வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை அரை நிர்வாணமாக்கி விடுதி வளாகத்தை சுற்றி வர வைத்து ராகிங்கில் ஈடுபட்டதாக சீனியர் மாணவர்கள் ஏழு பேரை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
போராட்டக்காரர்கள் வசமானது அதிபர் மாளிகை! உயிருக்கு பயந்து தப்பியோடிய கோத்தபய! போர்க்களமானது கொழும்பு!
இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தடுப்புகளை அடித்து நொறுக்கி உள்ளே நுழைந்தனர். அங்கிருந்த எம்.பி. ரஜிதா சேனரத்னாவை அவர்கள் கடுமையாகத் தாக்கியதாக கூறப்படுகிறது. இலங்கை அதிபர் மாளிகை தற்போது போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அமைச்சர் பதவி ராஜினாமா! பாஜக-வில் இணைய ஆயத்தம்! காங்கிரஸை கதறவிடும் நமச்சிவாயம்!
காங்கிரஸ் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நமச்சிவாயம், அமைச்சர் பதவியில் இருந்து விலகியதோடு, வில்லியனூர் தொகுதி எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு ஆதரவாக ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ தீப்பாஞ்சானும் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
