வாய் வழியாக வயிற்றுக்குள் புகுந்த 4 அடி பாம்பு! அதிர்ச்சியில் உறைந்த டாக்டர்!

0
8

வாய் வழியாக பெண்ணின் வயிற்றுக்குள் புகுந்த 4 அடி நீள பாம்பை வெளியே எடுக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

ரஷியாவின் வடக்கு பகுதியில் உள்ள தன்னாட்சி பெற்ற பிராந்தியமான தகெஸ்தானில் உள்ள லெவாஷி என்ற கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது வீட்டின் முற்றத்தில் திறந்தவெளியில் தூங்கினார். காலையில் அவர் கண் விழித்தபோது வயிற்றுக்குள் ஏதோ நெளிவதைப் போன்றும், குமட்டல் உணர்வு ஏற்படுவதைப் போன்றும் உணர்ந்தார்.

இதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவரது வயிற்றுக்குள் பூச்சி போன்ற ஏதோ உயிரினம் புகுந்துள்ளது என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அவரது வயிற்றினுள் புகுந்த உயிரினத்தை வெளியேற்றுவதற்காக எண்டோஸ்கோபி கருவியை வாய் வழியாக டாக்டர்கள் வயிற்றுக்குள் செலுத்தினர்.

பின்னர் பெண் டாக்டர் ஒருவர் எண்டோஸ்கோபி கருவியுடன் சேர்ந்து அந்த உயிரினத்தை வெளியில் இழுத்தார். எண்டோஸ்கோபி கருவியுடன் நீளமாக வந்ததைப் பிடித்து இழுத்த டாக்டர், முதலில் அது என்ன என்பதை கவனிக்கவில்லை. ஆனால், முழுவதும் வெளியே எடுத்த போது, அது 4 அடி நீள பாம்பு என்பதை அறிந்து, அவர் பதறிப்போய் பின்வாங்கினார்.

பெண்ணின் வயிற்றில் இருந்து வாய்வழியாக பாம்பை வெளியே எடுக்கும் காட்சியை அங்கிருந்த சக டாக்டர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்தார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry