Monday, February 16, 2026
Home Blog Page 67

இரண்டு நாட்களே நடந்த பேரவை! 72 ஆண்டு வரலாற்றில் முதல்முறை! ஆளும் கட்சி அஞ்சி நடுங்குவதாக ராமதாஸ் விமர்சனம்!

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடர் இதுவரை இல்லாத வகையில் இரு நாட்கள் மட்டுமே நடைபெற்று முடிந்திருக்கிறது. சுதந்திரத்துக்கு பிந்தைய தமிழக சட்டப்பேரவையின் 72 ஆண்டு கால வரலாற்றில், சிறப்புத் தீர்மானங்களை நிறைவேற்றும் நோக்குடன் ஒரு நாள் மட்டும் கூட்டப்பட்ட கூட்டங்களைத் தவிர, ஒரு கூட்டத்தொடர் 2 நாட்கள் மட்டுமே நடைபெற்றிருப்பது இதுவே முதல் முறை.

ஆண்டாளாக மாறி, ஆண்டனிக்கு கழுத்தை நீட்டிய கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் வெட்டிங் போட்டோஸ்!

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அதிகமுகமாகி இப்போது பலமொழிகளில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ், தனது 15 வருட காதலரான ஆன்டனியை இன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் கோவாவில் பிராமண வைணவ முறைப்படி நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இளசுகளை பாடாய்ப்படுத்தும் ‘சைபர் புல்லியிங்’ எனப்படும் இணைய மிரட்டல்..! அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்!

தற்போதைய காலகட்டத்தில், சிறுவர் முதல் முதியோர் வரை இணையத்தில் இல்லாதவர்களே இல்லை. இப்படிச் சகலரும் புழங்கும் பொதுவெளியான இணையத்தில் எத்தகைய ஆபத்துக்கள் காத்திருக்கின்றன என்பதை அறிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, மன முதிர்ச்சி முழுமை பெறாத வயதிலிருக்கும் போதே, சிறு பிள்ளைகளை இணையத்திற்கு, அறிமுகப்படுத்துவது பெற்றோரால் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்ட இந்தக் காலகட்டத்தில், சிறார்களைக் குறிவைத்துத் தாக்கும் ‘சைபர்-புல்லியிங்’களைப் பற்றி அறிந்து கொள்வது அவசியமான ஒன்று.

அரசு மருத்துவமனைகளில், மருந்துகள் மற்றும் பணியாளர்கள் கடுமையான பற்றாக்குறை! அம்பலப்படுத்திய சிஏஜி அறிக்கை!

இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில சுகாதாரத் துறையில் பிளாக் விரிவாக்க பயிற்றுநர், குடும்ப நல உதவியாளர், சுகாதார பெண் பார்வையாளர், குழந்தை நல அதிகாரி போன்ற பணியிடங்களில் 75% மேல் பற்றாக்குறை இருக்கிறது. இரண்டாம்நிலை சிகிச்சை மையங்களில் மருத்துவ மற்றும் உதவி மருத்துவ பணியாளர்கள் தேவைக்கு ஈடாக இல்லை.

தினமும் 15 முருங்கை இலைகளை சாப்பிட்டால்..? பிரமிக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

முருங்கை செடி அதன் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்து மதிப்புக்கு பெயர் பெற்றது. முருங்கை இலை, ஈர்க்கு, பூ, காய், பிஞ்சு, பிசின், பட்டை, வேர் என அனைத்துப் பாகங்களும் மருந்தாகப் பயன்படுகின்றன. முருங்கைக் கீரையில், நார்ச்சத்து, இரும்புச் சத்து என நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

பகுதிநேர ஆசிரியர்கள் கைதுக்கு டாக்டர் ராமதாஸ் கணடனம்! பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மீது கடும் விமர்சனம்!

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த திமுக, அவர்களுக்கு அளிக்கப்பட்ட பணிநிலைப்பு, ஊதிய முரண்பாடு நீக்கம், பழைய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக, போராடும் ஆசிரியர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்க! தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறும் ஐபெட்டோ வலியுறுத்தல்!

ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை புலனப் பதிவாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “முந்தைய ஆட்சியாளர்களால் தையல் ஓவியம் உடற்கல்வி கணினி இசை என 16 ஆயிரம் பேர் சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். அந்த எண்ணிக்கையில் இறந்தவர்கள், ஊதிய பற்றாக்குறையால் பணியை விட்டு விலகியவர்கள் என 4000 பேர் இப்போது பணியில் இல்லை. எஞ்சியுள்ள 12000 பேர் தான் இப்போது பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் தான் போராடி வருகிறார்கள்.

AIFETO Annamalai

முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தொகுப்பூதியத்தில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் என 52,000 பேர் பணியமனம் செய்யப்பட்டார்கள். கருணாநிதி ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அனைவருடைய வேண்டுகோளினையும் ஏற்று கொண்டதோடு அவர்களின் ஊதியப் பாதிப்பினையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, ஒரே கையெழுத்தில் அவர்கள் அனைவரையும் காலமுறை ஊதியத்திற்கு கொண்டுவந்து பணிவரன் முறை செய்து ஆணை வழங்கினார். நெஞ்சிருக்கும் வரை எவராலும் இதை மறக்கத்தான் முடியுமா?

கருணாநிதியின் மகனாக, தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வரும் இந்த 12 ஆயிரம் பேரையும் பணி நிரந்தரம் செய்து, அவர்களை முழு நேர சிறப்பாசிரியர்களாக ஆணை வழங்கி உதவிடுமாறு பாதிக்கப்பட்டவர்களின் சார்பாகவும், ஆட்சியின் மீது அக்கறை கொண்டுள்ள தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பிலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பெரிதும் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

Also Read : எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கான கருத்தாளர்களை நியமிப்பதில் விதிமீறல்! சட்ட நடவடிக்கைக்கு தயார் என ஐபெட்டோ அறிவிப்பு!

மறைந்த முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் நாங்கள் போராடுகிற பொழுது, என் பெயருக்கு முன்னால் உள்ள கருணை என்னிடம் நிறைய இருக்கிறது, ஆனால் பின்னால் உள்ள அந்த இரண்டு எழுத்து (நிதி) என்னிடம் இல்லையே என்று நகைச்சுவையாக பேசுவார். ஆனால் அவரது காலத்தில்தான் நான்கு ஊதிய குழுக்களை அமல்படுத்தினார். மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கொண்டு வந்தார்.

தங்கள் ஆட்சிக் காலத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டுள்ள பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட ஏதாவது சிலவற்றையாவது செய்து கருணாநிதி அரசின் சரித்திரத்தினை தொடர வேண்டுமாய் மீண்டும் மீண்டும் பெரிதும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒரு முதலமைச்சர்… ‘தமிழ்நாடு முதலமைச்சர்’ என்ற வரலாற்று பதிவு ஏற்படாதவாறு பாதுகாத்திட வேண்டுகிறோம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Also Read : பூனை குறுக்கே சென்றால் அபசகுனமா? பூனை சகுனத்தில் மறைந்திருக்கும் அறிவியல் ரகசியம்!

முன்னதாக, தமிழகத்தில் அரசு பள்ளியில் பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஆட்சியின்போதே பல்வேறு போராட்டங்களை தீவிரமாக நடத்தி வந்தனர். அப்போதைய போராட்டங்களில் தற்போது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது நேரடியாக கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகள் அனைத்தும் ஆட்சி அமைந்த உடன் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

Part-time teachers arrested by police and detained at Rajarathinam Stadium in Chennai.

மேலும், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என திமுக தேர்தல் அறிக்கையிலும் தெரிவித்திருந்தனர். திமுகவின் தேர்தல் வாக்குறுதியின் 181 நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த ஆண்டு போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டு அனைத்து பகுதிநேர ஆசிரியர்களும் ஒன்றாக இணைந்து இன்று கோட்டை முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டனர். இதற்காக திரண்ட 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை போலீஸார் கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தங்க வைத்துள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

antalya bayan escort