பாலியல் உறவுக்கு அழைக்கிறார்; கொலை மிரட்டல் விடுக்கிறார்..? ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மீது பெண் பகீர் குற்றச்சாட்டு!

0
182

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் மீது காயத்திரி தேவி என்பவர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். டிஜிபி அலுவலகத்தில் அவர் அளிக்கவுள்ள பாலியல் புகாரில், நான் குடும்பத்தோடு சென்னையில் வாழ்ந்து வருகிறேன். நான் கொடைகானலில் உள்ள தனியார் பள்ளியில் படித்தேன். அதே பள்ளியில் படித்த நாகபிரியாவும் நானும் நல்ல நண்பர்களாக பழகி வந்தோம்.

பள்ளிப் படிப்பை முடித்து நான் சென்னைக்கு வந்துவிட்டேன். அவ்வப்போது தொலை பேசியில் நாகபிரியாவுடன் பேசிக்கொள்வது வழக்கம். 2014-ஆம் ஆண்டு நாகபிரியா தங்கையின் திருமணம் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அந்த திருமண விழாவில் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மகள் கவிதா; அவரது சகோதரர் ரவீந்தரநாத், ரவீந்தரநாத்தின் மனைவி ஆனந்தி ஆகியோரை நாகபிரியா அறிமுகம் செய்து வைத்தார்.

Also Read : நுரையீரல் புற்றுநோயை கண்டறிவது சிரமம்! தம் அடிக்கறவங்க உடனடியா CT SCAN செய்து பாருங்க!

அது முதல் கவிதா மற்றும் ஆனந்தி ஆகியோருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அதன் மூலம் ரவீந்திரநாத்தின் மனைவி ஆனந்தியின் தோழியான மலரின் நட்பு கிடைத்தது. அது முதல் நாகபிரியா, கவிதா, ஆனந்தி, மலர் ஆகியோருடன் நல்ல குடும்பம் போல் பழகி வந்தோம். அதன் காரணமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் அவ்வப்போது சுற்றுலாவிற்கு செல்வது வழக்கம். இதனிடையே ரவீந்திரநாத் அவர்களுக்கும், மலருக்கும் தவறான தொடர்பு காரணமாக, கணவன் மனைவியான ரவீந்திரநாத் மற்றும் ஆனந்தி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

அதன் காரணமாக ஒரே வீட்டில் கணவன், மனைவி இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே மலர் அவர்கள் தனது கணவரான இயக்குனர் பாலா அவர்களை விவாகரத்து செய்துவிட்டு ரவீந்திரநாத் அவர்களுடன் கள்ள உறவில் வாழ்ந்து வருகிறார்.

இந்தப் பிரச்சனை காரணமாக ஆனந்தியிடம் பேசிய போது, “ரவீந்திரநாத் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனது முதல் சபல புத்தி காரராக ஆகிவிட்டர் எனவும், பெண்கள் விவகாரத்தில் மிகவும் மோசமாக நடந்து கொள்வதாகவும், தனது கணவர் மலருடன் குடித்தனம் நடத்தி வருவதாகவும்” என்னிடத்தில் கூறி வருத்தப்பட்டார். இதனிடையே எனக்கும் எனது கணவருக்கும் கடந்த 2022 அண்டு விவாகரத்து ஆனது.

இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரவீந்திரநாத் அவர்களின் எண்ணில் இருந்து எனது கை பேசிக்கு அழைப்பு வந்தது. ரவீந்திரநாத் அண்ணன் தான் பேசுகிறார் என்று எடுத்தேன். மறு முனையில் பேசியவர் தனது பெயர் முருகன் என்றும், தான் ரவீந்திரநாத் அவர்களின் நண்பர் என்றும் தன்னை அறிமுகம் செய்து கொண்ட மேற்கூறிய நபர், ரவீந்திரநாத் அவர்கள் என் மீது ஆசைப்படுவதாகவும்,  என்னை ராணி போல் அவர் பார்த்துக் கொள்வார் எனவும் ஆசை வார்த்தை கூறினார்.

Also Read : பெட்ரோல், டீசல் விலை குறையாததன் பகீர் பின்னணி! ரஷ்ய கச்சா எண்ணெய் மூலம் ரூ.44,000 கோடி லாபம் ஈட்டிய ரிலையன்ஸ்!

அதற்கு உடன்பட மறுத்த என்னை,ர வீந்திரநாத்துடன் உடல் உறவு கொள்ள வேண்டும் என வற்புறுத்தினார். அதற்கு உடன்பட மறுத்தால், எனது குடும்பத்தையும் மற்றும் என்னையும் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டல் விடுத்தார். இது குறித்து ஆனந்தியிடம் சொன்னதும் அவர் தனது கணவரான ரவீந்திரநாத் அவர்களிடம் கேட்டபோது யாராவது தனது கைபேசியை தவறாக பயன்படுத்தி இருப்பார்கள் என தெரிவித்ததாக கூறினார்.

எனவே நானும் இதனை பெரிது படுத்தாமல் விட்டுவிட்டேன். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம்  ரவீந்திரநாத் அவர்கள் நேரடியாக தனது கைபேசியில் இரவு 1 மணி வாக்கில் எனது தொலைபேசி எண்ணிற்கு WHATS APP மூலம் தொடர்பு கொண்டார். நானும் அண்ணன் என்ற முறையில் பேசினேன். என்னைப் பற்றியும், எனது குடும்பம் பற்றியும் பேசத்தொடங்கிய அவர், ஒரு கட்டத்திற்கு மேல் தவறான கண்ணோட்டத்துடன் பேசத் தொடங்கினார்.

என்னை பற்றியும் எனது உடலை பற்றியும் அருவருக்கத் தக்க வகையில் பேசினார். எனது கணவரை விவாகரத்து செய்து விட்டதன் காரணமாக தன்னுடன் உடல் உறவில் ஈடுபட வேண்டும் எனவும் அருவருப்பாக பேசினார். “உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் உனது வீட்டிற்கு வாரேன். இல்லை என்றால் அரசாங்க காரை அனுப்புகிறேன்.

ராணி மாதிரி வா உடலுறவில் ஈடுபடலாம் என்று 20 முறைக்கு மேல் கேட்க, எனது காது கூசியது. நான் உங்கள் தங்கை போன்றவள் என்னிடத்தில் இவ்வாறு போசாதீர்கள் எனவும், நான் உங்களிடம் அண்ணன் என்ற முறையிலேயே பழகிவந்தேன். இது போன்ற என்னத்துடன் என்னை தொடர்பு கொள்ளாதீர்கள் என்று திட்டினேன். மரியாதையாக நான் சொன்னதைக் கேட்டு நட இல்லையேல் உன் குடும்பத்தினரை கொன்றுவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தார்.

Also Read : டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த ஈபிஎஸ் வலியுறுத்தல்!

எவராலும் என்னை எதுவும் செய்ய முடியாது. ஒழுங்காக எனது இச்சைக்கு இணங்கு, இல்லையேல் உனது குடும்பத்தை அழித்து விடுவேன் என மிரட்டி வருகிறார். நான் பயத்தில் கைபேசியை துண்டித்து விட்டேன். வயதான தாய் மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் என்னை தனது பதவி மற்றும் பணபலத்தைக் கொண்டு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தினார்.

பாலியல் ரீதியான தனது ஆசைக்கு இணங்கும்படி துன்புறுத்தியும் மற்றும் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கும் ரவீந்திரநாத் மற்றும் முருகன் ஆகியோர் மீது நான் அளிக்கும் இந்த புகாரினை ஏற்று, தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்து, எனக்கும் எனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு அளிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாக அந்த புகாரில் காயத்திரி தேவி தெரிவித்துள்ளார். இந்தப் புகாரை புதன் கிழமை (02/08/23) டிபிஜியை சந்தித்து காயத்திரி தேவி அளிக்க உள்ளதாக தெரிகிறது.

Gayathri Devi

இதுகுறித்து சென்னையில் இன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய அந்தப் பெண், “இந்த விவகாரம் குறித்து பன்னீரிடம் தெரிவித்துவிட்டேன். அவர் நான் சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டார். மேலும் ஓ.பி.ஆர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்பதற்கு என்னிடம் போதிய ஆதாரங்கள் இருக்கின்றன. அவற்றை டி.ஜி.பி-யிடம் அளிக்கவிருக்கிறேன்” என்றார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry