சேதமடைந்த சாலை! ஒன்றிய கவுன்சிலர் முயற்சியால் சாலை அமைக்கும் பணி தீவிரம்!

0
209

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் முத்தியால்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவரை தெரு பகுதியில் உள்ள சாலை மிகுந்த சேதம் அடைந்த நிலையில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

இது குறித்து அறிந்த முத்தியால்பேட்டை ஒன்றியக்குழு கவுன்சிலர் பிரேமா ரஞ்சித்குமார், கவரை தெரு பகுதியில் புதிதாக சாலையை சீரமைத்து தர வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

ஒன்றிய கவுன்சிலரின் வேண்டுகோளை ஏற்று வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து சிமெண்ட் சாலை அமைக்க ரூபாய் 9 லட்சத்து 80 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி கவரை தெரு பகுதியில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழா ஒன்றிய கவுன்சிலர் பிரேமா ரஞ்சித்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

உத்திரமேரூர் தொகுதி எம்எல்ஏ சுந்தர் சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார். பூமி பூஜை விழாவில் ஒன்றிய குழு தலைவர் ஆர்.கே. தேவேந்திரன், ஒன்றிய குழு துணைத் தலைவர் பி.சேகர், மாவட்ட ஊராட்சி குழு கவுன்சிலர் பொற்கொடி செல்வராஜ், முத்தியால்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், ஒன்றிய அவைத்தலைவர் மு.க ஜெயராமன், ஊராட்சி வார்டு உறுப்பினர்களும், ஊராட்சிஒன்றிய அலுவலர்களும், கிராம மக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry