சமூக நீதியை குழிதோண்டி புதைக்கிறார் ஸ்டாலின்! #NEP2020 விவகாரத்தில் பா.ஜ.க. அடுக்கடுக்கான கேள்வி

0
8

பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமுதாயத்தினரின் கல்வி மேம்பாட்டை, சீர்திருத்தத்தை வலியுறுத்தும் தேசிய கல்வி கொள்கையை எதிர்ப்பதன் மூலம், மு.க. ஸ்டாலின் சமூக நீதியை குழி தோண்டி புதைப்பதாக பா... செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புதிய தேசிய கல்வி கொள்கையை மாநிலங்களில் உடனே நடைமுறைப்படுத்தாமல்  நிறுத்தி வைக்க வேண்டும் என பிரதமருக்கு மு..ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். புதிய தேசிய கல்வி கொள்கையில் 6வது பிரிவில், அனைவரையும் உள்ளடக்கிய அனைவருக்கும் சமமான கல்வியை அளிக்க வேண்டும் என வலியுறுத்துவதால், இதை நிறுத்தி வைக்க வேண்டும் என ஸ்டாலின் விரும்புகிறாரா?

சமூக, பொருளாதார, பாலின மற்றும் உடல் குறைபாடுகளின் அடிப்படையில் சமூகத்தில் உள்ள பாகுபாடுகளால் மறுக்கப்பட்டு கொண்டிருக்கும் கல்வியை குழந்தைகளுக்கு தங்கு தடையில்லாமல்  சென்று சேர்க்க வேண்டும் என வலியுறுத்துவதால், நிறுத்தி வைக்க வேண்டும் என ஸ்டாலின் விரும்புகிறாரா?

பள்ளி கல்வி மற்றும் உயர் கல்வியில் இடைநிற்றல் அதிகளவில் இருப்பது, பட்டியிலன, பழங்குடி, இஸ்லாமிய சமுதாயத்தினரிடம் தான் என்பதை புள்ளி விவரங்களோடு குறிப்பிட்டு, மேற்கண்ட பிரிவினர் அதிகம் வாழும் பகுதிகளை  சிறப்பு கல்வி மண்டலங்களாகஅறிவித்து, அவர்களை ஊக்கப்படுத்த தங்கு தடையில்லா கல்வியை பெறுவதற்கான பல சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் அளிப்பததோடு, கூடுதல் நிதியை ஒதுக்க   வேண்டும் என பாஜக அரசின் புதிய தேசிய கல்வி கொள்கை வலியுறுத்துவதால், இதை நிறுத்தி வைக்க வேண்டும் என ஸ்டாலின் விரும்புகிறாரா?

தற்போதைய கல்வி முறையில் அதிகளவில்  கல்வி மறுக்கப்படுவதும், இடைநிற்றல் அதிகமாய் இருப்பதும் பெண் குழந்தைகளுக்கே என்பதை கண்டறிந்து, நாட்டின் வளர்ச்சி, சமூக, கலாச்சார முன்னேற்றத்தில் தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையில் பெண்களின் பங்கை உணர்ந்து, புதிய தேசிய கல்வி கொள்கையானது, பெண் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டில் தீவிர கவனம் செலுத்துவதற்காக, பாதுகாப்பு மிக்க நவீன உறைவிட பள்ளிகளை உருவாக்குவதோடு, பள்ளி செல்லும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கழிப்பறை வசதிகள், மற்றும் இதர தேவையான வசதிகளை உறுதி செய்ய மத்திய அரசு நிதி தொகுப்பை உருவாக்கி  அனைத்து மாநிலங்களுக்கும் வழங்குவதன் மூலம் பெண் குழந்தைகள் அதிக அளவில் கல்வியில் மேம்பட்டு விடுவார்கள் என்பதால், இதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று விரும்புகிறாரா?

சமூகநீதி காக்க அனைத்து  குழந்தைகளையும் உள்ளடக்கிய, சமமான கல்வி பெறுவதற்கு பள்ளிகளில் நிலவும் தற்போதைய கலாச்சாரத்தை மாற்றியமைப்பது இன்றியமையாதது என்று தேசிய கல்வி கொள்கை குறிப்பிட்டிருப்பதோடு, பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் அனைவரும்,  அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவமிக்க வகையில் அனைத்து பிரிவினரையும்  கண்ணியத்தோடு கூடிய மரியாதையை பேணிகாக்கும் கலாச்சாரத்தை கடைபிடிக்கும் அமைப்பை  உருவாக்குவது அவசியம் என்றும், சமூக ரீதியாக பின்தங்கிய சமுதாயத்திலிருந்து தரமிக்க கல்வி பயின்ற ஆசிரியர்களை, தலைவர்களை உருவாக்குவதன் மூலம் பிற்படுத்தப்பட்ட, பட்டியிலன, சிறுபாண்மை மக்களின் மேம்பாட்டை உறுதி செய்யும் இந்த புதிய கல்வி கொள்கை என்பதால் நிறுத்தி வைக்க வேண்டும் என்கிறாரா

பண்டைய இந்திய நாகரீகத்தின் தத்துவத்தையும், வேற்றுமையில் ஒற்றுமையுள்ள இந்தியாவின் கலாச்சாரத்தையும் குழந்தைகள் கற்க வேண்டும் என்பதால் அனைத்து மதங்கள் குறித்தும், அவை அனைத்துமே பொதுவான கலாச்சாரத்தை, ஒற்றுமையை, ஒழுங்கை போதிக்கின்றன என்பதை குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும் என்பதை குறிப்பிடுவதாலும், ஒரே மதத்தின் வழிபாடு, சடங்குகள் அல்லது கொள்கைகள்  பள்ளிகளில் கடைபிடிக்க கூடாது என்பதோடு  அனைத்து மதங்களும் சமமாக போற்றப்படவேண்டும் என அறிவுறுத்தப்படுவதால்  இந்த புதிய கல்வி கொள்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என விரும்புகிறாரா ஸ்டாலின்?

பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை  சமுதாயத்தினரின் கல்வி மேம்பாட்டை , சீர்திருத்தத்தை வலியுறுத்தும் தேசிய கல்வி கொள்கையை எதிர்ப்பதன் மூலம் சமூக நீதியை குழி தோண்டி புதைக்க முயற்சிக்கும் தி மு க தலைவர் ஸ்டாலினின் கோரிக்கையை பாஜக அரசு ஒருபோதும் ஏற்காது என்றும்  நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.