Monday, March 16, 2026
Home Blog Page 7

24 மணி நேரத்தில் 4 கொலைகள்! – அதள பாதாளத்தில் ’ஸ்டாலின் மாடல் ஆட்சி சட்டம் ஒழுங்கு’ – EPS கடும் தாக்கு!

“தமிழ்நாட்டில் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதாளத்திற்கு சென்றிருப்பதை கடந்த 24 மணி நேரத்தில் வந்த செய்திகளே தெளிவாக உணர்த்துகின்றன.” என்று அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தி.மு.க அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

SC Mandatory TET Ruling: Review Petition is a Political Bluff! – Only RTE Act Amendment Can Save 25 Lakh Jobs!

The​‍​‌‍​‍‌​‍​‌‍​‍‌ Supreme Court’s decision on September 1st, according to AIFETO National Secretary V. Annamalai and the Senior Leader of the Thamizhaga Aasiriyar Koottani in a statement, has put teachers in a very uncomfortable position.

🔥விஸ்வரூபமெடுக்கும் TET விவகாரம்! நாடாளுமன்றத்தில் DMK எம்.பி.க்கள் மௌனம் ஏன்? – ஐபெட்டோ சுளீர் கேள்வி!

ஐபெட்டோ (AIFETO) தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் ஒன்றாம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, ஆசிரியர்களுக்குப் பேராபத்தை ஏற்படுத்தியுள்ளது. பணியில் நீடிக்கவும், பதவி உயர்வுக்கும் டெட் (TET) தேர்ச்சி கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் கறார் காட்டியுள்ளது. “பணியில் இருக்கும் ஆசிரியர்களை எப்படி காப்பாற்றப் போகிறோம்?” என எங்கள் உள்ளம் குமுறுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு: ஆசிரியர்களுக்கு துரோகம் செய்யும் திமுக! Why DMK Cancelled the Special TET Notification?

ஆசிரியர் பணி என்பது அடுத்த தலைமுறையைக் கட்டி எழுப்பும் அத்தியாவசியப் பணி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், இன்று சுமார் ஒன்றரை லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வாழ்க்கையை ஊசலாட்டத்தில் தள்ளிவிட்டுள்ளது உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு.

“ரெட் ஜெயண்ட் வாசலுக்கு ரெய்டு வந்ததும் டெல்லிக்கு பறந்தீரே!” – ஸ்டாலினின் ‘டெல்லி பயணத்தை’ அம்பலப்படுத்திய EPS!

எல்லாவற்றையும் நான் தான் செய்ய வேண்டும் என்றால், நீங்கள் எதற்கு சார் முதல்வராக இருக்கீங்க?” என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கொளத்தூரில் முதல்வரை எதிர்த்து போட்டி! மனைவிக்கு ஒப்பந்தம் வழங்கிய மாநகராட்சி ஆணையர்! தூய்மைப் பணியாளர்கள் ஆவேசம்!

பணி நிரந்தரம் வேண்டியும், தனியார்மயமாக்கலை எதிர்த்தும் அம்பத்தூரில் தூய்மைப் பணியாளர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தை முன்னெடுத்து வரும் உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அந்த இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் கு. பாரதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

“மெட்ரோவை அரசியல் ஆக்காதீர்கள்!” – முதல்வர் ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் பதிலடி!

மதுரை மற்றும் கோவை மாநகரங்களுக்கு முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இரண்டு நகரங்களிலும் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருப்பதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “’கோயில் நகர்’ மதுரைக்கும், ‘தென்னிந்திய மான்செஸ்டர்’ கோவைக்கும் “NO METRO” என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு! பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் எக்ஸ் பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் மனோகர் லால் கட்டார் தனது எக்ஸ் பக்கத்தில், “மெட்ரோ ரயில் அமைப்பு போன்ற விலையுயர்ந்த உள்கட்டமைப்புத் திட்டங்கள், பொதுமக்களுக்கு அதிகபட்ச நன்மையை கொடுக்க வேண்டும் என்ற மெட்ரோ கொள்கை 2017-ஐ பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டவை.

Madurai Coimbatore Metro Rejection: Stalin Politics vs. Central Minister Manohar Lal Khattar Response.
அமைச்சர் மனோகர் லால் கட்டார்

மெட்ரோ அமைப்பு அந்தக் கொள்கையை பயன்படுத்துவதை தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் அரசியல் செய்து, சர்ச்சையை உருவாக்குவது துரதிர்ஷ்டவசமானது. 2024 அக்டோபர் 3 அன்று மத்திய அரசால் சென்னை மெட்ரோ 2-ம் கட்டத் திட்டமாக 119 கி.மீ. நீளத்திற்கு ரூ. 63,246 கோடி வழங்கியது. மத்திய அரசின் இந்தப் பெருந்தன்மையான ஒப்புதலை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அரசியல் செய்கிறார்.

Also Read : சென்னை மாநகராட்சிக்கு ஆணையரா.. திமுக மாவட்ட செயலாளரா? அதிமுக ஆர்ப்பாட்டத்தில் நேரடி எச்சரிக்கை!

கோயம்புத்தூர் மற்றும் மதுரை திட்டங்களில் பின்வரும் முரண்பாடுகள் உள்ளன:

  • கோயம்புத்தூரில் உள்ள பாதையின் நீளம், சென்னை மெட்ரோ அமைப்பின் பாதையின் நீளத்தை விடக் குறைவாக இருந்தும், சென்னையை விட அதிகமான போக்குவரத்துத் திட்ட மதிப்பீடுகள் (traffic projections) வழங்கப்பட்டுள்ளன. இது முதல் பார்வையிலேயே தவறாகத் தெரிகிறது.
  • திட்டமிடப்பட்ட சராசரி பயண தூரங்கள் மற்றும் சாலைப் போக்குவரத்துக்கும் மெட்ரோவுக்கும் இடையேயான வேக வேறுபாடுகள் (speed differentials) ஆகியவை, போக்குவரத்து முறை மெட்ரோவுக்கு மாறுவதைத் தாங்குவதாக இல்லை.
  • கோயம்புத்தூர் விரிவான திட்ட அறிக்கையின்படி (DPR), 7 மெட்ரோ ரயில் நிலைய இடங்களில் போதுமான நிலவசதி (right of way) இல்லை.
  • மதுரைக்கான விரிவான போக்குவரத்துத் திட்ட ஆவணம் (Comprehensive Mobility Plan) தற்போதைய பயணிகள் எண்ணிக்கையின்படி பேருந்து விரைவுப் போக்குவரத்து அமைப்பு (BRTS) மட்டுமே பொருத்தமானது என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது.
  • கோயம்புத்தூர் மாநகராட்சியின் மக்கள் தொகை 2011-ல் 15.85 லட்சம். அதே சமயம் 2011 கணக்கெடுப்பின்படி உள்ளூர் திட்டமிடல் பகுதி மக்கள் தொகை 7.7 லட்சம். போக்குவரத்து மாற்றத்திற்கான பயணிகள் எண்ணிக்கை மட்டுமே திட்டமிடப்பட்டுள்ளது. மெட்ரோ அமைப்புக்கு எவ்வளவு பெரிய போக்குவரத்து மாற்றம் இருக்கும் என்பதற்கான நியாயமான விளக்கம் தேவை.

மேலும், பல்வேறு நகரங்களுக்கு 10,000 குளிர்சாதன வசதி கொண்ட இ-பேருந்துகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் PM e-bus Sewa திட்டத்தின் பலனைத் தமிழ்நாடு அரசு பயன்படுத்த மறுத்துவிட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், பேருந்துகளுக்கு மத்திய நிதி உதவி, டிப்போ உள்கட்டமைப்பு மற்றும் ‘பிஹைண்ட் தி மீட்டர்’ வசதிகளுக்கான நிதியுதவி வழங்கப்படுகிறது. மத்திய அரசு மீண்டும் மீண்டும் வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு இதுவரை இந்தத் திட்டத்தில் பங்கேற்கவில்லை.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

antalya bayan escort