ஒவ்வொரு மாதமும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு உரிய தரத்தில் இல்லாத மருந்துகளின் பட்டியலை வெளியிடும். ஆகஸ்ட் மாதத்துக்கான பட்டியலில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் பாராசிடாமல், பேன் டி உள்ளிட்ட 48 மருந்துகள் இடம்பெற்றுள்ளன. பான்-டி, பாராசிட்டமால், BP மருந்துகள், நீரிழிவு எதிர்ப்பு மருந்துகள், வைட்டமின்கள் மற்றும் கால்சியம் சப்ளிமெண்ட்ஸ் ஆகியவை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நன்கு அறியப்பட்ட மருந்துகளாகும்.
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! வெந்நீர் குடிச்சா…!
காலையில் எழுந்தவுடன் பலரும் முதலில் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்திருப்போம். தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது, காலையில் பல் துலக்காமல் தண்ணீர் குடித்தாலும், ஆரோக்கியத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. தாகம் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் காலையில் தண்ணீர் குடிப்பது நல்லது.
கார்ப்பரேட்டுகளால் ஜெயிக்க வைக்கப்பட்ட அநுர குமார திசாநாயக்க! இடதுசாரிகளின் வெற்றியாக நம்பவைக்க மெனக்கெடும் ஊடகங்கள்!
இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றதையடுத்து, இடதுசாரி சிந்தனையாளர் நாட்டின் அதிபராகியிருக்கிறார், கொள்ளையடித்த அரசியல்வாதிகளுக்கு சிறைதான்; இனப் பிரச்சனையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட அழைப்பு விடுத்திருக்கிறார் என்றெல்லாம் வெளியான தகவல்கள் இலங்கை மட்டுமின்றி அண்டை நாடுகளிலும் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன.
சாமிக்கு தேங்காய், வாழைப்பழம் படைப்பதன் பின்னணி! முன்னோர்கள் சும்மா சொல்லிட்டு போகலைங்க..!
பொதுவாக நாம் செய்யும் அனைத்து பூஜைகளிலும் கடவுளுக்கு வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தேங்காய் போன்றவற்றை தவறாமல் படைப்பதுண்டு. மற்ற பழங்கள் பல இருக்கும்போது, அது ஏன் குறிப்பாக வாழைப்பழமும், தேங்காயும் கடவுளை வழிபடும்போது படைக்கப்படுகிறது என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறோமா?
பொன்முடி இலாகா மாற்றத்தின் பின்னணியில் எ.வ. வேலு, ஆளுநர் ரவி! Minister K. Ponmudi sidelined in DMK!
உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி (இயற்பெயர் – தெய்வசிகாமணி, த/பெ கந்தசாமி), வனத்துறை அமைச்சராக மாற்றப்பட்டிருக்கிறார். இந்த இலாகா மாற்றத்தின் பின்னணியில் ஆளுநர் ஆர்.என். ரவியின் கை ஓங்கி இருந்ததாக ராஜ்பவன் வட்டாரங்கள் உறுதியாகக் கூறுகின்றன.
உங்க இதயம் ஆரோக்கியமாக இருக்குதா? வீட்டிலேயே இந்த சோதனைகளை செய்து பாருங்க!
‘Use Heart for Action’ என்ற கருப்பொருளுடன், இந்த ஆண்டு உலக இதய தினம்(World Heart Day 2024) இன்று கொண்டாடப்படுகிறது. இதயத்தை ஆரோக்கியமாக பராமரிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு மிகவும் முக்கியமானது. ஆக்ஸிஜனேற்றப்பட்ட இரத்தம், ஊட்டச்சத்துக்கள் மற்றும் திசுக்களில் இருந்து கழிவுப்பொருட்களை அகற்றும் வேலைகளை செய்வதன் மூலம் உடலில் உள்ள மற்ற அனைத்து திசுக்களையும் இதயம் பாதுகாக்கிறது.
மயானத்தை தனியார்மயமாக்க எதிர்ப்பு! தூய்மைப் பணியாளர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்! சொத்து வரி உயர்வுக்கு கடும் கண்டனம்!
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கடந்த 40 மாதங்களாக நடைபெறும் திமுக-வின் காட்டாட்சி தர்பார் ஆட்சியில், அப்பாவி மக்களை வாட்டி வதைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது கொடுமையின் உச்சம். செப்டம்பர் 27 அன்று சென்னை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட ஒருசில தீர்மானங்கள், சென்னை மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து நேரடியாக பணத்தைப் பிடுங்கும் வகையில் அமைந்துள்ளது மிகவும் கண்டனத்துக்குரியது.
