Thursday, March 19, 2026
Home Blog Page 111

ரூ.4,730 கோடி மணல் குவாரி ஊழல்! அதிகாரிகள் – ஒப்பந்ததாரர்கள் இடையே கூட்டு! DGPக்கு அமலாக்கத்துறை ஆதாரத்துடன் கடிதம்! பெரும் சிக்கலில் தமிழக அரசு!

2.50 Mins Read : ரூ.4,730 கோடி மணல் குவாரி ஊழலில் அரசு அதிகாரிகளுக்கும், தனியார் ஒப்பந்ததாரர்களுக்கும் இடையே கூட்டு இருப்பதாக தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை அனுப்பியிருக்கும் அறிக்கை தமிழ்நாடு அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டவிரோதமாக 23.6 லட்சம் யூனிட் மணல் அகழ்வு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் அமலாக்கத்துறை கூறியுள்ளது.

நீட் தேர்வும் வேண்டாம், நியமனத் தேர்வும் வேண்டாம்! டெட் தேர்ச்சி பெற்றவர்களை பணியமர்த்த தமிழக அரசுக்கு ஐபெட்டோ வலியுறுத்தல்!

2026ம் ஆண்டு சனவரி மாதத்துக்குள் 19,260 ஆசிரியர் பணியிடங்கள் உட்பட 76,803 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என சூன் 25 அன்று, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்துள்ளதை தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பாராட்டி வரவேற்று மகிழ்கின்றோம் என்று அந்த அமைப்பின் மூத்த தலைவரும், ஐபெட்டோ தேசிய செயலாளருமான அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னையை மீட்டுத் தந்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி.! இன்றைய அரசியலுக்கும் பொருந்தும் சிலம்புச் செல்வரின் கருத்துகள்!

4.30 Mins Read : மெட்ராஸ் ஸ்டேட்’ என அழைக்கப்பட்டு வந்த சென்னை மாகாணத்திற்கு, 1968ம் ஆண்டு தமிழ்நாடு என அழகான பெயர் சூட்டப்பட்டது. இதற்கான தீர்மானம், அன்றைய சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது, முதலமைச்சர் அண்ணாவால் பெரிதும் பாராட்டிப் பேசப்பட்டார் அந்த தலைவர். அந்த பாராட்டுக்கும் பெருமைக்கும் உரிய அந்த தலைவர், ம.பொ.சி. என்கிற மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம். ‘தலைநகர் சென்னை’ என இன்று நாம் போற்றிக்கொண்டாடும் சென்னை, நம்மை விட்டு செல்லும் நிலை வந்தபோது, பெரும்போராட்டங்களை நடத்தி, அதை நமக்கு மீட்டுக்கொடுத்த பெருந்தகை இவர்தான் என்பது இன்றைய தலைமுறையினர் அறியாதது.

திமுகவுக்கு சவால்விடும் கம்யூனிஸ்ட்! முல்லைப் பெரியாறு உள்பட 9 அணைகளை கட்ட கேரளா முடிவு! தமிழகத்திற்கு வரும் தண்ணீரைத் தடுக்க 4 ஆறுகளின் குறுக்கே தடுப்பணை!

முல்லைப் பெரியாறு உட்பட ஒன்பது புதிய அணைகளை கட்ட கேரளா திட்டமிட்டுள்ளதாக கேரளா நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் கூறியிருக்கிறார். சாலியாறு, பம்பை-அச்சன் கோவிலாறு, முல்லைப் பெரியாறு, பட்டிசேரி தடுப்பணை, சட்டமூணாறு தடுப்பணை என தமிழகத்தின் நீராதாரங்களின் மீது கை வைக்க கேரள மாநில அரசு முனைந்திருப்பதை, அமைச்சரினுடைய முழு பேச்சிலிருந்து தெரியவருவதாக பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது.

துளசி மாடத்தை எந்தத் திசையில் வைக்க வேண்டும்? பணம் பெருமளவில் சேர துளசிக்கு எப்படி தண்ணீர் ஊற்ற வேண்டும்? Vastu for Tulsi Plant!

துளசி செடி இந்து மதத்தில் புனிதமான தாவரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்து மத நம்பிக்கையின் படி, செல்வத்தின் தெய்வமான லட்சுமி, துளசி செடியில் வசிப்பதாக நம்பப்படுகிறது. துளசி செடியை சரியாக வழிபட்டால் அல்லது சரியாக கவனித்துக்கொண்டால், அந்த நபருக்கு வீட்டில் எந்த நிதி பிரச்னையும் இருக்காது என்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

வாட்ஸ் அப் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி! இந்த ஒரு நம்பர உங்க ஃபோன்ல சேவ் பண்ணாலே போதும்..!

தமிழ்நாட்டில் உள்ள மின்சார பயனாளிகளுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது TANGEDCO இணையதளம் மூலம் ஆன்லைனில் மின் கட்டணம் வசதி நடைமுறையில் உள்ள நிலையில், கட்டணம் செலுத்துவதை மேலும் எளிமையாக்கும் வகையில், வாட்ஸ்அப் (WhatsApp) வழியாக கட்டணம் செலுத்தும் புதிய சேவையை டான்ஜெட்கோ அறிமுகப்படுத்தி உள்ளது.

பள்ளிக் கல்வித்துறை யார் கட்டுப்பாட்டில் உள்ளது? திராவிட மாடல் அரசு என்பதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிந்து வைத்துள்ளாரா? என ஐபெட்டோ கேள்வி?

பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்புவதாக எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. ஆசிரியர்கள் சங்கங்களிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தீர்வு காண்பதாக ஒப்புதல் அளித்துள்ள 12 கோரிக்கைகளில் கணினி பணியாளர் நியமனத்தைத் தவிர வேறு எதையும் அறிவிக்கவில்லை, பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாடு எவரிடம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளவும் முடியவில்லை என்று ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணி மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

antalya bayan escort