‘நெஞ்சுக்கு நீதி’ டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா! சமூக அவலத்தை சாடும் அழுத்தமான திரைப்படம்!

0
186

இந்தியில் வெளியான ’ஆர்டிகிள் 15’ படம், தமிழில் ’நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள “நெஞ்சுக்கு நீதி”, சமூக அவலத்தை சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெயலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “முதல் நன்றி தாத்தா கலைஞருக்கு, அவர் தந்தது தான் இந்த டைட்டில். படத்தின் டைட்டிலுக்கு நியாயம் செய்ய முயற்சித்து இருக்கிறோம். போனிகபூர் என்னை அழைத்து ரீமேக் பண்ணலாம் என்று கூறியபோது., இப்படத்திற்கு யாரை இயக்குனராக வைத்து பண்ணலாம் என சந்தேகம் இருந்தது. யாரும் முன்வரவில்லை.

கனா படத்தை பார்த்துவிட்டு, அருணை கூப்பிட்ட போது, அருண் ஒத்துகொண்டார். நான் நெஞ்சுக்கு நீதி டைட்டில் உரிமை பற்றி, அப்பாவிடம் கேட்டபோது, பார்த்து பண்ணுங்க என கூறினார். படம் எடுக்கும் போது, கொரோனா பெரிய தடையாக இருந்தது. அருண் மனைவி மற்றும் படத்தில் பணியாற்றி கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு இந்த படத்தின் வெற்றி சமர்பணம். அருண் தமிழ் சினிமாவில் பெரிய இடத்திற்கு செல்வார்.

நடன இயக்குனர், கலை இயக்குனர், ஒளிப்பதிவாளர் தினேஷ் அவர்களுக்கு நன்றி. இந்தப்படம் ஒத்துகொண்ட போது பயமாக இருந்தது, எப்படி போலீஸாக நடிக்க போகிறேன் என்ற பயம் இருந்தது. நான் போலீஸாக திரையில் சிறப்பாக வந்ததற்கு பெரிய காரணம் தினேஷ். ஷிவானி ராஜசேகர், குறிஞ்சி கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார். பாடல்வரிகள் பவர்புல்லாக இருக்கும். இந்த படத்திற்கு ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் பெரிய பலம். எல்லோருக்கும் நன்றி. படம் சமூகநீதி பேசும் படம், இந்த சமயத்தில் தேவையான ஒரு படம், உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” என்று கூறினார்.

நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போசு, “உதயநிதி பல வேலைகளை பார்க்கிறார், அது அவரது குடும்ப இரத்ததிலேயே இருக்கிறது. உண்மையான டான் உதயநிதி தான். இத்தனை வருட பழக்கத்தில் அவர் எனக்கு பாசிடிவிட்டியை மட்டுமே தந்துள்ளார். நெஞ்சுக்கு நீதி பவர்வுல் டைட்டில். எனக்கு ரீமேக் எடுக்க பயம், ஆனால் அருண்ராஜா இப்படத்தை சிறப்பாக உருவாக்கியுள்ளார்.

அருண்ராஜா எனது நண்பன் என்பது பெருமை. கனா போன்ற படத்தை எடுத்து பெரிய வெற்றியை கொடுத்துள்ளார். அருண் பெரிய இழப்பில் இருந்த போது அவருக்கு உறுதுணையாக இருந்தது உதயநிதி தான். இந்த நெஞ்சுக்கு நீதி பெரிய வெற்றியடையும். அனைவருக்கும் வாழ்த்துகள்.” என்று தெரிவித்தார்.

இயக்குநர் அருண்ராஜா காமராஜ்

விழாவில் பேசிய தயாரிப்பாளர் போனி கபூர், “ஆர்டிகள் 15 படத்தை அதிகமுறை பார்த்துள்ளேன். அருண்ராஜா இந்த படத்தை ஒரிஜினலை விட சிறப்பாக எடுத்துள்ளார். தமிழகத்தின் வாழ்வியல் நுணுக்கங்களை அவர் படத்தில் பதிவு செய்துள்ளார். ராகுலுக்கு நன்றி கூற வேண்டும். மொத்த குழுவிற்கும் பெரிய நன்ற.” என்று குறிப்பிட்டார்.

உதயநிதி ஸ்டாலின் உடன், ஆரி, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், மயில்சாமி, அப்துல் லீ, ராட்சசன் சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். கதையை அனுபவ் சின்ஹா எழுதியுள்ளார். ஒளிப்பதிவு தினேஷ் கிருஷ்ணன். B செய்துள்ளார். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். பாடல்கள் யுகபாரதி. அருண்ராஜா காமராஜ் மற்றும் தமிழரசன் பச்சமுத்து வசனம் எழுதியுள்ளனர். வரும் 20-ந் தேதி நெஞ்சுக்கு நீதி திரைப்படம் திரைக்கு வருகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry