ஹிஜாப்புக்கு ‘நோ’ சொன்ன கேரள பள்ளி! குட்டைப்பாவாடை, கோட்தான் சீருடை! பள்ளி முதல்வர் திட்டவட்டம்!

0
274

கேரள மாநிலம், கோழிக்கோட்டில், அப்போஸ்தலிக் கார்மல் தென் மாகாணச் சபையின் கீழ் அரசு உதவிபெறும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் குட்டைப்பாவாடையும், கோட்டும் சீருடையாக உள்ளது. கோட்டின் மேல் துப்பட்டா அணிவதற்கும் தடை உள்ளது. அதேபோல் இந்த அரசு உதவி பெறும் பள்ளியில் முஸ்லிம்கள் ஹிஜாப் அணிந்துவரவும் தடை உள்ளது.

இங்கு 11-ம் வகுப்புக்கு இஸ்லாமிய மாணவி ஒருவர் சேர்க்கப்பட்டார். அந்த மாணவியின் பெற்றோர், தங்களது மகள் ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் என போராட்டத்தில் குதித்தனர். இதுதொடர்பாக மாணவியின் தந்தை ரசாக், கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டிக்கு புகார் அனுப்பியுள்ளார்.

Also Read : இத யூஸ் பண்ணவே பண்ணாதீங்க! எந்த பிளாஸ்டிக் பாதுகாப்பானது தெரியுமா? பிளாஸ்டிக் பயன்பாடும், வகைகளும்!

அதில், “கேரளம் மதசார்பின்மையை மூச்சாகக் கொண்டு பயணிக்கும் மாநிலம். அரசின் சலுகைகளை பயன்படுத்திக்கொள்ளும் அரசு உதவிபெறும் பள்ளியானது, மத சுதந்திரத்தை மறுப்பது வினோதமானது. அமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்து முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர அனுமதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதனிடையே பள்ளியின் முதல்வர் சில்வி, “பள்ளியின் விதிமுறைகளை தெளிவாக மாணவியிடமும், பெற்றோரிடமும் எடுத்துச்சொல்லித்தான் சேர்த்தோம். இது திடீர் என ஒருநாளில் நிகழ்ந்த மாற்றம் அல்ல. ஒருவேளை இந்தப் பள்ளியின் விதிமுறைகள் மாணவிக்கும், பெற்றோருக்கும் பிடிக்காவிட்டால் வேறு பள்ளிக்கு மாறிக் கொள்ளலாம்” என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry