ஜரூராக நடக்கும் மண் திருட்டு! ஜேசிபி மூலம் இரவு பகலாக மண் அள்ளுவதாக பாஜக புகார்!

0
40

கரூர் மாவட்டம், வெள்ளியணை தென் பாகத்தில் உள்ள பெரிய குளத்தில் இரண்டு நாட்களாக ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு அவசர அவசரமாக அதிக அளவில் டிப்பர் லாரிகளில் இரவு பகலாக குளத்து மண் கடத்துவதாக புகார் எழுந்துள்ளது.

Also Read : ஈரானிய ஹிஜாப் விதிகளுக்கு எதிராக கர்ஜனை! பெண்கள் முடியை வெட்டி போராட்டம்!

வெள்ளியணை பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியினர் அந்த இடத்திற்கு சென்று குளத்து மண் எடுப்பதற்கு முறையான அனுமதி உள்ளதா என்று விசாரித்த போது, மண் அள்ளுபவர்கள் முறையான பதில் சொல்லவில்லை.

பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் ஆலோசனையின் பேரில் கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. மேலும், வெள்ளியணை காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Also Read : ஆவின் பால் பாக்கெட்டில் ‘ஈ’! பேக்கிங்கில் தவறு நடந்திருக்கலாம் என நிர்வாகம் விளக்கம்! நுகர்வோர் அதிர்ச்சி!

இதுகுறித்து கூறும் கரூர் மாவட்ட பாஜக விவசாய அணி தலைவர் முத்துசாமி, “மாவட்டம் முழுவதும் தொடர்ந்து இதுபோன்று மண் திருட்டு நடக்கிறது. சட்டவிரோதமாக மண் அள்ளி தனி நபர்கள் தமிழக அரசை ஏமாற்றி கொள்ளை லாபம் அடித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அரசுக்கு ஏற்படுகின்ற இழப்பை தடுக்கவும், கனிம வளங்களை பாதுகாக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், சட்ட விரோதமாக மண் அள்ளும் லாரிகளை சிறை பிடிப்பதோடு, கரூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்களை திரட்டி, மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டி வரும்.” இவ்வாறு தெரிவித்தார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry