வார ராசிபலன் – பைக்ல போறவங்க கார் வாங்க சான்ஸ்! செயற்கை முறையில் குழந்தைக்கு முயற்சி செய்தீங்கன்னா…!

0
31
Weekly Horoscope: Check Astrological prediction from October 9th to 15th October 2023 | Image Credit : Adobe

இந்த வார ராசிபலன் – அக்டோபர் 9ல் இருந்து அக்டோபர் 15வரை – மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களை துல்லியமாகக் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிட சிரோன்மணி’ பிரசன்ன ஜோதிடர் ஆர்.கே.வெங்கடேஸ்வரர்.

மேஷம் : எளிதில் உணர்ச்சிவசப்படும் மேஷம் ராசிக்காரர்களே, தாயார் மீது பாசம் அதிகரிக்கும். தாயா? தாரமா? யாருக்கு ஆதரவாக இருப்பது, இருவரையும் திருப்தி படுத்துவது என்று தெரியாமல் அல்லல்படுவீர்கள். உழைத்து சொந்தமாக நிலம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். சிலர் வருங்கால சந்ததியினர் நம் பெயரை சொல்லும்படி வீடு, நிலம் வாங்கி வைக்க வேண்டும் என்ற ஆசை உருவாகும். அசையா சொத்து வாங்க வங்கி கடனும் விரைவாக கிடைக்கும். மேஷ ராசிக்காரர்கள் எப்போதும் பத்திரப்பதிவு விஷயத்தில் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சற்று கவனக்குறைவாக இருந்தாலும் போலி பத்திர மோசடியில் சிக்கி அவதிப்பட நேரிடும் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். வேலைக்காக காத்திருக்கும் இளம் வயதினருக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் நல்ல வேலை கிடைக்கும். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை.

ரிஷபம் : வைராக்கிய குணம் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே சைக்கிளில் சென்றவர்கள் பைக்கில் செல்லவும், பைக்கில் சென்றவர்கள் காரில் செல்லவும் வாய்ப்பு அமையும். ஆடம்பர வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போடுவீர்கள். பெண்கள் அழகு சாதனப் பொருட்களுக்கு அதிகம் செலவு செய்வதை தவிர்ப்பது நல்லது. சிறுக சிறுக சேமித்த பணத்தை கொண்டு தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களை வாங்குவீர்கள். இசை மீது ஆர்வம் அதிகரிக்கும். பாடல், இசை, நடனம் போன்றவற்றில் உள்ளவர்களின் திறமை வெளிச்சத்திற்கு வரும். நீர் வழி சார்ந்த தொழில், படிப்பு அமையும். தாய் மொழியில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு சாதகமான வாரம். இயந்திரங்களை பழுது நீக்கும் வேலை, மரங்களை கொண்டு கலை நுணுக்கமாக செய்யும் தொழிலில் இருப்பவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். இந்த வாரம் சந்திராஷ்டமம் இல்லை.

Also Read : ஆட்டிப் படைக்கும் ஆவி உலகத் தலைவன் மாந்தி! சுப காரியத் தடைகளை ஏற்படுத்தும் சனியின் மகனுக்கு என்ன செய்யலாம்?

மிதுனம் : தந்திரமாக பேசி காரியத்தை முடிப்பதில் வல்லவரான மிதுன ராசிக்காரர்களே, 9ஆம் தேதி பணப்புழக்கம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். பணவரவு திடீரென அதிகரித்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் நண்பர்கள், உறவினர்களுடன் சேர்ந்து சுற்றுலா செல்வது, கேளிக்கைகளில் பங்கேற்பது என்று உற்சாகமாக இருப்பீர்கள். கர்ப்பிணிகள் சற்று கவனமாக இருக்க வேண்டிய வாரம் இது. வாழ்க்கை துணையின் சகோதர, சகோதரிகள் வழியில் ஆதாயம் உண்டு. 15ஆம் தேதி மனக்குழப்பம் அதிகமாக இருக்கும் என்பதால் குடும்ப உறுப்பினர்கள் சார்ந்த விஷயங்களில் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு, விளையாடும் போது எலும்பு முறிவு ஏற்படும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. இந்த வாரம் சந்திராஷ்டமம் இல்லை.

கடகம் : பெரியவர்களை மதிக்கும் குணம் கொண்ட கடக ராசிக்காரர்களே, ராசிநாதன் சந்திரன் தேய்பிறையாக இருந்தாலும் ஓரளவுக்கு சாதகமான நிலையில் இருப்பதால் அனுகூலமான வாரம் இது. சோம்பேறித்தனம் குறைந்து சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பிறகு பார்த்து கொள்ளலாம் என்று தள்ளிப்போட்ட வேலைகளை இந்த வாரம் விரைவாக செய்து முடிப்பீர்கள். 10, 11, 12 ஆகிய தேதிகளில் குடும்பத்தில் குதூகலம் பொங்கும். மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் மறந்து
குடும்பத்தில் உள்ள பெண்கள் மூலம் ஆதாயம் உண்டு. அசையும் அசையா சொத்துக்கள் வாங்க தாயாரிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். இந்த வாரம் சந்திராஷ்டமம் இல்லை என்றாலும் 13, 14 ஆகிய தேதிகளில் மனக்குழப்பம் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள், புதிதாக அறிமுகமாகும் நபர்களால் பிரச்னைகள் ஏற்படும் என்பதால் கவனமாக இருங்கள்.

Also Read : குளிகை நேரத்தில் இத மட்டும் செஞ்சிருங்க..! அப்புறம் நீங்க டாப்தான்! Kuligai Neram is Good or Bad!

சிம்மம் : யாருக்கும் அஞ்சாத குணம் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, 9ஆம் தேதி செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ள நாற்பது வயதுகளை கடந்த பெண்களுக்கு மருத்துவ செலவுகளை செய்ய நேரிடும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளும் முன்பு வாகனங்கள் நல்ல நிலையில் உள்ளதா? என்பதை முன்கூட்டியே பார்த்து விடுங்கள். இல்லையென்றால் பயணங்களின்போது வாகனங்கள் நடுவழியில் பழுதாகி வீண் அலைச்சல், தொல்லைகளை தரும். திருமண முயற்சிகளில் தடை, தாமதம் ஏற்படும். வரன் பார்த்த இடங்களில் இருந்து தெளிவாக எந்த பதிலும் கிடைக்காமல் குழம்பும் நிலை உண்டாகும். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையின் பிடிவாத குணத்தால் பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்பதால் கவனமாக இருங்கள். இந்த வாரம் சந்திராஷ்டமம் இல்லை.

கன்னி : லட்சியத்திற்காக எதையும் செய்யும் கன்னி ராசிக்காரர்களே, மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு சாதகமான வாரம் இது. மந்தமாக இருந்தவர்கள் வேகமாக சிந்தித்து செயல்படுவீர்கள். வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். பதவி உயர்வு, சம்பள உயர்வு, புதிய பொறுப்புகள் உங்களை தேடி வரும். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வேலை நிமித்தமாக வெளியூர், வெளி மாநிலங்களுக்கு சென்று வருவீர்கள். ஹோட்டல், கேட்டரிங், உணவு பொருட்கள் உற்பத்தி, சப்ளை, டெலிவரி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான வாரம். 10, 11, 12 ஆகிய தேதிகளில் குடும்ப உறுப்பினர்களுக்கு உடல் நலக்குறைவு, மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும் என்பதால் விரையங்கள் அதிகரிக்கும். சந்திராஷ்டமம் இந்த வாரம் இல்லை.

Also Read : பஞ்சாங்கம் என்றால் என்ன? எது சரியானது… திருக்கணிதப் பஞ்சாங்கமா, வாக்கியப் பஞ்சாங்கமா?

துலாம் : பிரச்னைகளில் தானே மாட்டிக்கொள்ளும் துலாம் ராசிக்காரர்களே, ராசியில் கேது, செவ்வாய் இருப்பதால் வீண் விவாதங்கள், தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையை புகழ் பேசவில்லை என்றாலும் குறைக் கூறி பேச வேண்டாம். வேலை, தொழில் செய்யும் இடங்களில் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். மேலதிகாரிகள் கடிந்து கொண்டாலும் கோபப்படாமல் அமைதியாக கடந்து செல்வது நல்லது. குழந்தை பாக்கியத்திற்காக தவமாய் தவமிருந்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். செயற்கை முறையில் குழந்தைக்கு முயற்சி செய்தவர்களுக்கு கைமேல் பலன் கிடைக்கும். இந்த வாரம் சந்திராஷ்டமம் இல்லை என்றாலும் 13, 14 ஆகிய தேதிகளில் செலவுகள் அதிகரிக்கும். அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனடியாக செலுத்தி விடுங்கள். வியாபாரம், தொழில் செய்பவர்கள் சட்டவிதிகள் படி நடந்துக் கொண்டால் பிரச்னைகளை தவிர்த்து விடலாம்.

விருச்சிகம் : அன்புக்கு அடிமையான விருச்சிக ராசிக்காரர்களே, பாக்கியாதிபதி சந்திரன் தேய்பிறை நிலையில் இருந்தாலும் ஆட்சி பெற்றிருப்பதால் இந்த வாரம் நல்ல விஷயங்கள் அடுத்தடுத்து நடக்கும். கவுரவமான பதவி உங்களை தேடி வரும். சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். தாயார் மூலம் அதிர்ஷ்டத்தை அடைவீர்கள். ஆராய்ச்சி தொடர்பான படிப்புகளில் ஆர்வம் அதிகரிக்கும். விவசாயம், நீர் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான வாரம். உடன் பிறந்தவர்களுக்கு சுப நிகழ்ச்சிகளை செய்து அழகு பார்ப்பீர்கள். வாழ்க்கை துணை வழியில் அசையா சொத்து வந்து சேரும். அரசு ஊழியர்கள், அதிகாரிகளின் ஆசைகள் நிறைவேறும். அரசு ஒப்பந்ததாரர்களுக்கு ஆதாயம் உண்டு. இந்த வாரம் சந்திராஷ்டமம் இல்லை என்றாலும், வார இறுதி நாட்களில் அலைச்சலால் உடல் சோர்வு உண்டாகும். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது.

Also Read : திருமணத்திற்கு எத்தனைப் பொருத்தம் தேவை? பூப்பெய்திய நேரம் வைத்து ஜாதகம் கணிப்பது சரியா? Part – 2

தனுசு : தியாக குணம் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, 9ந்தேதி வரை சந்திராஷ்டமம் என்பதால் சற்று கவனமாக இருங்கள். தாயாருடன் கருத்து வேறுபாடு ஏற்படும் என்பதால் முடிந்தவரை தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. 10 ம் தேதிக்கு பிறகு கலைத்துறையில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்ட காற்று வீசும். வேலை பளு, அலுவலக பிரச்னைகளுக்கு மத்தியில் குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். வாழ்க்கை துணையுடன் பிறந்தவர்கள் இக்கட்டான சூழ்நிலையில் உதவுவார்கள். இதுநாள்வரை நல்ல வேலை இல்லையே என்று ஏங்கிய உங்களுக்கு குடும்பத்தினர் பெருமைப்படும் வகையிலான வேலை கிடைக்கும். உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். தந்தையின் தொழில், வியாபாரத்தை செய்பவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். முக்கியமான வேலையை 10ம் தேதிக்கு பிறகு செய்வது நல்லது.

மகரம் : உடல் பலவீனம் கொண்ட மகர ராசிக்காரர்களே, தம்பதிகளிடையே இதுவரை இருந்த மன வருத்தம், கருத்து வேறுபாடுகள் விலகும். மீண்டும் பழைய அன்யோன்யம் மலரும். காதலர்களிடையே இருந்த மோதல்கள் மறைந்து சந்தோஷமாக இருப்பார்கள். மாமன் வழி உறவினர்கள் இடையே இருந்த பிரச்னைகள் நீங்கி உதவிகள், ஆதாயம் உண்டு. அலுவலகங்கள், வியாபாரம் செய்யும் இடத்தில் மனதில் பட்டதை பேசாமல் இருந்த நீங்கள் தற்போது அனைத்தையும் தைரியமாக பேசுவீர்கள். ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். ஆன்மிக சொற்பொழிவாளர்கள் புகழ் வெளிச்சத்திற்கு வருவார்கள். 10, 11, 12 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் என்பதால் வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனமாக இருங்கள். கடன் அன்பை முறிக்கும் என்பதை நினைவில் கொண்டு நண்பர்கள், உறவினர்களுக்கு பண உதவி செய்வது ஜாமினுக்கு கையெழுத்து போடுவதை தவிர்ப்பது நல்லது.

Also Read : ரஜினிகாந்த் முதல் யோகி பாபு வரை வெற்றிபெறுவதன் ரகசியம் இதுதானா? யார் இந்த கரணநாதன்?

கும்பம் : செய்யும் தொழிலே தெய்வம் என்று எண்ணும் கும்ப ராசிக்காரர்களே, ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும் தற்போது இருக்கும் வேலையை எக்காரணம் கொண்டு விடக்கூடாது. தொழிலில் எதிர்பார்த்த வருமானம், லாபம் இருக்காது. தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்தினால் லாபம் அதிகமாகும் என்று மற்றவர்கள் சொல்வதை நம்பி முதலீடு செய்ய வேண்டாம். ஜென்ம சனியின் கட்டுப்பாட்டில் உள்ளதை நினைவில் கொண்டு இருப்பதை காப்பாற்றி கொள்ளுங்கள். தன்னம்பிக்கை, பொறுமை, நிதானத்தை கை விடாதீர்கள். உங்களுக்கு கடுமையான சோதனை காலம் என்பதால் என்ன நடந்தாலும் மாற்றம் ஒன்றே மாறாதது என்று நினைவில் கொண்டு கடந்து செல்லுங்கள். காலமும் மாறும் காட்சிகளும் மாறும் என்பதால் உங்களுக்கான நேரம் வரும் வரை காத்திருங்கள். 13, 14 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக இருங்கள்.

மீனம் : உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொண்ட மீன ராசிக்காரர்களே, உடல் உஷ்ணம், கண் எரிச்சல், நரம்பு தொடர்பான பிரச்னைகளால் அவதிப்படுவீர்கள். பெற்றோரின் பேச்சை கேட்டு நடந்து கொள்ளும் பிள்ளைகளாக இருப்பீர்கள். 10, 11, 12 ஆகிய தேதிகளில் எதிர்பாலினத்தவரால் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக பெண்களால் வாக்குவாதம், பெண்களிடம் வாக்குவாதங்கள் உண்டாகும் என்பதால் கவனமாக இருங்கள். கோபத்தை குறைத்து கொள்வதுடன், பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது. 15ஆம் தேதிக்கு பிறகு சந்திராஷ்டமம் என்பதால் முக்கிய வேலைகளை 14ஆம் தேதிக்குள் முடித்து விடுங்கள். குடும்பத்திற்காகவும், குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக செலவுகளை செய்தாலும் நல்ல பெயரை எதிர்பார்க்காதீர்கள்.

தொடர்புக்கு:- ‘ஜோதிட சிரோன்மணி’ ஆர்.கே.வெங்கடேஸ்வரர். ஸ்ரீ மாருதி ஜோதிட ஆராய்ச்சி மையம், சென்னை. astrovenkataeswar@gmail.com, அலைப்பேசி – 91590 13118.

ஜோதிடம் தொடர்பான சந்தேகங்கள், கேள்விகளை 91590 13118 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப்பிலோ அல்லது astrovenkataeswar@gmail.com என்ற மெயிலுக்கோ அனுப்பினால், வரும் நாட்களில் வேல்ஸ் மீடியா இணைய இதழில் பதில்கள் வெளியாகும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry