கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தின்போது செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை அறிவித்தார். இந்தத் திட்டத்துக்கு ரூ.13,000 கோடியை ஒதுக்கீடு செய்ய கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
சென்னையில் 1 லட்சம் ஸ்மார்ட் வாட்டர் மீட்டர்கள் – யாருக்கு, எங்கு, எப்போது? கட்டண முறை மாற்றம் உங்களை பாதிக்குமா?
நீண்ட காலமாகப் பேசப்பட்டு வந்த சென்னை மாநகரின் குடிநீர் கட்டண முறையில் ஒரு பெரும் மாற்றம் வரவிருக்கிறது. சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம்(CMWSSB) ஸ்மார்ட் வாட்டர் மீட்டர்களை (Smart Water Meters) பொருத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இது குடிநீர் கட்டண வசூலை மேம்படுத்தவும், வருவாய் இழப்பைக் குறைக்கவும், அரிய மற்றும் விலையுயர்ந்த நீரை திறமையாகப் பயன்படுத்தவும் உதவும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்துவதில் ஆர்வம் இருக்கிறதா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை!
தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தன.
காங்கிரஸில் ஆரம்பமானது தேர்தல் குஸ்தி! வேட்பாளர்கள் அறிவிப்புக்கு முன்னரே சத்தியமூர்த்தி பவனில் போராட்டம்!
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் தரப்பில் வேட்பாளர்கள் பட்டியல் அதிகாரபூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை. அதற்கு முன்னரே பட்டியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தியமூர்த்தி பவனில் போராட்டம் நடைபெறுகிறது.
ஜனவரி 1ல் இருந்து அனைத்து கால்களும் இலவசம்! ஜியோ அதிரடி ஆஃபரால் மற்ற நெட்வொர்க்குகளுக்கு பிரச்சனை!
ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டில் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது. மற்ற நெட்வொர்க்குகளுக்கு அழைத்தால் விதிக்கப்பட்ட கட்டணம் ரத்து செய்துள்ளதாகவும், இனி எல்லா அழைப்புகளையும் இலவசமாக மேற்கொள்ளலாம் என்றும் ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.
தொலைத் தொடர்பு துறையில் ரிலையன்ஸ் ஜியோ அடியெடுத்து வைத்த சில ஆண்டுகளிலேயே, தனிக்காட்டு ராஜவாக வலம் வந்து கொண்டு உள்ளது. இந்த நிலையில் ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்கு பின்னர், மற்ற நிறுவனங்களின் கட்டணங்கள் கூட கணிசமான அளவு குறைந்துள்ளது. அதிலும் ஜியோவின் வருக்கைக்கு பிறகு தான் இலவச அழைப்புகள் என்ற முறையே வந்தது என்று கூட கூறலாம்.
மற்ற நெட்வொர்க்குகளுக்கு அழைக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் ஐயூசி என்ற கட்டணத்தை நிர்ணயித்திருந்தது. அதற்காக நிமிடத்திற்கு 6 காசுகள் வீதம் மற்ற அழைப்புகளை மேற்கொள்ளும்போது தொலைதொடர்பு நிறுவனங்களால் வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு சலுகையாக, இலவச கால் சேவை அளித்துள்ளது. அதாவது ஜனவரி 1, 2021 முதல் இனி எல்லா அழைப்புகளும் இலவசமாக அழைத்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. எனினும் இது உள்நாட்டு அழைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் கூறியுள்ளது.
சமீபத்தில் தான் ஜியோ ஐயூசி கட்டணத்தினை வசூலிக்க தொடங்கியது. இது அதன் வாடிக்கையாளர்களை பெரும் அதிருப்திக்கு ஆளாக்கியது. இதற்கிடையில் சமீப மாதங்களாக பார்தி ஏர்டெல் நிறுவனம் அதிக சந்தாதாரர்களை இணைத்தும் வருகிறது. இதனையடுத்து ரிலையன்ஸ் ஜியோ இப்படி ஒரு அதிரடியான அறிவிப்பினையும் கொடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த சலுகையானது போட்டி நிறுவனங்களான வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல்லுக்கு மீண்டும் சிக்கலையே கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ தன் வசம் உள்ள வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும், போட்டியை சமாளிக்கவும் இப்படி ஒரு திட்டத்தினை கொண்டு வந்திருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
Subscribe to our channels on YouTube & Telegram &
Tamilnadu &
Pondicherry
தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை ஆழ்கடலில் மூழ்கடிக்க திட்டம்! இலங்கையின் அதிர்ச்சியூட்டும் முடிவு!
தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை ஆழ்கடலுக்குள் மூழ்கடித்து செயற்கை கீழ்க் கரையமைப்புகளை உருவாக்க இலங்கையின் மீன்வளத்துறை (Department of Fisheries and Aquatic Resources – DFAR) பரிந்துரை செய்துள்ளது. இது மீனவளத்தை பெருக்குவதற்கான நடவடிக்கை என்று அந்நாட்டு அரசு கூறினாலும், இருநாடுகளுக்கு இடையிலான கடல்சார் உரிமை மற்றும் மீன்வள சிக்கல்களில் இது மேலும் குழப்பத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
திராவிட மாடல், கூட்டுறவு, கூட்டாட்சி! நவீன தமிழ்நாட்டின் தந்தை கலைஞர்! பிரதமர் முன் முழங்கிய ஸ்டாலின்!
சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
