ஆட்சிக்கு எதிராக செயல்படும் பள்ளிக் கல்வி ஆணையர்! ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தல்!

0
2217

தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவரும், ஐபெட்டோ தேசிய செயலாளருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சுதந்திர தின விழாவை அமுதப் பெருவிழாவாக பள்ளிகள் தோறும் கொண்டாடி மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் சுதந்திர தின விழாவில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கொடியேற்ற வேண்டும் என்று பொது அரசாணை வெளியிட்டு உள்ளார்கள்.

வா. அண்ணாமலை

ஆனால் பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ஒரு உத்தரவை வழங்கியுள்ளார்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் தேசியக்கொடியினை சுதந்திர தினத்தன்று பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்தான் ஏற்றவேண்டும் என்றும், பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அந்த பொறுப்பும், கடமையும் உள்ளது எனவும் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் பள்ளிகளில் தலைமையாசிரியர்களே தேசியக்கொடியினை ஏற்ற வேண்டும் என்று, குறுஞ்செய்தி வாயிலாக சுற்றறிக்கையினை அனுப்பி உள்ளார்கள். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் உத்தரவை மீறி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை முற்றிலும் புறக்கணித்து விட்டு பள்ளி தலைமை ஆசிரியர்களைக் கொடியேற்ற செய்வது என்பது, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் இடையே பெரும் கலவரத்தையும், கசப்புணர்வையும் உருவாக்குகிற செயலாகவே நாங்கள் கருதினோம்.

நந்தகுமார், பள்ளிக் கல்வி ஆணையர்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் ஒத்துழைப்பு இல்லாமல் நம்மால் கிராமப்புறங்களில் பள்ளிகளைச் சுமூகமாக நடத்திச் செல்வது என்பது சாதாரணமான செயல் அல்ல; தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருடைய உத்தரவுப்படி அனைத்து பள்ளிகளிலும் மக்கள் பிரதிநிதிகள் வரத்தான் செய்வார்கள். தலைமை ஆசிரியர்களை கொடியேற்ற சொல்லித்தான் எங்களுக்கு உத்தரவு வந்துள்ளது என்று தலைமையாசிரியர்கள் அவர்களிடம் தெரிவித்தால் மக்கள் பிரதிநிதிகளுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் இடையே கலவர சூழல் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

Also Read : எடப்பாடிக்கு சாதகமான தீர்ப்பு! என்ன சொல்லியிருக்கிறது ஐகோர்ட்? தீர்ப்பின் விறுவிறு அம்சங்கள்!

இதைத் தடுத்து நிறுத்துவதற்காக எங்களைப் போன்ற மூத்த சங்கத் தலைவர்கள் அனைத்து நிலை தலைமை ஆசிரியர்களுக்கும் உரிமை உறவு வேண்டுகோளாக புலனம் வழியாக பதிவிட்டு இருந்தோம். அந்த பதிவில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் நாம் பள்ளிகளை நடத்த முடியாது. சுதந்திர தினத்தன்று வருகின்ற மக்கள் பிரதிநிதிகளை, பொதுமக்களை இன்முகத்துடன் வரவேற்று மகிழ்ச்சியுடன் அமுதப் பெருவிழா கொண்டாட்டத்தில் பங்கு பெறச் செய்வது பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பாகும் என்று பதிவிட்டு இருந்தோம்.

தமிழ்நாடு முழுவதும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்று கொடியினை ஏற்றி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் கோலாகலமாக அமுதப் பெருவிழாவினைக் கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு பள்ளியில் கொடியேற்றுவதில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில், பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவரை கொடியேற்ற வைத்துள்ளார்கள்.

Also Read : முழுபோதையில் பேருந்தில் தகராறு செய்த 11ம் வகுப்பு மாணவன்! மதுவிலக்குத்துறை அமைச்சரின் மாவட்டத்தில் அவலம்!

சுதந்திர தினத்திற்கு முதல் நாள் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்திற்கு சென்று ஆத்துப்பாக்கம் ஊராட்சியில், பட்டியல் இனத்தைச் சார்ந்த ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம்மாளை சுதந்திர தின கொடியேற்றச் செய்து சமூக நீதியை நிலைநாட்டி உள்ளார்கள்.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், நல்லெண்ண பொது ஆணைக்கு விரோதமாகவும், நமது முதலமைச்சர் தலைமையில் மக்களின் ஆதரவுடன் நடந்து கொண்டிருக்கக் கூடிய பெருமைக்குரிய ஆட்சியில், மக்கள் பிரதிநிதிகளை புறக்கணிப்பதற்கான திட்டத்தினை பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் செய்திருக்கிறார். தமிழ்நாடு அரசின் மாண்பினை சீர்குலைத்துள்ளார்.

Also Read : TET தேர்வு மட்டும் சரி; NEET தேர்வு தவறா? டெட் தேர்வுக்கு விலக்கு பெற தமிழக அரசு முயற்சிக்குமா? வேல்ஸ் பார்வை!

ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்துக்கும், முதலமைச்சர் தலைமையில் நடைபெறக்கூடிய நல்லாட்சியின் மீது, பள்ளிக்கல்வி ஆணையராக நந்தகுமார் பொறுப்பேற்றதில் இருந்து, ஆட்சிக்கு எதிராக வெறுப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறார். ஆகஸ்ட் 1 அன்று முதலமைச்சரை நேரில் சந்தித்த ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் நந்தகுமார் தொடர்பான புகாரினை அளித்துள்ளார்கள்.

தமிழ்நாடு முழுவதும் மக்களின் பிரதிநிதிகளை புறக்கணிப்பதன் மூலம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கக்கூடிய ஊராட்சி மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், நகராட்சி தலைவர்கள் ஆகியோருக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள நல்லாட்சியின் மீது வெறுப்புணர்வை தூண்ட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் நந்தகுமார் செயல்பட்டுள்ளார் என்பது இதன் மூலம் உண்மைத்தன்மை வெளிப்பட்டுள்ளது.

Also Read : அரசுப்பள்ளிகளை சீர்குலைக்க திமுக அரசு திட்டம்! தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் சீமான் கண்டனம்!

பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் மீது முதலமைச்சர் உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்காவிட்டால், அவர் தொடர்ந்து செய்து வரும் அரசு விரோத செயல்களுக்கு வாய்ப்பளித்து விடுவதற்கு அரசே காரணமாக அமைந்து விடக்கூடாது என அஞ்சுகிறோம். தேசத் தந்தை காந்தியடிகள் கண்ட பஞ்சாயத்து ராஜ்யத்திற்கு எதிராக, சுதந்திர தின விழாவில் நந்தகுமார் அனுப்பியுள்ள வாய்மொழி ஆணையின் மீது உடன் உரிய விசாரணை மேற்கொண்டு ஒழுங்கு நடவடிக்கையினை எடுத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மீது நம்பிக்கையை ஏற்படுத்த வேணுமாய் பொது நோக்கு சிந்தனையுடன் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் முதலமைச்சரை பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry