வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தியது RBI! வீடு, வாகனக் கடன் வட்டி அதிகரிக்கும்!

0
64

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான நாணயக் கொள்கைக் குழுவின் கூட்டம் கடந்த புதன் கிழமை (ஆகஸ்ட் 3) தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தக் கூட்டம் இன்று முடிவடைந்தது. இந்தக் கூட்டத்தில் ஆறு உறுப்பினர்களும் ஒருமனதாக வட்டி விகித உயர்வுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ரெப்போ வட்டி விகிதம் ஏற்கனவே 4.90 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன் வட்டி விகிதம் 5.40 சதவீதமாக அதிகரித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் உயர்வதன் காரணமாக வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Also Read : மோடியைக் கண்டு பயப்படும் கட்சியல்ல காங்கிரஸ்! மோடி – ஷா, நாட்டுக்கு என்ன செய்தார்கள் என ராகுல் கேள்வி?

பணவீக்கம் அதிகமாக உள்ளதே ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படக் காரணம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக மே மாதம் முதல் ரிசர்வ் வங்கி இரண்டு முறை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த நிலையில் ஜூன் மாத சில்லறை நுகர்வோர் பணவீக்கம் 7 சதவீதமாக உள்ளதால், வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் வரை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry