸ் பாக்கெட் ரகசியம்: அந்த வண்ணப் புள்ளிகள் எதற்காக? உணவுத் தரத்தை குறிக்கவா?

ஆசையாக வாங்கும் சிப்ஸ் பாக்கெட்டுகளில், ஊட்டச்சத்து விவரங்களுக்கு அருகிலும், பார்கோட்டிற்குக் கீழேயும் வரிசையாக சில வண்ணப் புள்ளிகள் அல்லது வளையங்கள் இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? அது பாக்கெட்டுக்குள் இருக்கும் உணவு பற்றிய குறியீடா? இந்த வண்ணமயமான குறியீடுகளுக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான பயன்பாடு உள்ளது.

காவல் நிலையத்தையே காக்க முடியாத திமுக ஆட்சி எப்படி மக்களைக் காக்கும்? – இபிஎஸ் கடும் கண்டனம்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வி. சத்திரப்பட்டி காவல் நிலையத்திற்குள் நேற்று இரவு புகுந்த முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர்கள், “எங்கள் உறவினர்களை ஏன் கைது செய்தீர்கள்” எனக் கேட்டு, காவல் நிலையத்தில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். மேலும் இரவுப் பணியில் இருந்த தலமைக் காவலர் பால் பாண்டியை தாக்கிவிட்டு அவர்கள் தப்பிவிட்டனர்.

இதையறிந்த திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் இன்று காலை காவல் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்ய முற்பட்டார். போலீஸார் அவரை வி.சத்திரப்பட்டி கிராமத்துக்குள் விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, ஆர்.பி. உதயகுமார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் கிராம மக்களுடன் இணைந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதையடுத்து ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த திமுக ஆட்சி, எப்படி மக்களைக் காக்கும்? வாய்ப்பே இல்லை. வி.சத்திரப்பட்டி காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசை வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திமுக ஆட்சியில் காவல் நிலையத்துக்கே பாதுகாப்பு இல்லை. காவல் நிலையத்தையே காக்க முடியாத முதல்வர், தமிழ்நாட்டு மக்களை எப்படி காக்கப் போகிறார்? மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வி. சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று புகுந்த மர்மநபர்கள், காவல் நிலையத்தைத் தாக்கி, சூறையாடியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

இதனையடுத்து, எனது அறிவுறுத்தலின்படி, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், அக்காவல் நிலையத்தை பார்வையிடச் சென்றபோது, காவல்துறையால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதற்கு எனது கடும் கண்டனம். ஸ்டாலின் ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. மக்களைக் காக்க வேண்டிய காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை. தற்போது உச்சத்தின் உச்சமாக காவல் நிலையத்துக்கே பாதுகாப்பு இல்லை.

முதல்வர் ஸ்டாலினின் நான்காண்டு ஆட்சியின் சாதனைப் பட்டியலில் முதலில் சேர்க்க வேண்டிய சாதனை இது தான். உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் நிலையம் தாக்குதலுக்கு உள்ளாவது உங்களுக்கு வெட்கமாக இல்லையா முதல்வரே? காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த திமுக ஆட்சி, எப்படி மக்களைக் காக்கும்? வாய்ப்பே இல்லை. வி.சத்திரப்பட்டி காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன். எப்போதும் நான் சொல்வதை மீண்டும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒருமுறை சொல்லிக்கொள்ள விழைகிறேன், மக்களே, இந்த ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &

antalya bayan escort