• Home
  • தமிழகம்
  • Exclusive
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சமையல்
  • அழகு குறிப்பு
  • நேர்காணல்
  • மருத்துவம்
Search
Logo
Logo
Sunday, June 1, 2025
  • ABOUT VELSMEDIA
  • CONTACT US
  • DISCLAIMER
  • PRIVACY POLICY
  • TERMS AND CONDITIONS
Facebook
Youtube
Twitter
Instagram
Logo
  • Home
  • தமிழகம்
  • Exclusive
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சமையல்
  • அழகு குறிப்பு
  • நேர்காணல்
  • மருத்துவம்
  • Home
  • தமிழகம்
  • Exclusive
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சமையல்
  • அழகு குறிப்பு
  • நேர்காணல்
  • மருத்துவம்
Home இந்திய செய்திகள் இதுவரை வெளிவராத ரகசியங்கள்! பிரபாகரனுக்கு புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட் போட்டுவிட்ட ராஜீவ்காந்தி! புலிகள் இயக்கத்துக்கு கொடுக்கப்பட்ட...
  • இந்திய செய்திகள்

இதுவரை வெளிவராத ரகசியங்கள்! பிரபாகரனுக்கு புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட் போட்டுவிட்ட ராஜீவ்காந்தி! புலிகள் இயக்கத்துக்கு கொடுக்கப்பட்ட ரூ.5 கோடி நிதி! ‘The Rajiv I Knew’!

By
Velsmedia Team
-
June 3, 2024
0
67
Facebook
Twitter
Pinterest
WhatsApp
    ‘The Rajiv I Knew’ - Understanding Rajiv Gandhi's Vision through Mani Shankar Aiyar's Narrative

    4.30 Mins Read : காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மாநிலங்களவை உறுப்பினராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்த மணி சங்கர் அய்யர், தற்போது ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலகட்டம் குறித்து விரிவான புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். ‘The Rajiv I Knew’ என்ற பெயரில் வெளியாகியிருக்கும் இந்தப் புத்தகத்தை ஜக்கர்நாட் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

    ராஜீவ் காந்தி ஆட்சியின்போது எட்டப்பட்ட ஒப்பந்தங்கள், சர்ச்சைகள், வெளியுறவு கொள்கைகள், உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், பஞ்சாயத்து ராஜ் உள்ளிட்டவை குறித்து விரிவாகப் பேசுகிறது. இதில் சர்ச்சைகள் என்ற பகுதியில் ஷா பானோ வழக்கு, பாபர் மசூதி விவகாரம், ராஜஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட பிராஸ்டாக் நடவடிக்கை, இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு அனுப்பப்பட்ட விவகாரம், போஃபர்ஸ் ஆகியவை விவரிக்கப்பட்டிருக்கின்றன.

    The Rajiv I Knew by Mani Shankar Aiyar – https://amzn.to/4c4oh0h

    அந்தப் புத்தகத்தில், “இலங்கைக்கு இந்திய அமைதிப் படையை அனுப்பியது மிக மோசமான முடிவு. ராஜீவ் – ஜெயவர்தனே ஒப்பந்தம் கையெழுத்தானதும் அருகிலிருந்த அறைக்குள் ராஜீவை அழைத்துச் சென்றார் இலங்கை அதிபர் ஜெயவர்தனே. நாட்டின் இரு முனைகளிலும் நிகழும் இருவேறு உள்நாட்டுக் கலகங்களை இலங்கை ராணுவத்தால் சமாளிக்க முடியாது என்பதை ஜெயவர்தனே ராஜீவிடம் தெரிவித்தார். தலைநகர் கொழும்பில் நடக்கும் வன்முறைகளைக்கூட ராணுவத்தால் சமாளிக்க முடியாது, ஆகவே, ஆயுதம் ஏந்திய தமிழ்க் குழுக்களிடம் இருந்து இலங்கை ராணுவத்தைப் பாதுகாக்க ஒரு அமைதி காக்கும் படையை அனுப்ப வேண்டும் என்று ஜெயவர்தனே கேட்டுள்ளார்.

    மூத்த அமைச்சர்களின் எதிர்ப்பையும் மீறி, இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த ஒப்புக் கொண்டதற்காக இந்தியா இதனைச் செய்ய வேண்டும் என்று ஜெயவர்தனே கேட்டுக்கொண்டார். அந்தத் தருணத்தில், அறைக்கு வெளியில் காத்திருந்த இந்திய நிபுணர்களைக்கூட கலந்தாலோசிக்காமல் ராஜீவ் காந்தி ஒப்புதல் அளித்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகு, அமைதிப்படையை அனுப்பும் விவகாரம் ஒப்பந்தத்தின் இணைப்பாகச் சேர்க்கப்பட்டது.

    Rajiv Gandhi (20 August 1944 – 21 May 1991)

    இலங்கை அரசே கேட்டுக்கொண்டாலும் இலங்கையில் இந்தியா ராணுவ ரீதியாகத் தலையிடாது என்ற இந்திரா காந்தியின் நிலைப்பாடு மறு பரிசீலனை செய்யப்பட்டு அப்போது படைகளை அனுப்ப முடிவுசெய்யப்பட்டது. ராஜிவ் காந்தியின் முடிவைக் கேட்டு இந்தியாவில் இருந்த நிபுணர்கள் ஆச்சரியமடைந்தனர். ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, இவ்வளவு அவசரத்துடன் இந்த மாதிரியான பிரிவுகள் ஒப்பந்தத்தில் சேர்க்கப்படும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், ராஜீவ் காந்தி முடிவெடுத்து, உடனடியாக செயல்படுத்திவிட்டார்.

    ஜெயவர்தனேவின் வேண்டுகோளை ஏற்றதற்கான விலையை ராஜிவ் அடுத்த சில நிமிடங்களிலேயே தரவேண்டியிருந்தது. பிரதமரான ராஜிவ்காந்திக்கு கடற்படையினரின் பாரம்பரிய மரியாதை (Guard of Honour) அளிக்கப்பட்டபோது, ஒரு கடற்படை வீரர் தனது துப்பாக்கியின் பின்பக்கத்தால் ராஜிவ்காந்தியைத் தாக்கினார். அந்தத் தாக்குதலில் ராஜிவ் காந்தியின் தலை நொறுங்கி, அந்த இடத்திலேயே அவர் கொல்லப்பட்டிருப்பார். ஆனால், தாக்குதல் வருவதை உணர்ந்துகொண்ட பிரதமர் விலகிக்கொள்ளவே, அடி தோள்பட்டையில் விழுந்தது. இந்தச் சம்பவத்திற்குச் சில மணி நேரங்களுக்குப் பிறகு பிரதமரின் விமானம் டில்லியில் தரையிறங்கியது. உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலர் டி.என். சேஷன் அந்தத் தாக்குதல் சம்பவத்தின் வீடியோவை, மணி சங்கர் அய்யரிடம் கொடுத்து தூர்தர்ஷனிடம் கொடுக்கச் சொன்னார். அதன்படியே அந்த வீடியோ கொடுக்கப்பட்டது.

    Indo-Sri Lanka Accord was signed on July 29, 1987, and the very next day the JVP targeted Rajiv Gandhi in public view.

    ஆரம்பத்தில், இந்திய அமைதிப்படை விடுதலை தர வந்த படையாகக் கருதப்பட்டு, யாழ்ப்பாண மக்களால் வரவேற்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் பாதுகாப்போடு பிரபாகரன் யாழ்ப்பாணத்திற்குத் திரும்ப முடியும் எனக் கருதிய புலிகள் இயக்கத்தினரும் வரவேற்பில் இணைந்தனர். யாழ்ப்பாணத்திலிருந்தும், கிழக்குப் பகுதியில் இருந்தும் புலிகளால் துப்பாக்கி முனையில் துரத்தப்பட்ட பிற போராளிக் குழுக்கள், தாங்களும் யாழ்ப்பாணத்திற்கும் கிழக்கிற்கும் திரும்ப முடியும் என்ற நம்பிக்கையில் இந்திய அமைதி காக்கும் படையை வரவேற்றனர்.

    இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் எல்லாப் பகுதிகளிலும், இந்திய அமைதி காக்கும் படை இறங்கிய இடங்களில் எல்லாம் உற்சாக வவேற்பு அளிக்கப்பட்டது. மக்களின் வரவேற்பைப் பார்க்கும்போது, அமைதி காப்பதில் தன் பலத்தைப் பயன்படுத்தியதன் மூலம், தெற்காசியாவில் ஒரு முக்கிய சக்தியாக ராஜதந்திர வெற்றியை இந்தியா பெற்றிருப்பதாகவே இந்திய வட்டாரங்களில் நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தாகி 24 மணி நேரத்திற்குள் படைகள் அனுப்பப்பட்டதால், இலங்கையின் கள நிலவரம் குறித்து எந்த விதமான தகவல்களும் படைத் தளபதிகளோக்கோ, வீரர்களுக்கோ அளிக்கப்படவில்லை.

    அமைதிப் படை தரையிறங்கியதிலிருந்து, புலிகளுக்கும் அமைதிப் படைக்கும் இடையில் மோதல் ஏற்படும் காலத்திற்கு இடையில் சுமார் இரண்டு மாதங்கள் இருந்தன. அந்த காலகட்டத்தை இந்தியா பயன்படுத்திக்கொள்ளவில்லை. இதனால், இலங்கைப் போராளிகளுக்கும் – இலங்கை ராணுவத்திற்கும் இடையில் அமைதி காக்கும் படையாக இருந்திருக்க வேண்டிய, இந்திய அமைதிப்படை, தமிழ்ப் போராளிகளோடு மோதவேண்டியதாயிற்று. இது இலங்கையின் வட – கிழக்குப் பகுதியை இந்தியாவின் வியட்நாமாக மாற்றியது.

    ராஜிவ் – ஜெயவர்தனே ஒப்பந்தம் கையெழுத்தான வாரம், விடுதலைப் புலிகள் இயகத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் டெல்லிக்கு அழைத்துவரப்பட்டார். அவரிடம் ஒப்பந்தத்தின் பிரதி அளிக்கப்பட்டபோதே, பிரச்சனையின் ஆரம்ப அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன. டெல்லி அசோகா ஹோட்டலில் பலத்த காவலுக்கு இடையில் பிரபாகரன் தங்க வைக்கப்பட்டிருந்தார். அந்த ஒப்பந்தத்தைப் படித்துப் பார்த்துவிட்டு, தன் சகாக்களிடம் அவர் கருத்து கேட்க விரும்பினார். விரைவிலேயே அந்த ஒப்பந்தம் தனக்கு ஏற்புடையதல்ல என்பதையும் பிரபாகரன் தெளிவுபடுத்தினார்.

    பிரபாகரன் தங்கியிருந்த அறைக்குள் ரகசியமாக நுழைந்த பத்திரிகையாளர் அனிதா பிரதாப்பிடம் இதனை அவர் வெளிப்படையாகவே சொன்னார். அனிதா பிரதாப் பிரச்சனை உருவாவதை புரிந்துகொண்டார். ஆனால், இந்திய அரசக் கட்டமைப்பிலிருந்த யாருக்கும் அது புரிந்திருக்கவில்லை. ராஜிவ் காந்தியின் தனிப்பட்ட வசீகரத்திற்கு பிரபாகரன் பணிந்துவிடுவார் என நம்பினார்கள். ஆனால், டெல்லியிலிருந்து எப்படித் தப்புவது என்பதைத்தான் பிரபாகரன் யோசித்துக்கொண்டிருந்தார்.

    “பிரதமர் ராஜிவ் காந்தியுடனான சந்திப்பிற்குப் பிறகு, அவரது குடும்பத்துடனான விருந்தில் கலந்துகொள்ள பிரபாகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. விருந்து முடிந்த பிறகு, தனது மகன் ராகுல் காந்தியை அழைத்த ராஜிவ், தனது குண்டு துளைக்காத கவச உடையை எடுத்துவரும்படி சொன்னார். அதனை பிரபாகரனுக்கு அணிவித்த ராஜிவ், ‘உங்களைப் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று புன்னகையுடன் சொன்னார். இந்த விவகாரம் தொடர்பாக எச்சரிக்கை விடுத்தவர்களிடம் `பிரபாகரன் ஒப்புக்கொண்டார். நான் அவரை நம்புகிறேன்` என்று பதிலளித்தார் ராஜிவ்.

    Prime Minister Rajiv Gandhi with Sri Lankan President Jayewardene in New Delhi June 02, 1985. (Photo by Sondeep Shankar/Getty Images)

    பிரபாகரன் தனக்கு ஐந்து கோடி ரூபாய் நிதி தேவையெனத் தெரிவித்தார். அந்தப் பணம் கொடுக்கப்பட்டது. ஆனால், இறையாண்மையுள்ள தனி தேசமாக ஈழத்தை அடைவதில் பிரபாகரன் உறுதியாக இருந்தார். ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு ஆகஸ்ட் 4-ஆம் தேதி சுதுமலையில் நிகழ்த்திய தனது பேச்சிலேயே ஒப்பந்தம் குறித்த முரண்பாட்டை பிரபாகரன் தெரிவித்தார். ‘நாங்கள் இந்தியாவையும் அதன் மக்களையும் நேசிக்கிறோம். ஆனால், தமிழ் ஈழத்தை அடையும் லட்சியத்திற்காக தொடர்ந்து போராடுவோம்’ என்றார்.

    விரைவிலேயே ஆயுதங்களை ஒப்படைப்பதில் தனக்கு விருப்பமில்லை என்பதை புலிகள் இயக்கத்தினர் அறிவித்துவிட்டனர். ஆரம்பத்தில் புலிகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையிலான உறவு சுமுகமாகவே இருந்தது. இந்தியப் படைகளுடன் எந்த நேரத்திலும் பேசுவதற்காக, ரேடியோ அலைவரிசையும் புலிகளுடன் பகிர்ந்துகொள்ளப்பட்டது (ஆனால், இப்படி அலைவரிசையை பகிர்ந்துகொண்டது பிறகு பிரச்சனையாகவே முடிந்தது).

    ஒப்பந்தத்திற்கு எதிரான ஒரு திருப்பு முனையாக திலீபனின் மரணம் அமைந்தது. இதற்கிடையில், ஏகப்பட்ட ஆயுதங்கள், வெடி பொருட்களுடன் விடுதலைப் புலிகள் இயக்க நிர்வாகி புலேந்திரன், மற்றும் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 16 பேர் பாக் நீரிணைப் பகுதியில் கைது செய்யப்பட்டனர். அவர்களைப் பார்க்கவும், உணவு அளிக்கவும் புலிகள் அனுமதிக்கப்பட்டனர். உணவு அளிக்கும் சாக்கில் அவர்களுக்கு சயனைடு அளிக்கப்பட்டது. அதனை அருந்தி 17 பேரும் உயிரிழந்தனர்.

    Also Read : புரட்சித் தலைவியின் முகமூடி அணிந்து தமிழகத்தை ஏமாற்ற திட்டமிடும் அரைவேக்காடு அண்ணாமலை! கோயபல்ஸ் பிரச்சாரத்தால் மக்களை திசை திருப்ப சதி!

    அவர்களது சடலங்கள் பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித் துறைக்கு கொண்டுவரப்பட்டபோது பொது மக்களின் கோபம் உச்சகட்டத்தை எட்டியது. புலிகள் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். மோதலைத் தவிர்ப்பதற்காக பிரபாகரனைச் சந்திக்க இந்திய தளபதிகள் முயன்றனர். ஆனால், அது நடக்கவில்லை. விரைவிலேயே இந்திய ரோந்து வாகனத்தைத் தாக்கிய புலிகள், ஐந்து கமாண்டோக்களைக் கொன்றனர். இரு தரப்புக்கும் இடையில் மோதல் துவங்கியது.

    அக்டோபர் 5-ஆம் தேதி யாழ்ப்பாணத்தை வந்தடைந்த ஜெனரல் சுந்தர்ஜி, புலிகளின் ஆயுதங்களைப் பறிக்க ‘ஆபரேஷன் பவன்’ நடவடிக்கையை துவங்க உத்தரவிட்டார். இந்திய ராணுவம் மூன்று, நான்கு வாரங்களில் இதனை முடித்துவிடும் என்றார் அவர். இது மோசமான கணிப்பாக முடிந்தது. காரணம், இந்திய ராணுவத்தின் திட்டங்கள் முன்பே பிரபாகரனுக்குத் தெரிந்திருந்தன. காரணம், நிலைமை சுமுகமாக இருந்தபோது தனது தகவல் தொடர்பு அலைவரிசையை புலிகளுடன் இந்திய ராணுவம் பகிர்ந்துகொண்டதுதான்.

    General Krishnaswamy Sundarji, 1928-1999.
    Jyotindra Nath Dixit (8 January 1936 – 3 January 2005). He was the High Commissioner in Colombo in 1987 when India signed an accord with Sri Lanka government and deployed of the Indian Peace Keeping Force (IPKF) to the Tamil area in the island nation.

    “ஒரு முறை ஹெலிகாப்டரில் வந்திறங்கி, புலிகளின் தலைவர்கள் அனைவரையும் பிடிக்க இந்தியப் படை திட்டமிட்டது. ஆனால், அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே அனைவரும் அங்கிருந்து தப்பியிருந்தனர். ஆரம்பத்தில் புலிகளை மூன்றில் இருந்து 15 நாட்களுக்குள் சுற்றி வளைத்துவிடலாம் என இந்திய ராணுவம் நினைத்தது. ஆனால், ஒருபோதும் அது நடக்கவில்லை. அந்தத் தருணத்தில் இலங்கைக்கான இந்தியத் தூதராக இருந்த ஜே.என்.தீக்ஷித், இந்தத் தோல்விக்கான காரணத்தை தனது புத்தகத்தில் விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

    Rajiv Gandhi and Mani Shankar Aiyar in the 1980s.

    அதாவது, தமிழ் ஈழம் மீதான பிரபாகரனின் பிடிப்பு, திட்டமிடுவதில் அவருக்கு இருந்த புத்திசாலித்தனம், எதிர்த்து நிற்பதில் உறுதியான தன்மை, ஒற்றை நோக்குடைய தன்மை ஆகியவற்றை மிகக் குறைவாக மதிப்பிட்டுவிட்டோம். அதேபோல, இந்திய அமைதிப் படைக்குச் சரியான தகவல்கள் அளிக்கப்படவில்லை. தமிழர்களுக்காக இறங்கிவருவதில் ஜெயவர்தனேவுக்கு இருந்த அரசியல் உறுதியையும், நேர்மைத்தன்மையையும் அதிகமாக மதிப்பிட்டுவிட்டோம்.

    இலங்கைத் தமிழர்களிடமிருந்து புலிகளைத் தனியாக பிரித்துவிட முடியும் என்ற எனது நம்பிக்கையும் பொய்த்துப் போனது. இலங்கை விவகாரத்தில் ராஜிவ் காந்தியின் ஈடுபாட்டை வரலாறு துல்லியமாக முடிவுசெய்யும். இந்திய, இலங்கை மக்களின் நலனுக்காக எவ்வித பிரதிபலனையும் தராத பணியை அவர் மேற்கொண்டார். அதற்கு அவர் தன் உயிரை விலையாகக் கொடுத்தார்,” இவ்வாறு அந்த நூலில் மணி சங்கர் அய்யர் எழுதியிருக்கிறார்.

    Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

    Post Views: 246
    • TAGS
    • Author Mani Shankar Aiyar
    • Congress Party history
    • Critical Examination of Rajiv Gandhi's Tenure by Mani Shankar Aiyar
    • Exploring Rajiv Gandhi's Legacy Through Mani Shankar Aiyar's Eyes
    • Historical Context and Political Commentary in The Rajiv I Knew
    • In-depth Analysis of Rajiv Gandhi's Policies by Mani Shankar Aiyar
    • Indian political figures
    • Indian politics
    • Indian Prime Ministers
    • Insights into Rajiv Gandhi's Leadership by Mani Shankar Aiyar Personal Anecdotes and Reflections in The Rajiv I Knew
    • Mani Shankar Aiyar
    • Mani Shankar Aiyar books
    • Mani Shankar Aiyar slams ex-PM P V Narasimha Rao calls him 'first BJP PM’
    • Mani Shankar Aiyar; the author of The Rajiv I Knew
    • Mani Shankar Aiyar's Perspective on Rajiv Gandhi's Era
    • Mani Shankar Aiyar’s profile of Rajiv Gandhi as a ‘misunderstood PM’: Babri to Shah Bano Bofors to Punjab Assam accords
    • Personal insights on Rajiv Gandhi
    • Political commentary by Mani Shankar Aiyar
    • Political memoir publication
    • Political memoirs
    • Rajiv Gandhi anecdotes
    • Rajiv Gandhi biography
    • Rajiv Gandhi's legacy
    • The Rajiv I Knew
    • The Rajiv I Knew by Mani Shankar Aiyar
    • The Rajiv I Knew: A Personal Account of India's Political Landscape by Mani Shankar Aiyar
    • Understanding Rajiv Gandhi's Vision through Mani Shankar Aiyar's Narrative
    • Unveiling Untold Stories of Rajiv Gandhi in The Rajiv I Knew
    Facebook
    Twitter
    Pinterest
    WhatsApp
      Previous articleதிடீர்னு கெஸ்ட் வந்துட்டாங்களா? கவலைப்படாம… 15 நிமிடத்தில் கோதுமை இட்லி செய்துகொடுங்க! மனதார வாழ்த்துவாங்க…!
      Next articleஎச்சரிக்கை… இந்த 9 பேர் உங்களை கண்காணிக்கிறார்கள்! ரகசியமாக செய்வதாக நினைத்து சிக்கிடாதீங்க! தப்பவே முடியாது, கவனம்..!
      Velsmedia Team
      Velsmedia Team
      antalya bayan escort
      Logo

      வேல்ஸ் மீடியா செய்தித்தளத்தில் உள்ள கட்டுரைகள் வாசித்ததற்கு முதற்கண் நன்றி. உண்மையே நீண்ட கால அடிப்படையில் நிலைக்கும் என்ற தத்துவார்த்த உண்மையை மனதில் கொண்டு, மெய்யான செய்திகளை மக்களுக்கு அளிப்பதே நோக்கம். மீண்டும் மீண்டும் வேல்ஸ் மீடியா செய்தி தளத்திற்குள் வந்து ஆதரவு தாரீர்.

      Contact us: editor@velsmedia.com

      Facebook
      Youtube
      Twitter
      Instagram

      © Copyright - Vels Media

      • Home
      • தமிழகம்
      • Exclusive
      • இந்தியா
      • உலகம்
      • சினிமா
      • சமையல்
      • அழகு குறிப்பு
      • நேர்காணல்
      • மருத்துவம்