28 நாள்கள் வேலிடிட்டிக்கு பதிலாக இனி 30 நாள்கள்! ப்ரீபெய்ட் பயனர்களை மகிழ்வித்த டிராய்! தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு குட்டு!

0
877

ஒரு மாத ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் 28 நாட்களுக்குப் பதிலாக, இனி 30 நாட்கள் வேலிடிட்டி வழங்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த திட்ட விவரங்களை 60 நாள்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று டிராய் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Reliance Jio, Airtel, Vodafone Idea (Vi) போன்ற முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரு மாத ரீசார்ஜ் என்ற பெயரில் 30 நாள்களுக்குப் பதிலாக 28 நாள்கள் செல்லுபடியாகும் திட்டங்களை வழங்குகின்றன. வாடிக்கையாளர்களின் கூற்றுப்படி, அந்த நிறுவனங்கள் மாதத்திற்கு 2 நாட்களைக் கழிப்பதன் மூலம் ஒரு வருடத்தில் 28 நாட்களை எடுத்துக்கொள்கின்றன.

இதற்கு வருடத்திற்கு 12 மாதங்களுக்கு பதிலாக 13 மாதங்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதேபோல், இரண்டு மாத ரீசார்ஜ்களுக்கு 54 அல்லது 56 நாள்களும், மூன்று மாத ரீசார்ஜ்களுக்கு 90 நாள்களுக்குப் பதிலாக 84 நாள்கள் வேலிடிட்டியையும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்குகின்றன. இதனை உடனடியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்படி வாடிக்கையாளர்கள் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயிடம் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (TRAI) வாடிக்கையாளர்களுக்கு ஆதரவான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 28 நாட்களுக்குப் பதிலாக 30 நாட்கள் செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சமர்ப்பிக்குமாறு டிராய் தெரிவித்துள்ளது. மேலும், 30 நாள்கள் செல்லுபடியாகும் திட்ட விவரங்களை 60 நாள்களுக்குள் சமர்பிக்க வேண்டும் என்றும் டிராய் கெடு விதித்துள்ளது.

TRAI புதிய உத்தரவின்படி, ஒவ்வொரு தொலைத்தொடர்பு நிறுவனமும் குறைந்தபட்சம் ஒரு திட்ட வவுச்சர், ஒரு சிறப்பு கட்டண வவுச்சர் மற்றும் ஒரு காம்போ வவுச்சரையாவது சமர்ப்பிக்க வேண்டும். இது 28 நாள்களுக்கு பதிலாக முழு 30 நாள்களுக்கு செல்லுபடியாவதாக இருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் இந்தத் திட்டங்களை ரீசார்ஜ் செய்ய விரும்பினால், அந்தத் தேதியில் இருந்து அதைச் செய்ய முடியும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry