டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் விசாகன் ஐ.ஏ.எஸ் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தியுள்ளது. விசாகனிடம் மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்காக தங்களுடைய அலுவலகத்திற்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.
குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியுமா? உச்ச நீதிமன்றத்திற்கு திரௌபதி முர்மு கேள்வி?
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது தொடர்பாக, ஆளுநருக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடுத்த வழக்கில், JB Pardiwala, R Mahadevan ஆகிய 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 142-ல் வழங்கப்பட்டிருக்கும் உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி கடந்த மாதம் 8ம் தேதி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது.
வைகாசி மாத ராசிபலன்கள் 2025! ஐந்து ராசிக்காரர்களுக்கு டாப்..! இந்த ராசிக்காரங்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துங்க!
சூரிய பகவான் ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாத காலம் சஞ்சரிக்க கூடியவர். ஒவ்வொரு ராசிக்கு மாறும்போது ஒவ்வொரு தமிழ் மாதம் பிறக்கும். அதே போல மே 14ஆம் தேதி மாலை 5:41 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகி உள்ளார். இதனால் வைகாசி மாதம் பிறக்கிறது. ஜூன் 14ல் வைகாசி மாதம் நிறைவடைகிறது. இந்த மாதத்தில் வித்வாத யோகம், புதாதித்ய ராஜயோகம் என இரு யோகங்கள் உருவாகின்றன.
வயிற்றுப்போக்கு, குடல் வீக்கம் மற்றும் கொழுப்பு – இயற்கையாக குறைக்கும் எளிய வழிகள்!
செரிமானக் கோளாறுகளான வயிற்றுப்போக்கு, வீக்கம் மற்றும் குடல் வீக்கம் (inflammation) போன்றவை பலரையும் வாட்டி வதைக்கும் பிரச்சினைகள். இந்தியன் சொசைட்டி ஆஃப் காஸ்ட்ரோஎன்டாலஜி (ISG) மற்றும் அசோசியேஷன் ஆஃப் பிசிஷியன்ஸ் ஆஃப் இந்தியா (API) இணைந்து நடத்திய ஆய்வின்படி, இந்தியாவில் 7% முதல் 10% பேருக்கு இரைப்பை உணவுக்குழாய் பின்னோட்ட நோய் (GERD – Gastroesophageal Reflux Disease) இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஸ்டாலின் நடத்துவதை ‘ஆட்சி’ என்று கூறுவதுதான் ஆகப்பெரிய ‘ஹம்பக்’ – ஈபிஎஸ் சாட்டையடி!
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது ஊட்டி போட்டோஷூட்டுக்கு இடையே ஒரு பேட்டி கொடுத்துள்ளார். பொள்ளாச்சி வழக்கில், கைது செய்ததும், சிபிஐக்கு மாற்றியதும் அதிமுக அரசு. விசாரித்தது சிபிஐ, தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்.
