• Home
  • தமிழகம்
  • Exclusive
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சமையல்
  • அழகு குறிப்பு
  • நேர்காணல்
  • மருத்துவம்
Search
Logo
Logo
Monday, June 2, 2025
  • ABOUT VELSMEDIA
  • CONTACT US
  • DISCLAIMER
  • PRIVACY POLICY
  • TERMS AND CONDITIONS
Facebook
Youtube
Twitter
Instagram
Logo
  • Home
  • தமிழகம்
  • Exclusive
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சமையல்
  • அழகு குறிப்பு
  • நேர்காணல்
  • மருத்துவம்
  • Home
  • தமிழகம்
  • Exclusive
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சமையல்
  • அழகு குறிப்பு
  • நேர்காணல்
  • மருத்துவம்
Home தமிழக செய்திகள் சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாகப் புகார்! யு டியூபர் வழக்கில் உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு!
  • தமிழக செய்திகள்

சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாகப் புகார்! யு டியூபர் வழக்கில் உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு!

By
Velsmedia Team
-
June 7, 2022
0
239
Facebook
Twitter
Pinterest
WhatsApp

    சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்கு மக்களிடம் ரூ.33 லட்சம் நன்கொடை வசூலித்து மோசடி செய்ததாக யூடியூபர் கார்த்திக் கோபிநாத் மீது வழக்கு நடைபெற்று வருகிறது.

    இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோயில் பெயரை பயன்படுத்தி, இணையதளம் மூலம் நன்கொடை வசூல் செய்த புகாரில், யூடியூப் சேனல் உரிமையாளர் கார்த்திக் கோபிநாத், ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் அவரது அலுவலகத்தில் வைத்து கடந்த 30-ந் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி கார்த்திக் கோபிநாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். சிதிலமடைந்த கோயிலை சரி செய்ய அரசு முயற்சிக்கவில்லை என்பதால் தாமே கோவிலை சரி செய்ய கோரிக்கை விடுத்ததை ஏற்று மக்கள் பணம் அளித்தனர் என்றும், பணம் கொடுத்தவர்கள் யாரும் புகாரளிக்கவில்லை என்றும் கார்த்திக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் பியூஸ் மனுஷ் அளித்த புகாரின் படி 3 மணி நேரம் விசாரணை நடத்தி, எந்த தவறும் செய்யவில்லை என காவல்துறையினர் கூறிவிட்டதாகவும் கார்த்திக் கோபிநாத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    வசூல், செலவு ஆகியவற்றில் உடைந்தயாக இருந்தவர்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்பதால் கார்த்திக் கோபிநாத்தை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று காவல்துறையினர் தரப்பில் தனியாக ஒரு மனுவை தாக்கல் செய்தனர். மேலும் கோவிலுக்கு நன்கொடை வசூலிக்க தொடங்கியதும் கார்த்திக்கின் தனிப்பட்ட கணக்கில் கூடுதல் பணம் வந்துள்ளதாகவும், செயலி மூலம் பணம் வசூலித்ததே குற்றம் தான் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து தனிப்பட்ட கணக்கின் விவரங்களை தாக்கல் செய்ய கார்த்திக் கோபிநாத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இரு மனுக்கள் மீதான விசாரணையை வரும் 13க்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

    Post Views: 327
    • TAGS
    • Karthik Gopinath ran a Milaap fundraiser to raise funds for the restoration of a temple under the TN government’s HR&CE department
    • Karthik Gopinath was arrested for allegedly raising funds under the pretext of renovating statues in temples
    • Madras High Court has sought bank account details of Chennai YouTuber
    • சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்கு மக்களிடம் ரூ.33 லட்சம் நன்கொடை வசூலித்து மோசடி செய்ததாக யூடியூபர் கார்த்திக் கோபிநாத் மீது வழக்கு
    • தனிப்பட்ட கணக்குகளை தாக்கல் செய்ய கார்த்திக் கோபிநாத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
    • யு டியூபர் கார்த்திக் கோபிநாத் வழக்கு
    Facebook
    Twitter
    Pinterest
    WhatsApp
      Previous articleசுப்ரீம் கோர்ட் தீர்ப்பைக்காட்டி தீட்சிதர்கள் எதிர்ப்பு! ஆய்வு நடத்த முடியாமல் அரசு ஏமாற்றம்!
      Next article20 நாளில் 20 கொலை! லட்சக்கணக்கான கிலோ கஞ்சா! இதுதான் திராவிட மாடலா?
      Velsmedia Team
      Velsmedia Team
      antalya bayan escort
      Logo

      வேல்ஸ் மீடியா செய்தித்தளத்தில் உள்ள கட்டுரைகள் வாசித்ததற்கு முதற்கண் நன்றி. உண்மையே நீண்ட கால அடிப்படையில் நிலைக்கும் என்ற தத்துவார்த்த உண்மையை மனதில் கொண்டு, மெய்யான செய்திகளை மக்களுக்கு அளிப்பதே நோக்கம். மீண்டும் மீண்டும் வேல்ஸ் மீடியா செய்தி தளத்திற்குள் வந்து ஆதரவு தாரீர்.

      Contact us: editor@velsmedia.com

      Facebook
      Youtube
      Twitter
      Instagram

      © Copyright - Vels Media

      • Home
      • தமிழகம்
      • Exclusive
      • இந்தியா
      • உலகம்
      • சினிமா
      • சமையல்
      • அழகு குறிப்பு
      • நேர்காணல்
      • மருத்துவம்