கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி மாதம் தொடக்கம்! முதல் கட்டமாக 30 கோடி பேருக்கு செலுத்தத் திட்டம்!

0
40

ஜனவரி மாதம் எந்த வாரத்திலும் தடுப்பூசி போடும் பணி தொடங்கலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார். கொரோனா தடுப்புப்பணியில் இருக்கும் முன்களப் பணியாளர்கள், ராணுவ வீரர்கள், காவலர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “இந்தியாவில் ஜனவரி மாதத்தில் எந்த வாரத்திலும் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தலாம். முன்களப்பணியாளர்கள், முதியோர்கள் உள்பட 30 கோடி பேருக்கு முதலில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.

Also Read: கோவிட்-19 தடுப்பூசிக்கு இணையதளத்தில் முன்பதிவு! புகைப்பட அடையாள அட்டை அவசியம்!

கொரோனா தடுப்பூசி தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் கடந்த 4 மாதமாக மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்த 260 மாவட்டங்களில் 20 ஆயிரம் பணியாளர்களுக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு, தடுப்பூசியின் வீரியம்தான் எங்களுக்கு முக்கியம்.

Also Read : கோவாக்சின் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது! நம்பிக்கை அளிக்கும் முதல் கட்ட பரிசோதனை முடிவு!

அவசர தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ள தடுப்பூசி மருந்துகளை, மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு பரிசீலனை செய்து வருகிறதுமுன்னுரிமை பட்டியலில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட முயற்சி மேற்கொண்டு வருகிறோம். தடுப்பூசி போடுவதற்கு தயங்கும் நபர்களுக்கு மருந்தின் பாதுகாப்புத் தன்மை குறித்து விளக்கம் அளிக்கப்படும். ஆனால் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என்று யாராவது முடிவு செய்தால், நாங்கள் அவர்களை கட்டாயப்படுத்த முடியாது, இவ்வாறு அவர் கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry