சிறையிலிருந்து விடுதலையான 660 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா! காலை உணவு, கழிவறைகள் வசதிகள் கிடையாது!

0
55
FILE IMAGE

சிறையில் தண்டனை முடிந்து வெளியான 660 பேருக்கு, சென்னையில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஏ.சி. அறையில் நடைபெறுவதால், சுத்தமான ஆடைகள் அணிந்து அதாவது துர்நாற்றம் வீசாத ஆடைகள் அணிந்து வரவேண்டும் என்று பயனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மே 5 ஆம் தேதி(வெள்ளிக்கிழமை), விடுதலை செய்யப்பட்ட கைதிகள் உதவி சங்கம், விடுதலை செய்யப்பட்ட 660 பேருக்கு, அவர்களின் மறுவாழ்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.3.30 கோடி நிதியுதவியை வழங்குகிறது. மூன்று முதல் நான்கு வருடங்கள் தாமதத்திற்குப் பிறகுதான் இந்த நிதி வழங்கப்படுகிறது.

பல்வேறு மாவட்டங்களில் விடுதலை செய்யப்பட்ட கைதிகளின் பயணத்தை ஒருங்கிணைத்து வரும் துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள செய்தியில், “ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறும் விழாவை நடத்தும் அதிகாரிகள், பயனாளிகள் கூட்டத்தில் சுத்தமான மற்றும் கண்ணியமான உடையில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயனாளிகளுக்கு காலை உணவு, கழிவறைகள், ஓய்வு அறை வசதிகள் செய்து கொடுக்க முடியவில்லை.

வெகுதூரத்தில் இருந்து வரும் பயனாளிகள், ஏசி ஹாலுக்குள்ளேயே துர்நாற்றம் ஏதும் வராமல் இருக்க, நிகழ்ச்சிக்கு அணிவதற்கு சுத்தமான ஜோடி ஆடைகளை எடுத்து வரச் சொல்லுங்கள். உங்களுக்குப் பிரச்சனை புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். முதலமைச்சருடன், சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, காவல்துறை மற்றும் சிறைத்துறை உயர் அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.” இவ்வாறு அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Also Read : டிஎன்பிஎஸ்சியை பிரித்து புதிய ஆள்தேர்வு வாரியம் அமைக்க திட்டம்! அரசுப் பணியாளர் தேர்வு முறை வலுவிழந்துவிடும் என பாமக கண்டனம்!

இந்த உத்தரவு பல அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. “இது மனிதாபிமானமற்றது” என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறினார். காலை 10 மணிக்குத் தொடங்கும் நிகழ்ச்சிக்கு காலை 8 மணிக்குக் கூடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், பயனாளிகள் தினக்கூலி தொழிலாளர்கள். அடுத்த இரண்டு நாட்களுக்கு தினசரி சம்பாதிப்பதைத் தவிர்த்துவிட்டு மாநிலத்தின் மூலை முடுக்கிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர். அவர்களின் பயணச் செலவுகளை திருப்பிச் செலுத்துவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை, ஆனால் துர்நாற்றத்தைத் தவிர்க்க அவர்கள் சுத்தமான கண்ணியமான உடை அணிந்து வர வேண்டும் என்று அதிகாரிகள் விரும்புகிறார்கள். இது ஏற்றுக்கொள்ள முடியாதது, முரட்டுத்தனமானது என்று மற்றொரு அதிகாரி கூறியுள்ளார்.

Input – DT Next

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry