பேய்கள் உலவும் ஆபத்தான ரயில் நிலையங்கள்..! இந்த ரயில் நிலையங்களுக்குப் போனா ஜாக்கிரதையா இருங்க!

0
176
Bookmark these haunted railway stations in India for a spooky tour | Image credit: Fas Khan/Unsplash

பேய்களைப் பற்றி கேள்விப்படுவது அல்லது பேய்கள் உள்ளதாக கூறப்படும் இடங்களுக்குச் செல்வது நமக்குள் நடுக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். பொதுவாக சில வீடுகள் அல்லது பழைய கட்டிடங்கள் பேய்கள் உள்ள பகுதியாக கூறப்படும், ஆனால் இந்தியாவில் சில ரயில் நிலையங்களே பேய்கள் உலவும் பகுதி என்று கூறப்படுகிறதே அது தெரியுமா? உண்மைதான், இந்தியாவில் சில ரயில் நிலையங்கள் பேய்கள் உலவும் பகுதிகள் என்று கூறப்பட்டு மக்கள் அங்கு செல்வது தவிர்க்கப்பட்டு வருகிறது. அந்த ரயில் நிலையங்கள் என்னென்ன, அதன்பின்னால் உள்ள பேய் கதைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சித்தூர் ரயில் நிலையம், ஆந்திரப் பிரதேசம்

டெல்லியில் இருந்து கேரளா செல்லும் ரயிலில் RPF பணியாளர்களால் தாக்கப்பட்ட ஹரி சிங் என்ற CRPF அதிகாரியின் ஆன்மா சித்தூர் ரயில் நிலையத்தில் உலவுவதாக கூறப்படுகிறது. RPF பணியாளர்களால் தாக்கப்பட்ட ஹரி சிங் சித்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 10 நாட்களில் இறந்தார். அப்போதிருந்து, அவரது ஆன்மா பழிவாங்குவதற்காக ரயில் நிலைய நடைமேடைகளில் அலைந்து கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இதனால் சித்தூர் ரயில் நிலையத்தின் இரு முனைகளும் மாலை நேரங்களில் வெறிச்சோடி காணப்படுவதால், சித்தூர் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

Chittoor railway station is classified as a B–category station in the Guntakal railway division | Image – Paulose NK/Shutterstock

பரோக் ஸ்டேஷன், சிம்லா

சிம்லாவில் உள்ள பரோக் ரயில் நிலையம் பிரிட்டிஷ் ரயில்வே பொறியாளர் கர்னல் பரோக் என்பவரால் கட்டப்பட்டது. இங்குள்ள பேய் கதை என்னவெனில், இந்த நிலையத்தில் 33 சுரங்கப்பாதைகள் கட்டும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. திட்டம் தொடங்கி பல நாட்களுக்குப் பிறகு, நீளம் தவறாகக் கணக்கிடப்பட்டதால், முழு திட்டமும் தோல்வியடைந்தது.

இந்த தவறு அரசாங்கத்தால் கண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது, இதனால் ஏற்பட்ட விரக்தியை பரோக்கால் அடக்க முடியவில்லை, ஒரு நாள் அவர் தனது நாயுடன் நடக்கச் சென்றபோது, பரோக் ரயில் நிலையத்தில் உள்ள சுரங்கப்பாதைக்கு அருகில் ரிவால்வரால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போதிருந்து, இந்த ரயில் நிலையம் இந்தியாவின் பேய்கள் நிறைந்த ரயில் நிலையங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது, மேலும் ஒவ்வொரு பயணிகளும் சுரங்கப்பாதையில் நுழையும் போது நடுக்கத்தை உணர்கிறார்கள்.

Also Read : சர்க்கரை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா? இதோ உங்களுக்கான பதில்! Vels Exclusive

பெகுன்கோடர் ரயில் நிலையம், மேற்கு வங்கம்

இந்த ரயில் நிலையம் மேற்கு வங்கத்தில் புருலியா மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ளது. சில ரயில்களின் வருகையின் போது நள்ளிரவில் பெண்கள் வெள்ளை நிற சேலை அணிந்து வருவதை இங்குள்ள மக்கள் பார்த்ததாக கூறுகின்றனர். இது தொடர்பாக நேரில் கண்ட சாட்சிகளும் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கூறப்படுவது என்னவெனில், இந்த பெண்கள் ஒருமுறை பெகன்கோடார் ரயில் நிலையத்தில், ரயில் விபத்தில் இறந்தனர் மற்றும் அவர்களின் ஆன்மா சாந்தியடையாததால் அவர்கள் நள்ளிரவில் உலவுவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்டேஷன் மீதான மிகவும் அதிகமாக இருப்பதால், இது பெரும்பாலும் ‘இந்தியாவின் பேய் ரயில் நிலையம்’ என்றே அழைக்கப்படுகிறது.

டோம்பிவிலி ரயில் நிலையம், மகாராஷ்டிரா

இந்த ரயில் நிலையம் இந்தியாவின் மிகவும் பயமுறுத்தும் ரயில் நிலையங்களில் ஒன்றாகும், ஏனெனில் இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான விபத்துக்கள் நடந்துள்ளன, மேலும் ஸ்டேஷன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிறைய அலறல் சத்தம் அவ்வப்போது கேட்பதாக கூறப்படுகிறது. சிலரின் கூற்றுப்படி, ஒவ்வொரு இரவும் ஒரு பெண்மணி நின்று அழுவதைக் காணலாம், அவர் ஏன் அழுகிறார் என்று கேட்டால், அவர் வீட்டிற்குத் திரும்ப வேண்டும் ஆனால் முடியாது என்று பதிலளித்தார் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மஹாராஷ்டிராவில் உள்ள டோம்பிவிலி ரயில் நிலையத்தில், இயற்கைக்கு மாறான பல நிகழ்வுகள் குறித்து ஏராளமான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், இந்தியாவின் மிகவும் பயங்கரமான ரயில் நிலையங்களில் ஒன்றாக உள்ளது.

முலுந்த் ரயில் நிலையம் – மும்பை

முலுந்த் ரயில் நிலையம் மும்பை புறநகர் ரயில் நிலையத்தின் மத்திய பாதையில் உள்ள மற்றொரு பேய் ரயில் நிலையமாகும். சாலையைக் கடக்கும்போது இறந்தவர்களின் தீய ஆவிகள் நள்ளிரவில் ரயில் தடங்களிலும் அதைச் சுற்றியும் வேட்டையாடுவதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

Also Read : நீங்க புகைப்பிடிப்பவரா? இந்த 9 உணவும் உங்க ஆரோக்கியத்துக்கு கைகொடுக்கும்! A Diet to Support Smokers!

நைனி ஜங்ஷன், உத்தரபிரதேசம்

ஒரு காலத்தில் ஏராளமான அரசியல் அதிருப்தியாளர்கள் துன்புறுத்தப்பட்ட நைனி சிறை, நைனி ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ளது. துன்புறுத்தப்பட்டு மறைந்த இவர்களின் ஆன்மாக்கள் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு சந்தியில் சுற்றித் திரிவதாக நம்பப்படுகிறது, ஏனெனில் அவர்களின் ஆன்மா பிற்கால வாழ்க்கையில் அமைதியைக் காண முயற்சிக்கிறது.

லூதியானா ஜங்சன், பஞ்சாப்

2004ல் இறந்த சுபாஷ் என்ற முன்னாள் கணினி முன்பதிவு அமைப்பு அதிகாரியின் ஆன்மா இன்னும் இந்த நிலையத்திற்கு அடிக்கடி வருவதாக நம்பப்படுகிறது. சுபாஷ் தனது வேலையை மிகவும் நேசித்ததாகவும், அவரது மறைவுக்குப் பிறகு, அவரது ஆன்மா அவர் முன்பு பணிபுரிந்த முன்பதிவு மைய அலுவலகத்தில் மறைந்திருப்பதாகவும் சிலர் குறிப்பிடுகின்றனர். லூதியானா சந்திப்பு பெரும்பாலும் இந்தியாவின் முதல் 10 பேய் ரயில் நிலையங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

சோஹாக்பூர் ஸ்டேஷன், மத்திய பிரதேசம்

இந்த ‘பேய் ரயில் நிலையம்’ மத்திய பிரதேசத்தில் போபால் அருகே அமைந்துள்ளது. பிளாட்பாரத்தில் ரயில் நிற்கும் போதோ அல்லது பொதுவாக இரவு நேரங்களிலோ ரயில் நிலையத்தில் பலவிதமான குரல்களை பலர் கேட்டதாகக் கூறப்படுகிறது. இது ஒரு பெண்மணி வலியாலும் வேதனையாலும் அலறுவதாக உள்ளது என இந்தப் பகுதி மக்கள் நம்புகிறார்கள்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry