பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்புவதாக எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. ஆசிரியர்கள் சங்கங்களிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தீர்வு காண்பதாக ஒப்புதல் அளித்துள்ள 12 கோரிக்கைகளில் கணினி பணியாளர் நியமனத்தைத் தவிர வேறு எதையும் அறிவிக்கவில்லை, பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாடு எவரிடம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளவும் முடியவில்லை என்று ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணி மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை! அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்! தமிழக ஆளுநரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்யவேண்டும். ஏற்கனவே தமிழகத்தில் கஞ்சா, போதைப்பொருள் விற்பனைக் குறித்து தமிழக ஆளுநரிடத்தில் மனு அளித்திருந்தோம், தற்போது கள்ளச் சாராய சம்பவத்தால் 58 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து தமிழக ஆளுநரை சந்தித்து மனு அளிக்கவுள்ளோம் என்று அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
செயற்கைப் பேரழிவால் தலைகுனிந்து நிற்கிறது `திராவிட மாடல்’ தி.மு.க அரசு! மக்களின் உயிர்களை அடகு வைப்பதற்குப் பெயர் அரசு அல்ல… எமன்!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 58ஆக அதிகரித்துக்கும் நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக ஆனந்த விகடன் இதழ் தீட்டியிருக்கும் தலையங்கத்தில், “ஓர் அரசாங்கம்… நலத்திட்டங்கள், தொழில் வளர்ச்சிகள், மாநில முன்னேற்றம் எனச் செயல்படுவதைவிட மிக மிக அடிப்படையானது… மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது. ஆனால், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய செயற்கைப் பேரழிவால், தலைகுனிந்து நிற்கிறது `திராவிட மாடல்’ தி.மு.க அரசு.
40-ஐ நெருங்கும் கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு! கைது செய்யப்பட்ட சாராய வியாபாரியை விடுவிக்குமாறு போலீஸை மிரட்டிய திமுக எம்.எல்.ஏ.?
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட 7-வது வார்டு கருணாபுரத்தில், விஷச்சாராயம் அருந்தியதில் 130-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஐ நெருங்குகிறது. கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி , விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில் சிலருக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலரும் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மனதையும் உடலையும் ஒன்றிணைக்கும் யோகா..! ஆதிசேஷன் பதஞ்சலியாக அவதரித்தது எப்படி?
யோகா என்னும் அற்புதமான கலை உலகமெங்கும் பரவியுள்ள நிலையில், இந்தக் கலையில் மருத்துவரீதியான சவால்கள் அனைத்திற்கும் தீர்வுகள் உள்ளன என்று யோகா நிபுணர்கள் கூறுகிறார்கள். “யுஜ்’ என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து வந்தது “யோகா’ என்னும் சொல். சிதறும் சக்தியைக் கட்டுப்படுத்துதல் என்பது இதன் பொருள். இக்கலையை ஆதிசித்தரான சிவபெருமான் அருளினார் என்பர்.
சந்துருவின் பரிந்துரைகள் நடுநிலையாக இல்லை! அபத்தமான, தான்தோன்றித்தனமான கருத்துகள் என KSR விமர்சனம்!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு மாணவனை சக மாணவர்கள் சாதிய வன்மத்தால் அரிவாளால் வீடேறி வெட்டிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதைத்தொடர்ந்து, பள்ளி கல்லூரிகளில் சாதி, மத பாகுபாடுகள் களையவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும் அரசுக்கு தகுந்த வழிகாட்டுதல்களை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் தனிநபர் குழு அமைக்கப்பட்டது. அதன்படி, இதில் ஆய்வுகளை மேற்கொண்ட சந்துரு, 20 பரிந்துரைகள் அடங்கிய 650 பக்க அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் நேற்று சமர்ப்பித்தார்.
