மின்வாரிய ஊழியர்களுக்கு சீருடை! சாந்தமான நிறத்தில் அணிய வேண்டும் என கட்டுப்பாடு!

0
244

தமிழக மின்வாரியத்தில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் சீருடை விதிகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி,” பெண்கள், சேலை மற்றும் துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்து கொள்ளலாம். பணியில் உள்ள ஆண்கள், ஃபார்மல் பேண்ட், வேட்டி மற்றும் தமிழக, இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் எந்த உடையையும் அணியலாம். கேஷுவல் உடை அணியக்கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயத்தில் ஆஜராக வேண்டியிருந்தால், முழுக் கையுடன் கூடிய சிறியளவில் பட்டன் வைத்த கோட் அணிய வேண்டும். பட்டன் இல்லாத கோட் அணிய ஊழியர் விரும்பினால் கண்டிப்பாக டை அணிய வேண்டும்” என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும்,” உடையின் நிறமும், டிசைனும் சாந்தமான வகையில் இருக்க வேண்டும். பெண்களைப் பொறுத்தவரை சாந்தமான நிறத்தில் துப்பட்டாவுடன் சுடிதார், சேலை போன்றவற்றை அணியலாம். அலுவலகத்தின் கண்ணியம், ஒழுக்கம் போன்றவற்றை பேணும் வகையில் அனைத்து ஊழியர்களும் இந்த உத்தரவை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது. இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry