சவுக்கு மீடியா சி.இ.ஓ.வும், பிரபல யூ டியூபருமான சவுக்கு சங்கர் சில தினங்களுக்கு முன் ரெட் பிக்ஸ் யூ டியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்திருந்தார். அதில் காவல்துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் பற்றியும் அவதூறான கருத்தை சவுக்கு சங்கர் தெரிவித்தாக கூறப்படுகிறது.
இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் பணி நிமித்தமாக சவுக்கு சங்கர் தேனியில் தங்கியிருப்பதாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேனி சென்ற சைபர் கிரைம் போலீசார், அங்கு தங்கி இருந்த சவுக்கு சங்கரை இன்று அதிகாலையில் கைது செய்தனர்.
Savukku Shankar has been arrested today by Coimbatore city police cyber crime wing for the offences committed under the following sections. 294(b), 509 and 353 IPC r/w section 4 of Tamilnadu prohibition of harassment of Woman Act and section 67 of Iinformation Technology Act,2000
— கோவை மாநகரக் காவல் Coimbatore City Police (@policecbecity) May 4, 2024
சவுக்கு சங்கரை தேனியில் இருந்து கோவை சைபர் கிரைம் போலீஸ் அலுவலகத்திற்கு போலஸ் வாகனத்தில் அழைத்து வந்தனர். தேனியில் இருந்து கோவை அழைத்து வரும் வழியில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் காவல்துறை வாகனம் மீது கார் மோதியதாக கூறப்படுகிறது. இதில் காவலர்கள், சவுக்கு சங்கர் என அனைவருக்குமே லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சவுக்கு சங்கருக்கு தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து சவுக்கு சங்கரை போலீஸார் மாற்று வாகனத்தில் கோவை அழைத்துச் சென்றனர். ரகசிய இடத்தில் வைத்து கோவை சைபர் கிரைம் போலீஸார் சவுக்கு சங்கரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று பிற்பகலுக்குப் பிறகு சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே, பத்திரிகை சுதந்திரம் பற்றி பேசும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அரசின் மீது விமர்சனம் வைப்போரின் குரல் வளையை நெரிக்கும் செயலில் ஈடுபடுவதாக சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. சவுக்கு சங்கர் கைதைக் கண்டித்தும் பலரும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இதைவிட ஒரு பாசிசச் செயல் வேறெதுவுமேயில்லை.
அரசை விமர்சிக்கிறார் என்ற ஒற்றைக் காரணம் தான் கைதிற்கான அடிப்படை. மற்றபடி கைது செய்வதற்கு காரணத்தைத் தேடிக் கண்டுபிடித்துள்ளனர். அவ்வளவே.
சங்கர் நல்லவரா கெட்டவரா அவர் சொல்வது…
— Dhanabal Arumugam – Say No To Drugs & DMK (@Dhanaakutty1) May 4, 2024
இந்த நிலையில் கோவை மாநகர காவல் துறையினர் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்த விபரங்களை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி சவுக்கு சங்கர் மீது பிறருக்கு தொல்லை தரும் வகையில் பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், ஒரு பெண்ணின் நாகரீகத்தை அவமதிக்கும் வகையில் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், சமூக வலைதளங்களில் ஆபாசமான விஷயங்களை வெளியிடுதல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry