பிசிஆர் டெஸ்ட் நெகடிவ் என்றாலும் கோவிட்-19 இருக்கலாம்! மருத்துவர்கள் எச்சரிக்கை!

0
15

கொரோனா தொற்றை உறுதி செய்ய பிசிஆர் பரிசோதனையே பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அந்த பரிசோதனையில் நெகடிவ் வந்தால் தொற்று இல்லை என்று அலட்சியமாக இருக்க வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பிசிஆர் நெகடிவ் வந்து கொரோனா அறிகுறிகள் இருந்தால் சிடி ஸ்கேன் மூலம் தொற்றை உறுதி செய்யலாம்அந்த வகையான நோயாளிகளுக்கு என பிரத்யேகமாக அரசு மருத்துவமனைகளில் வார்டு அமைக்கப்பட்டுள்ளது. பிசிஆர் பரிசோதனை சரியாக செய்தால் மட்டுமே தொற்றை உறுதி செய்ய முடியும்.

பிசிஆர் பரிசோதனையின்போது 10 விநாடிகள் மூக்கின் உள் அந்த குச்சி இருக்க வேண்டும், மாதிரி எடுக்கப்படுபவருக்கு சற்று சிரமத்தை ஏற்படுத்தினால்தான் சரியாக மாதிரி எடுக்கப்பட்டதாக அர்த்தம். சில நேரங்களில் மாதிரிகளை ஆய்வகத்துக்கு சரியான முறையில் கொண்டு செல்லாவிட்டால் நெகடிவ் காட்டலாம்.

இருமல் சளி தொந்தரவு இருப்பவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்வதற்கு முன்பே சிடி ஸ்கேன் செய்து பத்தே நிமிடங்களில் கொரோனாவால் நுரையீரல் பாதிப்பு இருக்கிறதா, இல்லையா என தெரிந்துகொள்ளலாம். 40க்கு பூஜ்ஜியம் என்றால் பாதிப்பு இல்லை. 40க்கு 20 என்றால் 50% பாதிப்பாகும்.

பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரியை சரியாகவே எடுத்தாலும் 70% பேருக்கு மட்டுமே பாசிடிவ் காட்டும். எனவே நெகடிவ் வந்து, சளி, இருமல், மூச்சுத் திணறல் என அறிகுறிகள் இருந்தால் சிடி ஸ்கேன் எடுக்க வேண்டியது அவசியம். மற்ற நுரையீரல் பாதிப்புகளுக்கும் கொரோனா பாதிப்புக்கும், சிடி ஸ்கேன்ல் வித்தியாசம் தெரியும். அதை வைத்து சிகிச்சை தொடங்கலாம்.

எனவே கொரோனா நெகடிவ் என்றால் அலட்சியமாக இருந்துவிட வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிசிஆர் நெகடிவ் என காட்டுபவர்களுக்கான பிரத்யேகமான வார்டு தொடங்கப்பட்டது. இதேபோன்ற பிரத்யேக வார்டுகள் சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும் அமைக்கப்பட்டுள்ளன.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry